Showing posts with label ஓவியம். Show all posts
Showing posts with label ஓவியம். Show all posts

Tuesday, June 6, 2017

நம்பூதிரி : கோட்டோவிய மன்னன்

படத்தைக் காட்டி இதெது இன்னதென்று ஒரு மணி அதைப் பற்றிய குறு உபன்யாசம் சொல்லி தெளிய வைப்பது ஒரு வகை சித்திரங்கள். அவ்வகைச் சித்திரங்கள் ஆர்ட்ஜீவிகளுக்குப் பார்த்ததும் புரியும். என்னைப் போன்ற அஞ்ஞானிகள் மிரண்டுபோய்.... பேஸ்தடித்த முகத்துடன் காத தூரம் ஓடிக் குட்டிச் சுவரருகே குனிந்து ஒளிந்துகொள்வார்கள். ஆனால் வரைந்த படமே தான் .
யாரென்றும் எந்த இடத்திலென்றும் அறிவித்துக்கொள்வது ஆராதனைக்குரிய ஸ்வயம்பு இனம். ஓவியரின் வித்வத். “அட... இதானே” என்று கண்கொட்டாமல் இரசிக்க ஆரம்பித்துவிடுவோம்
ரேகச்சித்திரங்கள் என்று மலையாள கோட்டோவியங்கள் வகையறாவை வரைவதில் பிரசித்தி பெற்றவர் நம்பூதிரி. சமீபத்திய என்னுடைய கோவை விஜயத்தின் போது சென்ற பத்திரிகையாள ஜாம்பவான் ஒருவர் வீட்டுச் சுவரில் மஹாபாரதம் பல ஃப்ரேமுக்குள் தொங்கியது. என்னுடைய ஆர்ட்டிஸ்ட் ஸ்நேகிதங்கள் சுரேஷ் சீனு, ஸ்ரீதர் ட்ராஃப்கோ, கேரிகேச்சர் சுகுமார்ஜி போன்றவர்கள் இந்த ஓவியத்தின் அனாடமியை விரிவாக அலசலாம்.
ஸ்வர்க்காரோஹண பர்வத்தில் தருமனைத் தொடர்ந்த நாய். மார்பு விரிந்து பெருத்த சரீரமுடைய பீமன். கடைசியாய்ப் பின் தொடரும் நகுல சகதேவர்கள். நடுவில் வரும் திரௌபதி. நெளி நெளியானக் கோடுகளில் காட்சியை கண் முன்னே கொண்டு வரும் கலை.
பல நூற்றாண்டுகளுக்குச் செல்லுபடியாகும் ஒரு சித்திரம்.

Monday, July 12, 2010

விடுதலைச் சுரங்கம்

நெட்வலம் வருகையில் கிடைத்த மற்றுமொரு சுவாரஸ்யமான வீடியோ. பாதாள ரயில் பாதையில் வாழ்ந்த வாழ்க்கை பற்றியது. 1930களில் ரோபர்ட் மோசேஸ் என்பவரால் அமெரிக்க பாதாள ரயில் அம்ட்ராக் (Amtrak) திட்டப்பணிக்காக நியூயார்க்கின் மான்ஹட்டன் நகரில் தோண்டப்பட்ட சுரங்கப்பாதையானது ஓரிரு வருடங்களில் அந்த ரயில் திட்டம் கைவிடப்பட்டவுடன் அந்தப் பகுதியின் குப்பை கூளங்களின் வசமாயிற்று. அதுவே சில காலங்களில் வீடற்ற மற்றும் திக்கற்றவர்களுக்கு வசிப்பிடமாயிற்று.
freedomtunnel
அப்படி இருந்த இடத்தில், சேற்றில் முளைத்த செந்தாமரையாக சுவர் சித்திரங்களை தீட்டும் வல்லவரான க்றிஸ் பேப் இங்குதான் பல அற்புதமான ஓவியங்களை வரைந்துள்ளார். மைக்கல் அன்ஜெலோவின் ஆதமுக்கு இறைவன் உயிர் கொடுக்கும் ஓவியம் போன்றவைகளுக்கு இவரின் தனித்துவமான விளக்கப்படங்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ஒன்று. ஸ்ப்ரே குடுவை தலை கொண்ட இவரது ஓவியம் சிறப்பான ஒன்று. இவரது பட்டப் பெயர் ஃப்ரீடம் (Freedom). தமிழில் சுதந்திரம்னு சொல்றதா இல்லை விடுதலைன்னு சொல்றதான்னு தெரியவில்லை. சரி பரவாயில்லை ஃப்ரீயா விடுவோம். மேட்டருக்கு வருவோம். மேலே ஓடும் தண்டவாளங்களில் இடையில்  கீழே சிந்திச் சிதறும் ஒளியில் இவர் தீட்டிய பல சித்திரங்கள் நம்மை சுரங்கப்பாதையை விட்டு வெளியே செல்ல விடாமல் அங்கேயே கட்டிப்போடும் தன்மையுடையவை. இந்த சுதந்திர சுரங்கப்பாதையின் ஒரு வீடியோ காட்சிதான் கீழே நீங்கள் பார்ப்பது.

இந்த வீடியோவும் அந்தப் பின்னணி இசையும் அந்த ஏகாந்தமான இடமும், அவ்வப்போது செல்லும் ரயிலும், பல காலம் தொட்டு அழியாத சுவர் சித்திரங்களும் நம்மை நிஜமாகவே அதனடியில் வாழ்ந்த அந்த ஓவிய மேதையிடம் இட்டுச்செல்கிறது. இதற்க்கு பயன்படுத்திய பின்னணி இசையின் சொந்தக்காராரின் இருப்பிடம் www.zenzile.com. இந்த வீடியோவையும் படத்தையும் இசையையும் அக்கக்காக எடுத்து நம் பார்வைக்கு தொடுத்துக் கொடுத்தவர் முகவரி இதோ charleslebrigand.blogspot.com/. இதை எடுத்திருக்கும் மேற்படி சொந்தக்காரர் நம்ம சந்தோஷ் சிவன் கேமரா சாயலில் எடுத்திருப்பதாக எனக்குப்பட்டது. வீடியோவின் பின்னணி இசையில் அவ்வப்போது ரயில் கூவுவது போல வரும் ஒரு இசையின் கோர்ப்பில் யாசிப்பவர்களின் குடியில் இருக்கும் அந்தச் சோகமும் கலந்து வருவது தான் இதன் ஹிட் என்பது என் கருத்து. வீடியோ முழுக்க எங்கேயோ நம்ம ராஜாவின் இசை ஒலிப்பது போல இருப்பது எனது பிரமையா? அல்லது நிஜமா?

Friday, July 9, 2010

காலம் பேசும் சுவரோவியங்கள்

மிக்கேல் அஞ்சேலோ, டாவின்சி போன்ற அதீத திறமை படைத்த மேலை நாட்டு ஓவிய அறிஞர்களும், பூ வரைந்தால் வாசமும், தீ வரைந்தால் நம்மை தீண்டும் அளவிற்கு அளப்பரிய உயிரோவியங்கள் பல வரைந்த நம் தேசத்து ஓவியர்களான ராஜா ரவிவர்மா தொடங்கி மணியம் செல்வம், சில்பி, ஆதிமூலம், மருது போன்றோரும் தூரிகை கொண்டு தீட்டிக் காட்டிய ஓவியங்களை கணினியின் துணைகொண்டு பிங் பாங் கோட்பாட்டிலிருந்து ஆரம்பித்து பரிணாம வளர்ச்சியினை சுவற்றுச் சித்திரங்களாக வரைந்து தள்ளி கணினியில் உள்ளே கொடுத்து அட்டகாசமான அனிமேஷன் கிராபிக்ஸ்  செய்து வெளியே எடுத்து படம் ஒன்று தயாரித்திருக்கிறார்கள். மச்ச, கூர்ம அவதாரங்கள் கூட அதில் இடம்பெற்றிருக்கின்றன. அதிலும் நடந்து செல்லும் ஒரு நங்கை சுவரில் தோன்றும் டினோசரை பார்த்து அலறி அடித்து ஓடுவதும், குரங்கிலிருந்து பரிணாம ப்ரமோஷன் பெற்ற மனிதன் துப்பாக்கி மற்றும் ஏவுகணை கொண்டு ஒருவரைஒருவர் தாக்கிக் கொல்வதும் அடடா... காண்பதர்க்கரிய கிராபிக்ஸ் அனிமேஷன் கலக்கல்.




மாடர்ன் ஆர்ட் ஓவியங்களை "நீ படைப்பாளி.. நான் துடைப்பாளி " என்று எச்சை துப்பி "காதலா.. காதலா" கமல்ஹாசன் துடைக்கும் ஓவியங்களும், பலகோடி மக்கள் துதித்து வணங்கும் தெய்வத் திருவுருவங்களை ஆடை இல்லாமல் வரைந்து அசிங்கப்படுத்தும் எம்.எப். ஹுசைன், "தளபதி", "அம்மா", "ஐயா", "அப்பா" என்று பலரும் பல இடங்களுக்கு அழைப்பதாக சுவர்கள் அனைத்திலும் வரைந்து வருகவென்று அழைக்கும் ஓவியக்காரர்களும், ஆஞ்சநேயர், மதர் தெரசா சித்திரங்களை நடைபாதையில் வரைந்து காசு பொறுக்கும் நடுத்தெரு நாயகர்களும் இப்பதிவு எழுதும் போது ஏனோ மனதில் வந்து வந்து மறைந்தனர்.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails