Showing posts with label நம்பூதிரி. Show all posts
Showing posts with label நம்பூதிரி. Show all posts

Tuesday, June 6, 2017

நம்பூதிரி : கோட்டோவிய மன்னன்

படத்தைக் காட்டி இதெது இன்னதென்று ஒரு மணி அதைப் பற்றிய குறு உபன்யாசம் சொல்லி தெளிய வைப்பது ஒரு வகை சித்திரங்கள். அவ்வகைச் சித்திரங்கள் ஆர்ட்ஜீவிகளுக்குப் பார்த்ததும் புரியும். என்னைப் போன்ற அஞ்ஞானிகள் மிரண்டுபோய்.... பேஸ்தடித்த முகத்துடன் காத தூரம் ஓடிக் குட்டிச் சுவரருகே குனிந்து ஒளிந்துகொள்வார்கள். ஆனால் வரைந்த படமே தான் .
யாரென்றும் எந்த இடத்திலென்றும் அறிவித்துக்கொள்வது ஆராதனைக்குரிய ஸ்வயம்பு இனம். ஓவியரின் வித்வத். “அட... இதானே” என்று கண்கொட்டாமல் இரசிக்க ஆரம்பித்துவிடுவோம்
ரேகச்சித்திரங்கள் என்று மலையாள கோட்டோவியங்கள் வகையறாவை வரைவதில் பிரசித்தி பெற்றவர் நம்பூதிரி. சமீபத்திய என்னுடைய கோவை விஜயத்தின் போது சென்ற பத்திரிகையாள ஜாம்பவான் ஒருவர் வீட்டுச் சுவரில் மஹாபாரதம் பல ஃப்ரேமுக்குள் தொங்கியது. என்னுடைய ஆர்ட்டிஸ்ட் ஸ்நேகிதங்கள் சுரேஷ் சீனு, ஸ்ரீதர் ட்ராஃப்கோ, கேரிகேச்சர் சுகுமார்ஜி போன்றவர்கள் இந்த ஓவியத்தின் அனாடமியை விரிவாக அலசலாம்.
ஸ்வர்க்காரோஹண பர்வத்தில் தருமனைத் தொடர்ந்த நாய். மார்பு விரிந்து பெருத்த சரீரமுடைய பீமன். கடைசியாய்ப் பின் தொடரும் நகுல சகதேவர்கள். நடுவில் வரும் திரௌபதி. நெளி நெளியானக் கோடுகளில் காட்சியை கண் முன்னே கொண்டு வரும் கலை.
பல நூற்றாண்டுகளுக்குச் செல்லுபடியாகும் ஒரு சித்திரம்.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails