Tuesday, October 26, 2010

வார்த்தை சவால்

words

பரிசல் நடத்தி முடிச்சா மாதிரி இது ஒன்னும் சவால் சிறுகதை போட்டி இல்லை. அகில உலகிலும் ஆணி அடித்து வியாபித்து இருக்கும் நம் நண்பர் வட்டாரம் ஓயாமல் மெயிலில் எதையாவது அணுப்பிக்கொண்டே இருக்கிறது. எழுபது சதவிகிதம் வெட்டி மெயில் தான் பரிமாறிக்கொள்ளப்படுகிறதாம். இந்த அட்ரெசுக்கு மெயில் பண்ணுங்க நான் ஒரு பில்லியன் டாலர் தரேன் போன்ற வெறுப்பேற்றும் ஸ்பாம் மெயில்கள் விடாமல் கொசு மாதிரி நம் இன்பாக்ஸை மொய்த்தாலும் சில நேரம் அபூர்வமாக இது போல அறிவார்ந்த விஷயங்களும் வருகின்றன. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் அதுவும் நம்மை நோக்கி வருகின்றன.  இங்கே கீழ் காணும் வார்த்தைகளை பாருங்கள். இந்த பட்டியலிடப்பட்ட வார்த்தைகள் எல்லாவற்றிக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது. எல்லாம் ஒரு நியதிக்கு உட்பட்டவை.
 
Banana
Dresser
Grammar
Potato
Revive
Uneven
Assess


என்னவென்று கண்டு பிடித்தாயிற்றா? அல்லது நீங்களும் என்னை போலவா. விடை தெரிய வேண்டுமா...











எல்லா வார்த்தைகளிலும்  இரண்டு இரண்டு முறை சில எழுத்துக்கள் வந்திருக்கிறது என்பது உங்களது விடையா. அது இல்லை... என்ன வென்று தெரிய வேண்டுமா? கீழே பாருங்கள்....





எல்லா வார்த்தைகளிலும் முதல் எழுத்தை எடுத்து பின்னால் சேர்த்தால் மீண்டும் அதே வார்த்தையே மிஞ்சும். எப்படி. இப்படி ஒரு அறிவார்ந்த பதிவு போடாமல் என் பிளாக் ஜென்மம் ஈடேறாது அல்லவா. நன்றி.

இதை மெயிலில் அனுப்பிய தோழனுக்கு நன்றி.

பட உதவி: dehats.com
-

45 comments:

  1. கடையை திறந்தவுடன் வந்துட்டேனோ? நல்லா இருந்தது.. விடையை சொல்லாமல் கொஞ்சம் சுத்த விட்டிருந்திங்கன்னா நாங்களே கண்டு
    பிடிச்சிருப்போமில்ல?

    ReplyDelete
  2. One addition to RVS's statement above..
    "after moving the 1st letter at the last, read from right to left to get the 'same' word".

    ReplyDelete
  3. சிந்திக்க வைத்த சிந்தனை சிற்பி தாங்கள். உங்க தளத்திற்கு வந்தால் ஏதாவது வித்தியாசம் இருக்கும் என்று எதிர்பார்ப்போடுதான் வருவேன் RVS. திடேரென்று கர்நாடக இசை ஒலிக்கும். திடீரென்று யானைகள் கூடி நின்று கும்மி அடிக்கும். துப்பாக்கியைத் தூக்கிச் சுடச் சொல்லித்தருவீரகள். திடீரென்று விளையாட்டு என்று எதாவதைப் பதிந்து எங்களை சிந்திக்க வைத்து விடுவீர்கள். இப்படியே பலரசம் தொடரட்டும்.. வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  4. நான் தான் முதல் பின்னூட்டம் இட்டு இருக்கேன். நீண்ட நாளைய ஆசை. ரொம்ப சந்தோஷம்.

    ReplyDelete
  5. dear rvs

    ahhaa me the first

    vadai enakkuthan

    balu vellore

    ReplyDelete
  6. மோகன் அண்ணா. எல்லோரையும் நான் என்னை மாதிரி நினைத்தது தப்புதான். ஜாரி... ஹி ஹி .... ;-)

    ReplyDelete
  7. நன்றி திரு. எல்.கே

    ReplyDelete
  8. dear rvs

    mohanjithan first

    ayyo vadai poche

    balu vellore

    ReplyDelete
  9. தேவைதான் தோசை. ;-) ;-)

    ReplyDelete
  10. நீங்க எப்பவுமே சரி மாதவன். ;-) விடையை சுயமா கண்டுபிடிச்சிட்டீங்களா.... ;-);-)

    ReplyDelete
  11. @ஆதிரா
    இந்தப் பதிவுகள் போலவே நான் இருக்கின்றேன் என்று என்மீது ஏகப்பட்ட புகார். எதையாவது மாற்றி மாற்றி செய்து கொண்டே இருக்கிறேனாம். புத்தி ஒரு இடத்தில நிலையாய் இருக்க மாட்டேன் என்கிறது. நிலையாய் அலையாத புத்தியையும் மனதையும் பட்டினத்தார் "அங்காடி நாய்" என்கிறார். வாழ்த்துக்கு நன்றி. இந்த 'இலக்கிய' பணி இதுபோலவே எப்போதும் தொடரும். பாராட்டுக்கு நன்றி. ;-) ;-)

    ReplyDelete
  12. ஸாரி ஆதிரா... "வட போச்சே...." ;-)

    ReplyDelete
  13. @balutanjore
    ஸாரி ! வடை உங்களுக்கும் இல்லை. ;-)

    ReplyDelete
  14. @balutanjore
    ஹி ஹி ஆமா.. ;-)

    ReplyDelete
  15. //விடையை சுயமா கண்டுபிடிச்சிட்டீங்களா.... ;-);-) //

    No.. but could understand the logic on seeing your answer above. Hence made correction to ur statement.

    ReplyDelete
  16. இப்ப நான் அழுவேன்... அதுக்குள்ள ஐந்து பின்னூட்டங்களா.. ஒரு நாள் எலலா நரிகளின் கண்களையும் கட்டிட்டு வடையைச் சுட்டுடவேண்டியதுதான்.

    ReplyDelete
  17. சூப்பர் !

    தமிழில் விகடகவி மாதிரி நல்லா இருக்கு இந்த பனானாவ எத்தனை உள்ள தள்ளியிருக்கேன் ஒரு தடவை கூட தோணலியே இப்படி!

    ReplyDelete
  18. சூப்பர் அண்ணா!
    மோகன் சார் சொன்னத ரிப்பீட்டிக்கிறேன் :)

    ReplyDelete
  19. @ஆதிரா
    எப்படி? ;-)

    ReplyDelete
  20. @ப்ரியமுடன் வசந்த்
    தேங்க்ஸ். ;-)

    ReplyDelete
  21. @எஸ்.கே
    Thanks ;-)

    ReplyDelete
  22. பாலாஜி அடுத்த முறை இதை செய்யறேன். டோன்ட் வொரி. பீ ஹாப்பி. ;-)

    ReplyDelete
  23. அருமையான விளையாட்டு..உண்மையில் புதுசா இருக்கு.. பாதி படிச்சுட்டு ,விடையை நாமளே கண்டுபிடிக்கணும்னு முயற்சி செய்தேன் .. கிடைக்கவில்லை .. மோகன்ஜி சொன்னமாதிரி ஒரு ரெண்டு நாள் விட்டு விடை போட்டிருந்தால் ..நாங்களூம் கொஞ்சம் மூளையை கசக்கி இருப்போம்.

    ReplyDelete
  24. @r.selvakkumar
    பெரியவங்க எல்லாம் வந்துருக்கீங்க.. அடிக்கடி இப்படி வந்து எட்டி பாருங்க... ;-)

    ReplyDelete
  25. அடுத்த விளையாட்டு நிச்சயமா கண்ணாமூச்சி விளையாட்டு தான் பத்துன்னா........... ;-)

    ReplyDelete
  26. நல்லதொரு வார்த்தை விளையாட்டு. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  27. @வெங்கட் நாகராஜ்

    Thanks ;-)

    ReplyDelete
  28. இதற்காக ஒரு பாராட்டு விழாவே நடத்தலாம் :))

    ReplyDelete
  29. //எல்லா வார்த்தைகளிலும் முதல் எழுத்தை எடுத்து பின்னால் சேர்த்தால் மீண்டும் அதே வார்த்தையே மிஞ்சும்//

    *********

    எப்படி தல இப்படியெல்லாம்.... மேட்டர் படு சூப்பர்...

    அப்படியே இதயும் பாருங்க...

    யச்சச்ச கச்சச்ச
    கச்சச்ச யச்சச்ச

    இத எப்படி திருப்பி, நேரா சொன்னாலும் அர்த்தம் தெரியாது...

    ReplyDelete
  30. @சை.கொ.ப
    நன்றி ;-) எனக்கு ஒரு பரோட்டா போதும்... ;-) ;-) ;-)

    ReplyDelete
  31. @jokkiri
    ரொம்ப நாளா ஆளே காணோமே.. என்னாச்சு... ;-)
    சச்சச்ச சுச்சுச்சு கக்கக்க ... இது எல்லாமே எப்பிடி சொன்னாலும் அர்த்தமே வராது ஆனா திருப்பி சொன்னாலும் அதே மாதிரி சொல்லலாம். வாய் சுளுக்கிக்காம வந்த பாவத்துக்கு அம்பது தடவை சொல்லுங்க.. ;-) ;-) ;-)

    ReplyDelete
  32. அறிவு சார்ந்த விஷயம்
    கொஞ்சம் சுத்தல்ல விட்டிருந்தீங்கன்னா கஷ்டம் தான் என்னைபோன்றோற்கு
    நன்றி

    ReplyDelete
  33. @மனசாட்சியே நண்பன்
    ரூம் போட்டு யோசிக்கணும்ன்னு இல்லை கொஞ்சம் ஆற அமர உட்கார்ந்து யோசிச்சாலே யார் வேணும்ன்னா கண்டு பிடிக்கலாம். ;-) ;-)

    ReplyDelete
  34. அறிவுப்பூர்வமான விளையாட்டு. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  35. @கோவை2தில்லி
    நன்றி ;-) ;-)

    ReplyDelete
  36. interesting illa? naan itha amithabh bachchan-avargaloda blog la padichchaen...

    nice blog u ve here!

    ReplyDelete
  37. Thanks Matangi Mawley. You are also having an astonishing Blog. Excellent!!!

    ReplyDelete