Tuesday, June 29, 2010

கட்டை விரலின் மூன்று மடங்கு?

வாயிலிருந்து உணவு வயிற்றுக்கு செல்ல எடுத்துக்கொள்ளும் நேரம் ஏழு வினாடிகள்.

மனித முடி மூன்று கிலோ எடைவரை தாங்கும் சக்தி கொண்டது.

ஆண்களின் மெயின் சுவிட்ச் கட்டை விரலின் மூன்று மடங்காக இருக்கும்.

தொடை எலும்புகள் கான்க்ரீட் அளவிற்கு கடினமானவை.

பெண்களின் இதயம் ஆண்களின் இதயத்தைவிட வேகமாக துடிக்கும்.

ஆண்கள் பத்து முறை கண் இமைத்தால் அதே நேரத்தில் பெண்கள் இருபது முறை இமைக்கிறார்கள்.

நாம் நன்றாக நிற்பதற்கு 300 தசைகளை உபயோகிக்கிறோம்.

மேற்கண்ட விஷயங்கள் அனைத்தையும் மகளிர் படித்து முடித்துவிட்டனர்.
ஆண்கள் இன்னமும் கட்டை விரலையே பார்த்துக் கொண்டிருகின்றனர்.
 
இந்த மனித உடற்க்கூறுகளின் அளப்பரிய ஆதாரம் அனைத்தும் படமாக கீழே உள்ள சுட்டியில் (இதை சனிக்கிழமை சங்கதிக்கு உபயோகித்திருக்கலாமோ??? )


பட உதவி: http://icanread.tumblr.com/post/721431440

செம்மொழிக்கோவை

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை சிறப்பிக்க சமீபத்தில் வெளிவந்த தினமணியின் செம்மொழிக்கோவை தமிழர்கள், அவர்களின் பாரம்பரிய விளையாட்டுகள், வணிகம், சைவம், வைணவம் மற்றும் ஜைனம் வளர்த்த தமிழ், தமிழ் நூல்கள், தமிழ் வளர்ச்சியில் நாவல்கள் (சுஜாதாவின் படத்தை பிரசுரித்து அவரைப் பற்றி ப்ரஸ்தாபிக்காதது கொஞ்சம் வருத்தமே), ஈழமும் தமிழும், தமிழர் ஓவியங்கள், தமிழிசை, வானொலி மூலமாக உலகும் முழுவதும் கேட்கும் தமிழ், மேடைத் தமிழ், இயற்றமிழ், இணையத்தமிழ், தெருக்கூத்து, கி. ராவின் பேச்சுநடை, தமிழர்களின் கட்டிடக்கலை என்று பல அறிய தகவல்களை உள்ளடக்கியதாக இருந்தது. விலை ரூ.200

அப்புத்தக பொக்கிஷத்திலிருந்து சில "மணி"கள்...

ஒன்று: ஆறு, ஏரி, குளம், கடல், ஊற்று, அருவி, கிணறு போன்றவை நாம் அறிந்த நீர் நிலைப் பெயர்கள். ஆனால், மொத்தம் ஐம்பது வகையான நீர் நிலைகளை "கம்பன் அடிப்பொடிக் கலைக் களஞ்சியம்" பட்டியலிட்டுள்ளது. அவற்றில் சில சுவையானவை..

இலஞ்சி - பல்வகைக்கும் பயன்படும் நீர்த்தேக்கம்
குண்டு - குளிப்பதர்கேற்ற ஒரு சிறு குளம்
கூவம் - ஊர் ஒழிங்கிலமையாத கிணறு
கூவல் - ஆழமற்ற, கிணறு போன்ற ஒரு பள்ளம்
சேங்கை - பாசிக்கொடி மண்டிய குளம்
பிள்ளைக்கிணறு - குளம், ஏரியின் நடுவில் அமைந்த கிணறு 
நீராவி - மையா மண்டபத்துடன் கூடிய பெருங்குளம்

இரண்டு: சங்க கால மகளிரின் விளையாட்டுகளாக கழங்காடுதல், ஊஞ்சலாடுதல், புலி புலி என்று கூவியவாறு வேங்கை மரத்தின் பூவைப் பறித்தல், வண்டல் மண்ணினால் சிறு வீடு கட்டி விளையாடும் பெண்கள் அதில் பாவை ஒன்றின் உருவத்தை வைத்து விளையாடி அப்பாவைக்கு பூவைப் பறித்து அணிவித்து மகிழ்ந்தார்கள்.


கவறு என்றழைக்கப்பட்ட கைகளை வைத்து விளையாடும் ஒருவகை சூதாட்டம் வழக்கத்தில் இருந்து வந்துள்ளது. கவிஞர் ஒருவரும் மன்னன் ஒருவரும் ஒன்றாக அமர்ந்து சூதாடியபோது கவிஞர் ஆட்டத்தில் கள்ளத்தனம் செய்து விட, கோபம் கொண்ட மன்னன் சூதாடும் கருவியை கவிஞரின் நெற்றியில் எறிந்த நிகழ்ச்சியை "புறநானூ"ற்றுப் பாடல் ஒன்று பதிவு செய்துள்ளது. சூதாடுவதர்கேன்றே சில அமைப்புகள் இருந்துள்ளன. இதைக் கழகம் என்றழைத்தனர்.
மேற்கூறிய தகவல்களை, சங்ககாலத் தமிழகத்தில் விளையாட்டு என்ற தலைப்பில் திரு. ஆ.சிவசுப்ரமணியனின் கட்டுரை இது.

மூன்று: தமிழ் நிகண்டுகள் என்ற தலைப்பில் முனைவர் திரு. ச.வே. சுப்ரமணியன் அவர்களின் கட்டுரையில் நாம் தமிழ் வார்த்தைகள் என்று நினைத்திருந்த பலவற்றை அயல்தேசத்து பாஷையின் வார்த்தைகள் என்று சில ஆராய்ச்சிகளின் முடிவில் ஆணித்தரமாக கூறுகிறார்.  நிகண்டு என்றால் அகராதி. தொல்காப்பியத்தில் அடிச்சொற்களாக  3,128 சொற்கள் மட்டுமே இருந்ததாகவும் அது சங்க இலக்கிய காலத்தில் 10,000 வரை இருக்கலாம் என்றும் 20 -ம் நூற்றாண்டில் சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள தமிழ்ப் பேரகராதி 1,24,425 சொற்களை உள்ளடக்கியது என்று குறிப்பிடுகிறார். இதனால் தான் அக்காலத்தில் ஒரே சொல் பல பொருட்களை தரும்படி அமைத்தார்கள். சுத்த தமிழில் பேசுவோம், பாட்டு எழுதுவோம் என்றெல்லாம் பலர் ஜல்லியட்டிக்கும் போது இவர் கொடுத்த லிஸ்ட் சற்று கண்ணுயரவைக்கிறது. வடநாட்டு சுல்தான்கள் ஆண்ட போது உருது, பாரசீகம், இந்துஸ்தானி சொற்களும், தெலுங்கர்கள் ஆண்ட போது தெலுங்கும் தமிழில் மிகுதியாக கலந்தன என்று குறிப்பிடும் அவர் எழுதிய அந்தக் கட்டுரையில் இருந்து ஒரு சில..

தெலுங்கு சொற்கள்: அட்டிகை, இலாடம், இராணுவம், ஒட்டியாணம் கலவரம், நிம்மதி, பித்ததலாட்டம்
உருது சொற்கள்: அசல், அபின், ஆசாமி, கலாட்டா, காராபூந்தி, கூஜா, சீனி, டப்பா, ஜரிகை.
அரபுச் சொற்கள்: அல்வா, அமல், மசோதா, வாரிசு, வசூல், நகல், பாலம், மராமத்து 
ஹிந்துஸ்த்தானி சொற்கள்: ஜிலேபி, ஹர்த்தால், முண்டாசு 
பாரசீகச் சொற்கள்: சாமான், சராசரி, சவுக்கு சிப்பாய், ஜவன், பைசா, லுங்கி.
போர்த்துகீசியச் சொற்கள்: ஆயா, ஏலம், கடுதாசி, சாவி, மேசை, மேஸ்திரி 
பிரஞ்சுச் சொற்கள்:   அபேஸ், சாம்பிராணி, தம்பூரா
ஆங்கிலச் சொற்கள்: அப்பீல், அலாரம், பாட்டில்

நான்கு: மொழி என்பது எழுத்தா? பேச்சா? என்ற நெல்லை சு.முத்துவின் கட்டுரை அருமையிலும் அருமை. மீன்கள் முதல் முதலைகள் வரை - மனிதர்கள் இனத்திலும் ஃபாக்ஸ்பி2 (FOXP2) என்ற மரபணுதான் மொழியறிவுக்கு பொறுப்பு வகிக்கிறதாம். ஆனால் இந்த ஃபாக்ஸ்பி2  மாறாமல் இருந்தால் மரமும், கிளைகளும் தாவும் நம் மூதாதையர் போல் நாமும் பேசாமல் இருந்திருப்போம் என்கிறார்.

அப்பாடி! இப்படியாக உலகத் தமிழ் மாநாடு கண்ட செம்மொழியாம் தமிழ்மொழிக்கு நானும் ஒரு சிறு  தொண்டாற்றிவிட்டேன். 
செந்தமிழும் நாப்பழக்கம். இன்னும் கொஞ்ச காலத்தில் "ழ" என்ற அழகே தமிழுக்கு மறைந்துவிடும் அபாயம் உள்ளது. ஆகையால் இனிமேலாவது நாக்கையும் வாயையும் நற்றமிழுக்காக உபயோகித்து உச்சரிக்க இயலாதோர் மொழியிலிருக்கும் வால்க தமிள் வாழ்க தமிழாகட்டும்.
படம்: தமிழன்னை
பட உதவி: http://www.tamildesam.org/

Monday, June 28, 2010

அடங்கும் அறைகலன்கள்

இத்தாலி நாட்டின்  (ஆமாங்க அன்னை சோனியா காந்தி ஊருதான்) ரிசோர்ஸ் பர்னிச்சர்ஸ் (அறைகலன்கள்) என்ற நிறுவனம் இரண்டு படுக்கை குடியிருப்பில் இருபது பேர் வசிப்பதற்கான வழிமுறைகளை டேபிள், கட்டில், சேர் முதலியவற்றை நீட்டி, மடக்கி நிமிர்த்தி, சாய்த்து உபயோகிக்க வடிவமைத்துள்ளது.  ஒரே இடத்தில் கால் நீட்டி படுக்க, மடக்கி உட்கார்ந்து படிக்க, சாப்பிட என்று சர்வ காரியங்களையும் செய்வதற்கு ஏதுவாக அறைகலன் வடிவமைப்பு செய்துள்ளது. கீழ்காணும் வீடியோ காட்சியில் அந்த நிறுவனத்தின் ப்ரிசிடென்ட் ரோன் பார்த் வீட்டின் அறைகள் முழுவதும் சுவரோரத்தில் இருக்கும் எததையோ சாய்த்து, மடக்கி கட்டில் போட்டுக் காண்பிக்கிறார்.  எல்லா அறைகளையும் படுக்கையறை ஆக்குகிறார். அவர் கூட டெமோ காண்பிக்கும் அந்த பாண்டியராஜன் பட ஏலம் விடும் அம்மணி கட்டில் சேர்களை அலுங்காமல் குலுங்காமல் உட்கார்ந்து எழுந்து அசால்ட்டாக மடக்கி நிமிர்த்தி போடுகிறார். வசிக்கும் குடியிருப்பில் இரண்டாவது படுக்கையறை சிறியதாக இருக்கிறது என்று அங்கலாய்த்துக் கொண்டவர்கள் இப்போது தங்களது இரு பிள்ளைகளையும் மிகச் சௌகரியமாக கட்டிலில் போட்டு "ஆராரோ.. ஆரிராரோ" பாடுகிறார்கள் என்கிறார் பார்த். ஒவ்வொன்றின் வடிவமைப்பும் மிகவும் வித்தியாசமாக இருக்கிறது.  பாருங்கள்...





இந்த மாதிரி செட்டப்பை பார்க்கும்போது இன்கம்டாக்ஸை ஏமாற்றி சொத்து சேர்த்திருக்கும் அனைவரும் இதை வாங்கி கீழே சி.டி, ஆவணங்கள் போன்ற அனைத்தையும் அடுக்கிவிடுவார்கள் போலிருக்கிறது. இந்தியா மாதிரி நாடுகளில் ஏக கிராக்கி இருக்கும் விற்பனை பொருளாக பிரகாசமான வாய்ப்புள்ள பொருள் இது.
 
அதுசரி நம்மூர்களில் வீடுதோறும் பரண்களில் வண்டிவண்டியாக லோடு ஏற்றி வைத்திருக்கிறார்களே அதையெல்லாம் என்ன செய்வது?

வாம்மா துரையம்மா

கொஞ்சி கொஞ்சி "பருவாயில்லை" என்று பாடிய உதித் நாராயண், ஏ.ஆர்.ரஹ்மானின் மருமான் ஜீ.வீ.பிரகாஷின் இசையில் மதாராஸப்பட்டினம் படத்தில் பாடிய இந்த "வாம்மா துரையம்மா..." பாடல் காலையில் கேட்கபோது  இன்ட்ரெஸ்ட்டிங்கா இருந்தது. பாட்டில் நடு நடுவே இறந்துபோன மலையாள நடிகர் வி.எம்.சி. ஹனிபாவின் துபாஷ் வேலை பற்பசை விளம்பரத்தில் பல் காட்டி சிரிக்கும்படி ரசிக்கும்படியா உள்ளது..
madarasappattinam

நா.முத்துக்குமார் கைவண்ணத்தில் காலனியாதிக்க நேரத்தில் நம் தமிழ் கலாச்சாரத்தை துரையம்மாவிடம் படம்பிடிக்கும் பாடல்....

வாம்மா துரையம்மா
—ஹ்ம்ம்? கம்மான் வைட் லேடி
இது வங்கக் கரையம்மா
—வாட்? பாட்ராரம் சிங்கிங்.

வணக்கம் சொல்லித்தான் வரவேற்கும் ஊரம்மா 
— we welcome with vanakam
— Ohhh vanakkam
கட்டவண்டியிலும் போவோம், ட்ராமில் ஏறியும் போவோம் 
கூவம் படகிலும் போவோம், போலாமா...
மகுடி ஊதிட பாம்பு ஆடுதே யம்மா...
–Snake Dance
யானை தும்பிக்கை ஆசிர்வாதங்கள் யம்மா...
–Elephant hands

மேலே கோடு போட்டு ஆரம்பித்த வரிகள் ஹனிபா உடையது... பாடல் இப்படியே போகுது.. கீழே ப்ளே அழுத்தி கேட்கவும்..



Sunday, June 27, 2010

சனிக்கிழமை சங்கதி - உமிழ்நீர் உலை நீராவது எப்போது?

தவிர்க்க இயலாத காரணங்களால் இப்பகுதி ஒருநாள் தாமதமாக வெளியாகிறது.

திரிலோக சஞ்சாரியான நாரதர் போல நாமும் வானவீதியில் ஹாயாக பறக்க முடியுமா? இந்த கேள்விக்கான விடையை அமெரிக்க விண்வெளி நிறுவனம் NASA ஒரு கேள்விக்கான பதிலாக வெளியிட்டுள்ளது.  விண்வெளியில் அதற்க்கான ஹெல்மெட், ஜாக்கெட் போன்ற ஆடை அணிகலன்கள் இல்லாமல் எவ்வளவு நேரம் உயிர்வாழலாம் என்ற கேள்விக்கு, சுவாசத்தை அடக்கவில்லை என்றால் ஒன்றிரண்டு நிமிட நேரத்தில் உயிர் பிரிய வாய்ப்பிருக்கிறது என்று தெரிவிக்கிறார்கள். முதல் பத்து நொடிகளுக்குள் உடலெங்கும் "முண்டு முடிச்சுகள்" போன்று உருவாகும் ( தசைகள் மற்றும் அதனடியில் உள்ள திசுக்களினால்). சற்று நேரத்தில் ஆக்சிஜென் குறைப்பாட்டால் நினைவிழக்கும். அப்புறம் எருமை மீதேறி வரும் எமன் பாசக்கயிற்றை வீசி உங்களை "வா வா"  என்றழைப்பது உங்களுக்கே நிதர்சனமாக தெரியும் என்கிறார்கள்.

தசைகளின் வெப்பம் காக்கும் தன்மையினாலும், ரத்தத்தின்  இடைவிடாத சுழற்ச்சியினாலும் உடலில் ரத்தம் உடனடியாக கொதிப்படைந்து நாம் வெடித்துவிட மாட்டோம். அதேபோல வான்வெளியில் உள்ள மிக குளிர்ச்சியான சீதோஷ்ணத்தால் உடலில் உள்ள வெப்பம் அவ்வளவு சீக்கிரம் வெளியாக முடியாதலால் உடனடியாக நாம் உறைந்துவிடவும் மாட்டோம்.

விண்வெளியில் அதிக சிரமும், உயிரையும் பயணம் வைத்து செல்வோரை, நாம் விண்வெளி வீரர்கள் என்போம், ஆனால் ஆராய்ச்சி கூடத்தில் அவர்களை 'சப்ஜெக்ட்' என்பார்கள். 1965 ம் வருடம் Joe Kittinger என்ற 'சப்ஜெக்ட்' தனக்கு ஏற்ப்பட்ட அனுபவத்தை சொல்கையில், தனக்கு பதினான்கு நொடிகள் நினைவு இருந்ததாக சொல்லியிருக்கிறது. இந்த பதினான்கு நொடிகள் வரை நுரையீரலிலிருந்து மூளைக்கு ரத்தம் சென்றுகொண்டிருக்கும்.  அடுத்த முப்பது நொடிகளுக்குள் மீண்டும் காற்றுப்பைக்குள் ஆக்சிஜெனை நிரப்பி சப்ஜெக்ட்க்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள். உயிரோடு பூலோகம் வந்தடைந்த சப்ஜெக்ட்டிடம் "எப்படீப்பா இருந்தது" என்று குசலம் விசாரிக்கையில், தனக்கு காற்றுக் கசிவு மிகத்தெளிவாக கேட்டதாகவும், உணர்ந்ததாகவும் சொல்லிவிட்டு கடைசியாக நினைவு தப்பிப் போகையில், நாவில் சுரந்த நீர் அடுப்பில் உலை கொதிப்பது போல் சூடாக இருந்ததாக சொல்லிற்றாம்!!!

பட உதவி: http://www.ballardian.com
தொடர்புடைய சுட்டி: http://imagine.gsfc.nasa.gov/docs/ask_astro/answers/970603.html

Friday, June 25, 2010

க.மு. க.பி.

தலைப்பு கொஞ்சம் வித்தியாசமா இருக்கா?

கீழே உள்ள படத்தில் கண்ணாடிக்கு முன் கண்ணாடிக்கு பின் ஒருவருடைய பர்சனாலிடி அடையும் மாற்றத்தை அட்டகாசமாக சித்தரித்திருக்கிறார்கள்...

kamu kapi

கடிகாரச் சுற்றுப் பிரகாரம்:

க.மு: லாரி டிரைவர் ராஜாக்கண்ணு
க.பி:  பேராசிரியர் பெத்தண்ணா .

க.மு:  ஜாலி ஜலஜா
க.பி:  சீரியஸ் ஷில்பா 

க.மு:  கடாவெட்டி கந்தசாமி
க.பி: ஆர்டிஸ்ட் அப்பாசாமி

க.மு: அடியாள் ஆறுமுகம்
க.பி: ஆடை ஆல்பர்ட்டு


பட உதவி: http://images.wildammo.com/2010/06/12/oh-the-difference-glasses-can-make/

Thursday, June 24, 2010

பா.ஜ.க பேந்த்தர்ஸ், காங்கிரஸ் கோப்ராஸ், சி.பி.ஐ. கேடர்ஸ்.....

இமெயிலில் நண்பர் மாதவன் மூலமாக வந்தது இது. ஐ.பி.எல்லை நாட்டுடமை ஆக்கினால் என்னென்ன அற்புதங்கள் நிகழும் என்று கற்பனையாக கீழ்காணும் 21 கருத்துக்களை கலாயலாக சொல்லியிருக்கிறார்கள். ஆங்கிலத்தில் வந்த மின்னஞ்சலின்  தமிழ்ப் படிவம் கீழே....அடியில் சிரித்துக்கொண்டு போஸ் கொடுப்பவர்கள் போட்டியின் போது கண்களுக்கு விருந்தளித்து உற்சாகப்படுத்தும் ஐ.பி.எல் நடன மங்கையர்கள்...ஒரு நினைவுகூர்தலுக்காக.....

IPL cheerleaders


1. லலித் மோடியை வீட்டுக்கு அனுப்பும் புதிய ஐ.பி.எல் ஆணையர் 1989-ம் வருஷத்தில் ஐ.ஏ.எஸ் தேறிய அதிகாரியாக இருப்பார். அவர் நிச்சயம் எப்.சி.ஐ போன்ற பொதுத்துறை நிறுவனத்திலிருந்து மாற்றலாகியிருப்பார்.  கிரிக்கெட்டில் எவ்வளவு கோல் போடுவார்கள் என்று கேட்பார்.

2. புது ஆள் திருவாளர் தலித் மோடி தன்னுடைய ஆளாக இருக்க வேண்டும் என்பார் மாயாவதி. இல்லையேல் மத்தியில் ஆதரவு வாபஸ்.


3. பூர்வாங்கமாக மும்பை இந்தியன் என்ற பெயரை மும்பை மன்னர்கள் என்று மாற்றுவார்கள். மகாராஷ்டிரா மக்கள் மட்டுமே களமிறக்கப்படுவர் (அதிமுக்கியமாக மகாராஷ்டிரா பிராமணர்கள்). மகாராஷ்ட்ரம் அல்லாதோருக்கு போட்டிக்கு முன் கால் முறிந்துவிடும். ஜாகிர் கான், இர்பான் பதான், முஹம்மது கைப் போன்றோரது வீடுகளுக்கு தீ வைக்கப்படும். பால் தாக்கரே பிட்ச் நோண்டாமல் இருப்பார்.

4. சென்னை சூப்பர் கிங்க்ஸ் திராவிட கிரிக்கெட் கழகமாக மாற்றியமைக்கப்படும். நிச்சயம் குறைந்த கால அவகாசத்திலேயே பிளவு ஏற்பட்டு DCK (DMK) மற்றும் AIADCK (AIADMK) என்று கருணாநிதி மற்றும் ஜெயலலிதா அணியாக பிரிந்து நிற்கும். கூட்டணி கட்சிகள் கதி என்ன ஆகும்? Substitute ஆட்களாக இருப்பார்களா?

5. காங்கிரஸ் கோப்ராஸ்,  பா.ஜ.க பேந்த்தர்ஸ், சி.பி.ஐ. கேடர்ஸ், சமாஜ்வாடி ஸ்ட்ரைக்கர்ஸ், சி.பி.எம் சாலன்ஜெர்ஸ், திரினாமூல் டைகர்ஸ் என்று ஒவ்வொரு அரசியல் கட்சியும் அவர்களுக்கென்று ஒரு அணி வைத்திருப்பர். அடி ஆட்களுக்கு பதில் மைதானத்தில் மட்டும் மட்டை பிடித்து அடித்து ஆடும் ஆட்கள் வைத்திருப்பார்கள்.

6. அணிக்கு விளையாட்டு வீரர்களை ஏலம் எடுப்பதை விடுத்து, அனைவரிடமிருந்தும் டெண்டர் கோரப்படும். எவர் அடிமாட்டு விலைக்கு போகிறாரோ அவரே போட்டியில் பங்கேற்ப்பார். சீல் வைக்காத டெண்டர்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. காலையில் டெண்டர் அறிவித்து மாலையில் வாங்குவது நிறுத்தப்படும்.

7. மகிழ்ச்சியூட்டும் ஜிலுஜிலு ஆடை ஆட்ட மங்கையர் வெளியேற்றப்பட்டு மாண்புமிகுக்கள் அந்த இடைப்பட்ட நேரங்களை தங்கள் ஊக்கமூட்டும் சொற்பொழிவால் நிரப்புவார்கள். உணர்ச்சியூட்டும் எழுச்சி பிரசங்கத்தால் நாலு அடிப்பவர்கள் ஆறு அடிப்பார்களா? நாலு ஆறு என்பது மொத்த ஓட்டங்கள்.

8. சோனியா காந்தி முப்பது சதவீத இடங்களை எல்லா அணியும் பெண்களுக்காக ஒதுக்க வேண்டும் என்று வற்புறுத்துவார். டென்னிஸில் "மிக்ஸட் டபுள்ஸ்"  போல "மிக்ஸட் லவன்" அணி உருவாகும் போல.

9. சமூகத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஒடுக்கப்பட்டோர் மைதானத்தில் ரன் எடுக்க எல்லோரும் ஓடும் 22 யார்டுக்கு பதிலாக 18 யார்ட்கள் தான் ஓடுவார்கள் என்று மாயாவதி வீதியில் நின்று குரல் கொடுப்பார். இப்படி ஜாதி மத வித்தியாசம் பார்க்காமல் யாரால் பாண்டி ஆடக் கூட நொண்டி நொண்டி ஓட முடியாதோ அவர்களுக்கு அந்தச் சலுகை வழங்கவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் அமளியில் ஈடுபடுவர்.

10. மூன்றாவது நடுவருக்கு அனுப்பப்படும் முறையீடுகள் இரண்டு கார்பன் தாள்கள் நகலும் ஒரு அசலும் சேர்ந்து மூன்று படிகள் நிரப்பி சட்ட ரீதியாக சத்தியப் பிரமாணம் செய்த சட்ட அதிகாரியால் கையெழுத்திட்டு அங்கீகரிக்கப் படவேண்டும். கையெழுத்துக்கு எவ்வளவு 'சி'?

11. மூன்றாவது நடுவர்களின் தீர்ப்பு இணை நாடாளுமன்றக் குழுவின் முடிவுக்கு உட்பட்டது. பொதுவாக ஆளுங்கட்சியின் முடிவே இறுதியானது. தேவைப்பட்டால் சி.பி.ஐ விசாரணைக்கு அனுப்பப்படும்.

12. இதுமுதல் ஐ.பி.எல் டிக்கெட்டுகள் எல்லா அஞ்சலகம் மற்றும் பி.எஸ்.என்.எல் அலுவலகங்களில் காலை 10 மணி முதல் மதியம் 12:45 மணி வரை பொதுமக்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்படும். 10:30 மணியிலிருந்து 11:30 மணி வரை தேநீர் இடைவேளையின் போது டிக்கெட் வழங்கப்பட மாட்டாது.

13. கை காலில் அடிபட்டு ஆட முடியால் இருக்கும் அயல் நாட்டு வீரருக்கு பதிலாக மாற்று ஆள் விளையாட அனுமதிப்பதற்கு அரசு மருத்துவர் பார்த்த 48 மணிநேரத்திற்கு பிறகு தட்கல் விண்ணப்பபடிவம் செலுத்தியபிறகே ஏற்றுக்கொள்ளப்படும். தட்கல் போலவே (EQ) எமர்ஜென்சி கோட்டாவும் அறிமுகப்படுத்தப்படும்.

14. மாண்புமிகுக்கள் தவிர்க்க இயலாத காரணங்களால் வர இயலாது போனால் ஏர் இந்தியா நிறுவனத்திலிருந்து பணி ஓய்வு பெற்ற முதிர் மகளிர் மகிழ்வாட்டம் ஆடும் பணியை மேற்கொள்வார்கள். அதே யூனிபார்ம் புடவையை இடுப்பில் தூக்கி சொருகிக்கொண்டு ஆடுவார்கள்.

15. இப்படி மகிழ்ச்சி ஊட்டும் ஆட்டம் ஆடும் பெண்டிர் அவர்களது மாநிலங்களுக்கு தக்கவாறு அந்தந்த மாநிலத்தின் கிராமிய நடனங்களை கூத்துக் கட்டுவர். தமிழ்நாடு பங்குபெறும் போட்டிகளில் புஷ்பவனம் குப்புசாமி அனிதா தம்பதியர் பாடுவார்களா?

16. ஐ.பி.எல் போட்டிகளை தூர்தர்ஷன் மட்டுமே ஏகபோக உரிமை கொண்டாடி ஒளிபரப்பும். பொதிகை, DD-NEWS, DD-NATIONAL, DD-SPORTS என்று சலக தூர்தர்ஷன் சானல்களிலும் ஒரே நேரத்தில் ஒளிபரப்புவார்கள்.

17. ஒவ்வொரு இன்னிங்க்ஸ் இடைவேளையின் போதும் இந்தியில் செய்திகளும் அதனைத் தொடர்ந்து காற்றில் இருகைகளையும் வீசி காது கேளாத மாற்றுத் திறனாளிகளுக்கான செய்திகளையும் ஒளிபரப்புவார்கள். இன்னமும் அந்த புஷ்டியான பாப் முடி திருத்திய நாற்பது வயது பெண்மணி தான் இருகைகளால் சைகை செய்கிறார்களா?

18. மட்டையை துடுப்பு போல் உபயோகித்து பெருமாளை தோளில் தூக்கி சேவை சாதிக்கும் கருடாழ்வார் போல் ஆடுவதெல்லாம் "துடுப்பு நேரம்" மட்டும் தான் என்ற புதிய விதிமுறை அமுலுக்கு வரும். துடுப்பு நேரம் போல களை பிடுங்கும் நேரம், நாற்று நடும் நேரம், கதிர் அறுக்கும் நேரம் போன்றவைகளை கொண்டு வரவேண்டும் என்று விவசாயிகள் முன்னணி கொடி பிடிக்கும்.

19. வார விடுமுறை நாட்கள் மற்றும் பிராந்திய/தேசிய விடுமுறைகளில் போட்டிகள் கிடையாது. மாநில மற்றும் தேசிய பந்த் அனுசரிக்கும்போது (அரசாங்க அனுசரணையோடு) போட்டிகள் உண்டா?


20. மூன்று விக்கெட் குச்சிகளுக்கும் காவி, வெள்ளை மற்றும் பச்சை வர்ணம் பூசப்படும். நாளடைவில் அணியில் அதிக பங்கு (பண முதலீட்டில்) வகிக்கும் கட்சியின் கொடி நிறங்கள் ஸ்டம்ப்களில் தீட்டப்படும்.


21. தூராங்கார அண்டைநாட பாகிஸ்தான் பி.பி.எல் என்ற புதிய கிரிக்கெட் பந்தையத்தை தோற்றுவிக்கும். அந்நாட்டு தலைவர்கள் வாஷிங்டன் சென்று ஒபாமாவை சந்தித்து ஒரு பில்லியன் டாலர் நிதிஉதவி வழங்குமாறு பணிப்பார்கள். காஷ்மீர் ஓரத்தில் நமக்கு சல்லை கொடுத்துவரும் தீவிரவாத அன்பர்கள் அணியில் முன்னணி இடம் பிடிப்பார்கள்.

மேலே கருப்பில் மின்னஞ்சல் சிவப்பில்  நம்ம சொந்த சரக்கு... எப்புடி?

Wednesday, June 23, 2010

சலவைக்காரி

"ஒரு கோல்ட் ஃப்ளேக் கிங்ஸ்"  கே.டி.எஸ் தியேட்டர் எதிரில் இருந்த குட்டை ராஜு டீக்கடையில் கேட்டு வாங்கி கட்டையில் ஒரு முடிச்சுடன் தொங்கிக்கொண்டிருந்த தீக்கயற்றில் குனிந்து பற்றவைத்துக் கொண்டான் மணி. சிகரெட்டை கொஞ்சம் ஆழமாக இழுத்து விடும்போது சட்டையில் வந்து விழுந்த தீப்பொறியை இடதுகையால் தட்டிவிட்டு பெஞ்சில் அமர்ந்தான். இராத்தூக்கம் இல்லாத கண்ணிரெண்டும் கோவப்பழ சிவப்பாக இருந்தது. வெளியே மழை லேசாக,சற்று கனமாக, ஊதக் காற்றோடு, காற்றில்லாமல் என்று பல படிவங்களில் பெய்து ஊரில் உள்ள ஜன்னல் கம்பிகளை ஜில்லாக்கிக் கொண்டிருந்தது. அவ்வப்போது "உஸ்....ஸ்..ஸ்.." என்ற மழைக் காற்றின் சப்தமும், டீக்கடை மேற்க்கூரையில் விழுந்த மழைத்துளிகளின் ஓசையும் ஒரு பின்னிரவு நேர விவிதபாரதி சேர்ந்திசைக் கச்சேரி செய்து கொண்டிருந்தது. இது மதியமா, மாலையா என்று தெரியாமல் ஊருக்கே கருமேகத்தால் பந்தல் போட்டிருந்தது வானம். போட்டிருந்த வெளிர்நீல சட்டை லேசாக நனைந்து பனியன் இல்லாத உடம்பு படும் இடங்களில் சட்டையை ஒட்டி கருப்பு வண்ணம் காட்டியது. சற்று மிதமான காற்றுடன் நின்று நிதானமாக பெய்து கொண்டிருந்த மழை ஒவ்வொரு காற்று சுழற்சிக்கும் அவ்வப்போது கடைக்குள் எட்டிப்பார்த்து பெஞ்சில் உட்கார்ந்திருந்த அவனுடைய நீல கலர் ஹவாய் செருப்பணிந்த கால்களை அலம்பியது.

நேற்றிரவு நடந்த சம்பவங்கள் அவனை இரவு முழுவதும் விழித்திருந்து மழையை வேடிக்கை பார்க்க விட்டிருந்தது. இரவு பூராவும் "க்ரீச்....க்ரீச்...." சப்தங்களுடன், சுவர்க்கோழிகளின் பின்னணி இசையுடனும் பொழுதைக் கழித்தான். நடந்த சம்பவங்களை தற்போது ரீவைண்ட் செய்து பார்த்தான் மணி.


இரண்டு மூன்று முறை ஆற்றுக்கு அந்தப் பக்கமாக சைக்கிளில் செல்லும்போது அவளைப் பார்த்திருக்கிறான். மலையாக சேர்ந்திருக்கும் நூறு இருநூறு உருப்படிகளை ஒவ்வொன்றாக கையிரண்டாலும் மேலே தூக்கி அந்த ஆற்றுப் படிக்கட்டில் "டப்... டப்..." என்று குனிந்து அடித்து துவைக்கும் போது பார்ப்பவர் லப்டப்பையும் சேர்த்து துவைத்தாள். ஆள் கண் மை நிறம்தான். இருந்தாலும் பிரம்மா ஆங்காங்கே குறைத்தும் கூட்டியும் தனது முழுத் திறமையை காட்டியிருந்தான்.

"ஆளு சூப்பர் கட்டடா... கருப்பா இருந்தாலும் களையா இருக்குடா.. " என்றான் மனோகர்

"சரிடா.. ஆனா.. ஒருத்தன் லைசென்ஸ் வச்சிருக்கான் போலிருக்கே..." இது மணி

"அவன் சரியான தண்ணி வண்டிடா மாப்ள.. ஆறு மணிக்கப்புறம் தான் இருக்கோம்னு அவனுக்கே தெரியாது... புல்லா ஊத்திக்கிட்டு கடைத்தெருவில வேட்டி அவிழ விழுந்து கிடப்பான்.."

"அதனால...."

"மாதா கோயிலுக்கு இரண்டு தெரு தள்ளிதான் வீடு... விளக்குவெச்சு ஒரு  ஆரறைக்கா போனாம்னா போதும்... பக்கத்துல இருக்குற ஆட்டோக்காரன் கூட, ஆட்டோ ஓட்டின நேரம் போக  அதைத்தான் ஓட்றதா கேள்வி.." எரிகிற ஆசைக்கு எண்ணெய் ஊற்றினான் மனோகர்.

"இல்லைடா வேணாம்...ஏதாவது ஏடாகூடமா ஆயிடப்போவுது..."

வாய் சொன்னாலும், மனது அலைபாய ஆரம்பித்தது. இரு கையையும் மேலே  ஓங்கி குனிந்து நிமிர்ந்து ஆற்றோரக் கல்லில் அடித்து துணி தோய்க்கும் பிம்பம் மாறி மாறி கண்ணுக்குள் வந்துபோனது. எப்படியும் இன்று அவளை சலவை செய்துவிடவேண்டும் என்று முடிவுக்கு வந்தவனாய் மனோகரை கழட்டிவிட்டு விட்டு , ஆறரை மணி அளவில் ச.காரி வீட்டை அடைந்தான். கீற்று வேய்ந்து மேலே வைக்கோல் போட்ட ஒரு குடிசை. வாசலில் சிம்னி விளக்கு எரிந்துகொண்டிருந்தது. அரையிருட்டாய் இருந்த வீட்டின் உள்ளே ஒருவரையும் காணோம்.  லேசாக தலையை மட்டும் எட்டிப்பார்த்தான் மணி. "ம்....ம்...ம்..." என்று ஈனஸ்வரத்தில் முனகும் சப்தம் வந்துகொண்டிருந்தது. ஆவலாக உள்ளே எட்டிப்பார்த்தவனைப் பார்த்து காலில் விஷமுள் ஏறி உப்புப் பத்து போட்டுக்கொண்டிருந்த ச.காரி  "ஆ. ஐயோ.. திருடன்...யாராவது வாங்களேன்..." என்று வாய்விட்டு அலறி கூப்பாடு போட்டாள். அவள் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வரத்தயாராக  இருந்த ஆஜானுபாக கைலி பனியன் போட்ட அடுத்தவீட்டு ஆட்டோக்காரன் பாய்ந்து உள்ளே புகுந்தான். வீட்டு வாசலில் விட்டு ஆ.காரனும் ச.காரியும் சரமாரியாக வெளுத்துக் கட்டினார்கள். நிறைய உள்குத்து வாங்கிக்கொண்டு ஊமைக்காயங்களுடன் சத்தம் காட்டாமல் ஓடி மறைந்தான் மணி.

தெரு முக்கில் ச.காரி புருஷன் அவிழ்ந்த வேட்டியை கையில் சுற்றிக்கொண்டு வெள்ளை நீல கோடு போட்ட அண்ட்ராயர் தெரிய ரோடை அளந்துகொண்டு நடுந்து வருபவனைப் பார்த்து வாங்கின அடியில் வீங்கின வாய் வலித்தாலும் பல் தெரிய சிரித்துக் கொண்டான் மணி.

"மாப்ள.. மாதா கோயில்ல ஏதோ திருவிழாவாம்.. போலாம் வரியா..." என்ற மனோகரின் குரலைக்கேட்டு ராஜு டீக்கடையில் விழித்தெழுந்து அந்த அடாது பெய்த மழையிலும் சொட்ட சொட்ட நனைந்து கொண்டே சைக்கிள் ஏறி பறந்தான் மணி.

பட உதவி:  www.guardian.co.uk

அப்பாக்களுக்கு அன்பு வாழ்த்துக்கள்

சென்ற ஞாயிற்றுக்கிழமை நிறைய நாடுகளில் கொண்டாடப்பட்ட தந்தையர் தினத்திற்கு டியுரெக்ஸ் என்ற ஆணுறை நிறுவனம் வெளியிட்ட "எங்களது போட்டியாளர்களின் உற்பத்தியை உபயோகப்படுத்தும் அனைவருக்கும், தந்தையர் தின வாழ்த்துக்கள்" என்ற விளம்பரம் ஒன்று உலகெங்கிலும் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.  இந்த ஒரு விளம்பரத்தில் சர்வலோக அப்பாக்களுக்கு இருவரிகளில் அன்பு வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கிறது. மாங்காய் ஊறுகாயிலிருந்து உயரே பறக்கும் வானூர்திகள் வரை எங்கும் எதிலும் அரையாடை அணிந்த பெண்டிரை அங்குமிங்கும் ஓடவைத்து, உறிஞ்சவைத்து, உடுத்தவைத்து, படுக்கவைத்து, அவிழ்க்கவைத்து, குதிக்கவைத்து, ஆடவைத்து, பாடவைத்து, பார்க்கவைத்து, படிக்கவைத்து, இன்னும் பல வைத்து விளம்பரம் தயாரிப்போர் கவனத்திற்கு...
 
fathers day



சில தந்தையர் தின சிந்தனைகள்

வீட்டிலிருக்கும் பணி ஓய்வு பெற்ற தந்தையை போற்றி மதித்தால் அதுவே அவருக்கு அவருடைய நாள், அதாவது FATHER'S DAY!!!! 

ஒரு படத்தில் கவுண்டர் தனக்கு செந்தில் அப்பாவாக நடித்தும் கூட "அப்பா... அப்பா டா...அப்பா டேய்..." என்று திட்டும் காட்சி ஏனோ அனாவசியமாக அழுக்காக நினைவுகளில் வந்து சென்றது. 

"அம்மா என்றழைக்காத" என்ற மன்னன் படப்பாடல் போல  "அப்பா என்றழைக்காத" என்று ஏதாவது படத்தில் பாடல் எழுதினால் அனைத்து "தமிள்" பேசும் தொலைக்காட்சிகளிலும், ரேடியோ பொட்டிகளிலும் "இப்ப உங்களுக்காக ஒரு அப்பா பாட்டு வந்துகிட்டேயிருக்கு.. கேளுங்க..." என்று அரைமணிக்கு ஒருமுறை போட்டு அப்பா பக்தியை அதிகரிக்கலாம்.

பிள்ளைகளுக்கு பிடித்தது அப்பாவா? அம்மாவா? என்று ஏன் எந்த தொலைகாட்சியிலும் பாப்பையாவோ, லியோனியோ பட்டிமன்றம் போடவில்லை?

"அப்பா நீ சரியான லூசுப்பா!!" என்று நான் சென்ற ஞாயிற்றுக்கிழமை என்  குட்டிப் பெண்ணிடம் வாங்கிய செல்லத் திட்டுதான் எனக்கு தந்தையர் தின வாழ்த்துக்கள்.

Tuesday, June 22, 2010

காமமே கண்ணாயினர்!

என்னுடைய பதின்ம வயதுகளில் பதினொரு மணிக்காட்சி என்று எங்களூருகளில் பல விசேஷ படங்கள் சில பிரத்தியேக கொட்டகையில் மட்டும் போட்டு காட்டுவார்கள். மொத்தமே ஒரு மணி நேரம் அல்லது ஒரு அரை மணி சேர்த்து (கொஞ்சம் ஹிட் படம் என்றால்)  மட்டுமே ஓடும். சேர்ந்தார்ப்போல் இருநூறு முன்னூறு பேர் உட்கார்ந்து பார்த்தால் அதிகம். முக்கால் வாசிப் பேர் கட்டம் மற்றும் பூப் போட்ட கைலி அணிந்து காலக்காட்சி யூனிபாஃர்மில் இருப்பார்கள். அதில் என்பது சதம் சிகரட், பீடி, சுருட்டு என்று ஏதாவது ஒரு லாஹிரி வஸ்த்து கொண்டு வெண்புகை பரப்பி தியேட்டரை தேவலோகமாக்குவர்.  ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டாலோ அல்லது முகம் பார்த்து சிரித்துக் கொண்டாலோ, பழகியவராக இருப்பினும்,  படத்தில் கவனம் சிதறிவிடும் என்றெண்ணி முகத்தை "உம்" என்று வைத்துக்கொண்டு இழவு வீட்டுக்கு வந்ததுபோல் அமைதி காப்பர். தீபாவளி, பொங்கல் போன்ற விடுமுறைக்கால காலைகாட்சிகள் பண்டிகைகள் போலவே கோலாகலமாக இருக்கும். கொட்டகைகள் நிரம்பி வழியும். இண்டர்வல் அதிக பட்சம் பத்து நிமிஷம். இந்த மாதிரி படக் காட்சிகளில் எல்லோரும் ஓரினம். அதாவது முதல் இரண்டு என்று தரம் பிரித்து உட்காரவைக்கும் வகுப்பெல்லாம் கிடையாது. ஒரே கட்டணம் ஒரே வகுப்பு. சர்வமும் ஒன்றே.

இந்தக் காலைக் காட்சியில் தாரளமாக இடம் பெறுபவை யானை, என்ட ஸ்னேக ரோஸி, லயனம், ஆதி தாளம் போன்ற மலையாள மற்றும் கொஞ்சம் ஆங்கில திரைப்படங்கள் மட்டுமே. ஜெயதேவன், ஐ.வி.சசி போன்ற புகழ்பெற்ற இயக்குனர்களின் கைவண்ணத்தில் வெளிவந்த படங்கள் ஏராளம். இந்தப் படங்களில் நடித்து புகழ்பெற்ற டி.ஜி.ரவி போன்ற நாயகர்கள் நடித்த படங்கள் மினிமம் கியாரண்டி. அவர்களுக்கு ரசிகர் மன்றம் கூட ஓரிரு இடங்களில் வைத்திருக்கலாம். காலை பதினொரு மணி ஒன்றும் கட்டாயம் இல்லை. வரிசையில் நின்றால் யாராவது பார்த்தால் கெளரவம் கெட்டுவிடும் என்றெண்ணி படம் போட்டு விளக்கணைத்து தியேட்டர் இருட்டானதும் மொத்த கூட்டமான இருநூறில் நூறு பேர் ஒரு ஓரமான சீட்டைப் பிடித்து யாருக்கும் தெரியாமல் மறைந்து உட்கார்ந்துகொள்வார்கள். தனக்கு இருட்டில் நடக்கப்போவதை அல்லது நடப்பதை இருட்டிலேயே உட்கார்ந்து பார்க்கும் பழக்கம் மனோரீதியாக இவர்களுக்கு பிடித்திருக்கலாம். இடைவேளையின் போது யார் கண்ணிலும் படாமல் இருப்பதற்காக அவசரமாக நம்பர் ஒன் வந்தால் கூட வெளியே செல்ல மாட்டார்கள். அடக்கிக்கொண்டு முற்றிலுமாக ஓரத்திலேயே முடங்கி அடங்கிவிடுவார்கள். இடைவேளைக்கு முன் இரண்டு பிட் இ.பின் இரண்டு பிட் வெளியே வந்து விடுவார்கள். நல்ல அறிய பல தகவல்கள் அடங்கிய பிட் காட்சிகள் இருப்பின் மொத்த படமுமே நிச்சயம் ஒரு மணி நேரத்தில் முடிந்துவிடும். படக் கொட்டகை உரிமையாளருக்கு கரண்ட் செலவு மிச்சம். பார்வையாளருக்கு நேரச்செலவு மிச்சம். இருவருக்கும் WIN-WIN நிலைமை.

ஒரு காலத்தில் இப்படியாக சினிமா கொட்டகைகளில் வளர்ந்து வந்த காமக்கலை, தற்போது மொபைல், ஐபாட், லேப்டாப், கம்ப்யூட்டர் என்று பதின்ம வயது பையன்கள் முதல் இளைஞர்கள், பெருசுகள் வரை எல்லோரிடமும் சகஜமாக புழங்கும் அனைத்து எலக்ட்ரானிக் உபகரணத்திலும் சீரழிகிறது. மூன்று ஷா நடிகை குளிப்பது அவர் துவட்டிகொள்ளும் முன் அனைவரையும் வந்தடைந்தது. கடந்து சில மாதங்களுக்கு முன் யூட்யூப் தேடல்களில் முன்னணி வகித்து ஸ்டார் நட்சத்திரமானவர்கள் நம்ம(?) நித்யா ரஞ்சிதா ஜோடிதான். கூகிள் தமிழ்த் தேடல்களில் நம்முடைய அரிச்சுவடி படிக்கும் காலத்தில் முதன்முதலில் எழுதிப்பழகிய உயிர் எழுத்து "அ" அடிப்பதற்காக a அடித்தவுடன்  வருவதை கீழே உள்ள படத்தில் காணலாம்.....

goo


இணையத்தில் எவ்வளவோ நற்காரியங்களும், நல்ல பல விஷயங்களும் பகிரப்படும் இவ்வேளையில், இன்டர்நெட்டில் வாத்ஸ்யாயனரின் பாடத்தின் நிலை என்ன, அதைப்படிக்கும் ஆண் பென் விகிதாசாரம் என்ன, எவ்வளவு நேரம் பார்க்கிறார்கள்,  எங்கே பார்க்கிறார்கள் என்பது பற்றிய முழுத் தகவல்கள் அடங்கிய ஒரு விவரப்படம் கீழே.. அதெல்லாம் சரி இதனால் ஊருக்கு என்ன பயன் என்று நாலு பேர் கேட்பது என் காதில் விழுகிறது. நாட்டு நடப்பு நமக்கு தெரியவேண்டாமா? சொல்லுங்க....


Via: Online MBA

Monday, June 21, 2010

கேரட்டும் கேளிக்கையும்




நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்த 2010 விக்ருதி வருஷ  ஜூன் மாதத்தில் சில பேருக்கு தற்போதைய முதுகு சாய்க்கும் நாற்காலியிலிருந்து தலை சாய்க்கும் அளவிற்கு சாய்வு நாற்காலி பெரியதாயிருக்கலாம், மாதத்திற்கு இரண்டு சனிக்கிழமை இரவுகள் பீர் குடிப்பது நான்கு சனிக்கிழமைகள் வயிற்றுப் பானைக்குள் ஊற்றிக்கொள்ளும் அளவிற்கு ஊதியம் உயர்ந்திருக்கலாம், மத்திமர்களுக்கு பிள்ளைகளின் ஸ்கூல் பீஸ் இத்யாதிகள் கட்டிய பிறகு ஏதாவது இரண்டு வார விடுமுறைகளில் சரவணபவனில் பசியாற பணம் கிடைத்திருக்கலாம், இன்னும் சிலர் ஸ்விஸ் பாங்கில் கரண்ட் அக்கவுன்ட் சேர்க்கும் அளவிற்கு மூட்டையாக வண்டியில் ஏற்றி வீட்டுக்கு போயிருக்கலாம். இதில் சிலர் ஓடி ஓடி ஓடாய் தேய்ந்து  தினமும் ஒன்பது மணிவரை உழைத்திருக்கலாம், சிலர் வெட்டியாய் பல் குத்தி, சீட் தேய்த்து, அதிகாரிக்கு முதுகு சொரிந்து, மற்றவர் மேல் ஏறி அமர்ந்து தனது பர்ஸை நிரப்பியிருக்கலாம்.  சிலர் பார்க் ஷெரட்டனில் பார்ட்டி கொடுக்கும் அளவிற்கு மகிழ்ந்திருக்கலாம், சிலர் "மவனே இரு உன்ன வச்சுக்கறேன்.." என்று கொதித்து போய் தக்க சமயத்தில் தவிக்கவிட உள்ளுக்குள் கருவிக்கொண்டிருக்கலாம், மற்ற சிலர் தற்போது வேலை செய்யும் நிறுவனத்திற்கு "டாட்டா பை  பை " காண்பித்திருக்கலாம்.

எது எப்படியோ, 250 வருடங்களாக லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் பகுதியிலிருந்து மனித சமுதாயத்திற்கு ஞானப் பால் புகட்டும் தொண்டு சேவையில்  ஈடுபட்டிருக்கும் RSA என்ற அமைப்பு மக்களுக்கு பயன்படும் பல நல்ல அறிய தகவல்களை ஒரு சிறந்த கல்வியாளர் அல்லது புகழ்பெற்ற சிந்தான சிற்பி ஒருவரை சிறப்புரை ஆற்ற வைத்து அவர் பேச்சின் ஒலிப்பின்னணியில் கார்ட்டூன் மற்றும் அனிமேஷன் மூலம் ஒரு வெள்ளை பலகையில் கருப்பு சிகப்பில் படத்துடன் வரைந்து காண்பிக்கிறார்கள்.

அல் கோர் அமெரிக்க துணை ஜனாதிபதியாக இருந்தபோது அவர்க்கு பேச்சு தயாரித்துக் கொடுத்த டான் பிங்க் என்ற கனவான் நம்மை ஊக்கப்படுத்தும் காரணிகளைப் பற்றி சப்பளாக்கட்டை இல்லாமல் உபன்யாசிக்க பின்னே மார்க்கர் பேனா கொண்டு வரைந்து தள்ளியிருக்கிறார்கள். இவர் எழுதிய பல நூல்கள் நியூ யார்க் டைம்ஸ் போன்ற புகழ் பெற்ற பத்திரிகைகளின் பதிப்பாக வெளிவந்திருக்கின்றன. நிறைய நன்றாக  மில்லியன் கணக்காக விற்றுத்தள்ளியவை. பணியில் நம்மை உற்சாகப்படுத்தும், ஊக்கப்படுத்தும் காரணிகள் பற்றி லண்டன் மற்றும் இந்தியாவில் இங்கிலாந்தின் M.I.T நடத்திய ஒரு ஆய்வில் கிடைத்த சில முக்கிய தகவல்களை இந்த பதிவில் இணைத்திருக்கும் வீடியோவில் அவர் பகிர்ந்துகொள்கிறார்.  ஆய்வின் இரு முக்கிய தகவல்களாக

ஒன்று:
எந்த இடத்திலும் எந்நேரத்திலும் ஆணி புடுங்குதல், மூட்டை தூக்கி பிழைத்தல், ஒரு  மணி நேரத்தில் 100 சட்டைக்கு வைத்த கை எடுக்காமல் காஜா எடுத்தல், ரோட்டோரங்களில் ஐந்தடி ஆழத்திற்கு அயராமல் தோண்டுதல் மற்றும் இதுபோன்ற உடலுழைப்பை கொண்டு செய்யப்படும் வேளைகளில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு துட்டு நிறைய கொடுத்தால் வேலையும் நிறைய செய்வார்கள். அவர்களுக்கு அதுவே டானிக். வேலைச் சோர்வை நீக்கும்.

இரண்டு:
ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டு ஒரு மக் டீயை மேசையின் மேல் வைத்துக் கொண்டு, மானிடர் பார்த்துக்கொண்டு பொட்டி தட்டுபவர், மென்பொருள் தயாரிப்பவர் மற்றும் அலுங்காமல் குலுங்காமல் ANCHOR அடித்தது போல உட்கார்ந்து அறிவுசார் தொழில் புரிவோருக்கு பணப்பையின் கனத்தை மட்டுமே அதிகரிக்க அதிகரிக்க வேலை செய்வது மற்றும் உற்பத்தித்திறன் ஆகியவை குறைகிறது என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். அதற்க்கு பதிலாக FUN ஆக்டிவிட்டிகள் மூலமாகவும் அவர்களை உற்சாகப்படுத்தவும் ஊக்கப்படுத்தவும் முடியும் என்கிறார்கள். இதுவே இவர்களுக்கு கிரியாஊக்கி.

ஓவர் டு டான் பிங்க்: ( ஒரு பத்து நிமிடம் பிரமாதமாக பேசுவார். நன்றாக இருக்கும்)







பட உதவி: http://www.betterresponseblog.com

டிஸ்கி: எந்த உழைப்பாளிக்காவது எந்த நிர்வாகமாவது இந்த முறை அள்ளிக்கொடுக்காவிட்டலும் கிஞ்சித்தும் ஒரு கிள்ளு கிள்ளியாவது (அவர்களது கஜானாவிலிருந்து, உங்களை அல்ல )  ஏதும் தராமல் இருந்தால், கிடைக்காமல் இருந்தால், இந்த வீடியோ வெறுப்பேற்றியிருந்தால், தயவு செய்து மன்னிக்கவும்.

Sunday, June 20, 2010

ராவணன் - ஒரு உண்மை ரிப்போர்ட்


மணி என்னிலேர்ந்து ஜூன் 18 முதல் அப்படின்னு விளம்பரம் போட ஆரம்பிச்சாரோ அன்னிலேர்ந்து நானும் டிக்கெட் பிச்சை எடுத்துப் பார்க்கிறேன் ஒன்னும் பேர மாட்டேங்குது. பல பிரஸ் நண்பர்கள் கிட்ட கூட திருவோடு ஏந்தி பார்த்துட்டேன். என்னிக்கு வேணும் அப்படின்னு கேட்டுட்டு, எந்த நாளுக்கு கேட்கறோமோ அன்னிக்கி கிடைக்கறது கஷ்டம், ஆனா பார்க்கலாம் அப்படின்னு ஒரு ஸ்டாண்டர்ட் டயலாக் விடும் போது ஒரு பாணம், ஒரு மனைவி, ஒரு சொல் அப்படின்னு வாழ்க்கைல இருக்கணும்னு எ.கா இருந்துட்டுப்போன த்ரேதா யுக ராமன், பத்து தலை ராவணனுக்கு மேலோக டிக்கெட் கொடுத்தவண்டதான் சினிமா டிக்கெட் கேட்கணும் போலருக்கு.   நவீன ராம, ராவணாதிகளை பெரிய ஸ்க்ரீன்ல பார்க்கலாம்னா முடிய மாட்டேங்குதே. எஃப்.எம் ரேடியோக்கல்ல பாடல்களுக்கு நடுவில் விக்ரம் "ஏலே, ராவணன்லே...." என்று அடித்தொண்டையில் கமறி பேசும்போது "ஏலே, கிடைக்கலலே...." என்று சொல்லி பார்த்துக்கொள்கிறேன்.
 
என் கிட்ட ஹை ஸ்பீட் இன்டெர்நெட் இருக்கு, சிரிக்கிற காந்தி படம் போட்ட தாள் இருக்கு, சத்யத்ல போய் பார்க்கறத்துக்கு ஒரு நாலு கால் வண்டி இருக்கு, நாக்கை தொங்க போட்டு நாலு மணி நேரம் ஸ்க்ரீன் நோக்க கொள்ளை ஆசை இருக்கு. இவ்வளவு "இருக்கு" இருக்கிற இந்த பரம ஏழைக்கு டிக்கெட் மட்டும் தான் இல்லை, படம் பார்ப்பதற்கு. நான் பெரிய எழுத்தாளன் இல்லை, ஆகையால் யாரும் ஒசியில் டிக்கெட் ஏற்பாடு செய்யவேண்டாம் என்று வலது கை ஆள் காட்டி விரலை நீட்டி முன்னும் பின்னும் ஆட்டி கேட்டுக்கொள்கிறேன்.
 சுகாசினி வசனம், சிவன் கேமரா, பிரம்மாவும் பெருமாளும் தயாரிப்பு அப்புடி இப்புடின்னு  பதிவுலக ஜாம்பவான்களின் பட விமர்சனங்களை படித்து பார்க்கிறபோது, படம் பப்படமோ என்று எண்ணத் தோன்றுகிறது. இன்னும் ரெண்டு நாள் போனா சத்யம் தியேட்டர்லேர்ந்து ஆந்த்ரா பக்கத்துல இருக்கிற பட்டாபிராம் வரை வீட்டுக்கு வந்து கதவை தட்டி டிக்கெட் கொடுப்பாங்க போலிருக்கு. இடைத்தேர்தல்ல ஓட்டுபோட காசு கொடுக்குற மாதிரி. பார்க்கலாம் பாலம் கட்டின D. ராமன் B. E (நம்ம சீதா புருஷன் தான்), காதில் விழுந்ததான்னு.

இதுல என்ன உண்மை ரிப்போர்ட்ன்னு கேட்டா, நான் இன்னும் படம் பார்க்கவில்லை பார்த்த பின்பு என்னுடைய கலை விமர்சனம் பதிவேற்றம் செய்யப்படும்.

பட உதவி: www.behindwoods.com

Saturday, June 19, 2010

சனிக்கிழமை சங்கதி - நெக்லஸ் பாலம்


நம்மூரில் பாலம் கட்டுவோர் கவனத்திற்கு:-
ஹாங்காங்கில் உள்ள காரோட்டிகள் இந்தியா போல சாலையின் இடது புறம் பயணிப்பார்கள், சைனாவின் சப்பை மூக்கு சாரதிகள் வலது புறம் ஓட்டுவார்கள். ஹாங்காங் மக்களும் சீனர்களும் புறம் மாறாமல் இங்குமங்கும் செல்வதற்கு ஏதுவாக பேர்ல் நதியின் மீது கட்டுவதற்கு ஒரு நெக்லஸ் போன்ற பாலத்தை என்.எல் ஆர்கிடெக்ட்ஸ் என்ற டச்சு கம்பனி வடிவமைத்துள்ளார்கள்.

நம்மூர் மக்களுக்கு இப்படி ஏதும் தேவைப்படும் என்று தோன்றவில்லை. ஏனென்றால் எல்லோருமே வலமும் இடமும் நுழைந்து நுழைந்து ஓட்டி நடு ரோடில் வாகனத்தால் நெக்லஸ் டிசைன் போடுகிறார்கள். நேற்று கூட பல்சரில் சென்ற வாலிபன் சோழாவரத்தில் போவது போல டயரின் கால் பாகம் தரையில் பட சுழன்று சுழன்று சென்றுகொண்டிருந்தான். 

கூவத்துல போட் விடுவதற்கு பதிலா பாதி டிராபிக்கை மேற்கண்ட பாலம் போட்டு திருப்பி விட்டா எப்படி இருக்கும்? பாலம் கட்டி பஸ் விட்டுடலாம் ஆனா கூவத்து மேல ஸ்டாப்பிங் வச்சா மக்கள் எப்படி ஏறுவாங்க? மூக்கப் பொத்திக்கிட்டுதான்!!! :)

பாலம் கட்டிய பரமாத்மாவே வருக வருக!! அப்படின்னு பாலம் தொறந்துவைக்க அந்த நாட்டு அமைச்சரை ஆளுயர கட் அவுட் வச்சு கூப்பிடுவாங்களோ. பார்ப்போம்.

பட உதவி: http://www.nlarchitects.nl

Friday, June 18, 2010

வெட்டிமுறிக்க பதினேழு காரணங்கள்


  1. "அப்புறம் என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க?" என்ற உலகளாவிய சம்பாஷனை தொடங்கும் கேள்விக்கு பதிலளிக்க  
  2. "எங்க ஊட்டுக்காரரும் கச்சேரிக்கு போறாரு"  அப்படின்னு சொல்லிக்கறதுக்கு 
  3. இலவச  வெண்டிங் மெஷின்  காபி, கிறுக்கும் நோட்டு, கவர், ஸ்டேப்ளர், பேனா, பென்சில், பிரிண்ட்அவுட் மற்றும் இன்னபிறவைகளுக்காக   
  4. ஆபிசிலிருக்கும் கண் கவர்  கந்தர்வக் கன்னிகளை பார்ப்பதற்கு  
  5. அப்பா அம்மா மனையாளிடம் இருந்து தப்பித்து விழுந்தடித்து ஓடிவந்து அடைக்கலம் புகுவதற்கு  
  6. இல்வாழ்க்கையின் இக்கட்டான நேரங்களுக்கிடையில் ஜாலியான பொழுதுகளுக்காக
  7. வேலை இல்லாமல் வீட்டு திண்ணையில் படுத்து இருந்தால் துட்டு கிடைக்காது என்பதற்காக 
  8. ஒண்டிக்கட்டையாக ஊட்டுல  இருந்தா பேய், பிசாசு, யட்சிணி வந்து பிடிச்சிக்கும் என்று  பயப்பட்டுகிட்டு  
  9. வீட்டுல இருக்கிற நம்மளோட மொக்கையான ஸ்டோர் ரூம் மாதிரி இருக்கிற அறையைவிட ஆபிசில் குப்பை கொட்டும் ஏ.சி போட்ட இடம் தேவலாம்ன்னு
  10. "ஐயோ எனக்கு நிறைய வேலை இருக்கு நாம அப்புறம் பேசலாமா? " அப்படின்னு அறுவைத் திலகங்களிடம் இருந்து தப்பிப்பதற்கு
  11. பகல் நேர தொலைக்காட்சி சீரியல்கள் அசுவாரஸ்யமாக பிளேடு போடுவதால் 
  12. வேலையற்ற வெட்டி வீணர்கள் மத்தியில் தோன்றிற் புகழோடு  தோன்றுவதற்கா
  13. காலணா பொறாத விஷயத்துக்கெல்லாம்  மீட்டிங் போட்டு டீ பிஸ்கட் சாப்பிடுவதற்கு
  14. புதுசா யாராவது உள்ளாடையாக ஒரு பூப்போட்ட ஜட்டி வாங்கி போட்டுக்கிட்டு வந்தாலும் ட்ரீட் கேட்டு வாங்கி ஓசில சாப்பிடறத்துகாக
  15. ஃப்ரீயா இருக்கிற ரோட்டை வண்டி ஓட்டத் தெரியாம எடுத்துட்டு வந்து மாப்பிள்ளை அழைப்பு கார் மாதிரி ஓட்டி ட்ராபிக் ஜாம் பண்றதுக்கு
  16. ஆபிஸ் விட்டதும் சட்டுபுட்டுன்னு நேரா வீட்டுக்கு போகாம பொண்டாட்டியிடம்  அடி வாங்க பயந்து நடு ரோடில் நாற்பதுக்கும் கீழே காரை நடைவண்டியாக்கி ஓட்டி வீட்டுக்கு சீக்கிரம் போய் மனைவி மக்களை பார்க்க ஆசைப்படும் புள்ளகுட்டிகாரங்களையும் நடு ரோட்டில் நிற்க வைக்க
  17. கடைசியாக ஒரு வேலையும் செய்யாமல் இருப்பதற்காக 
இதுக்கு மேல இப்ப முடியலை... முடிஞ்சா அப்புறமா... இன்னும் விரிவா... ஒ.கே

Thursday, June 17, 2010

கார்த்திக்கின் காதலிகள் - Part II

காலை ஆறு மணி உத்தராயணக் கதிரவனின் முன் சேர்ந்தார்ப்போல் இரண்டு நிமிடம் நின்றால் ஆங்காங்கே இழையோடும் பச்சை நரம்புகளுக்கிடையில் செங்குருதி தெரியும் நல்ல சிகப்பு நிறம், பருவக்காற்று தொட்டு இழுத்து போகும் நல்ல மலர்க்கொடி போன்ற தேசலான சரீரம், அடுத்தவரை வம்புக்கிழுக்கும்/துளைக்கும்  துரு துரு கண்கள், அந்த துரு துருக்கள் எடுப்பாக தெரிய காலை மாலை இருவேளையும் ஒரு கையில் கண்ணாடி பிடித்து கண்ணோரங்களில் இட்டுக்கொள்ளும் ஐடெக்ஸ் கண் மை மீன்கள்,  அனவரதமும் வெட்டிவேர் கலந்த தேங்காய் எண்ணெய் தடவி திருவிளையாடல் நக்கீரன் கூற்றை தவிடுபொடியாக்கும் படிய வாரி பின்னிய கூந்தல், எப்போதும் முகத்தாமரை அணிந்திருக்கும் பல் தெரியாப் புன்னகை, கேள்விக்குறி காதுகளில் குடை ராட்டினம் ஆடும் ஜிமிக்கிகள், அரக்கு சட்டை, மஞ்சள் பாவாடை, சட்டைக்கு மேல் ஆடும் அன்னப்பறவை போட்ட தங்கச்செயின், கழுத்து மற்றும் முக பிரதேசங்களில் வாசனைக்கு நறுமணமாய் க்யூட்டிகூரா,  பிறந்த குழந்தைகள் போடும் வெள்ளி அரணாக்கயிற்றை உருவி இரண்டு முத்து வைத்தார்ப்போல் இருக்கும் கொலுசுகள், சராசரி இந்திய பெண்டிர் சமயலறையில் எக்கி எடுக்கும் பொருட்களை நின்று கொண்டே எட்டும் உயரம் கொண்டவளின் பெயர் சுபா. கார்த்திக்கை கொள்ளை கொண்டவள்.

மேற்கண்ட பாரா வர்ணித்த நாலாம் வீட்டு பாரதி மீசை வாத்தியார் மகள் சுபாவின் அத்தனை பௌதீக விஷயங்களும் தனக்குள் ஏற்ப்படுத்திய ரசாயன மாற்றங்களினாலும், இங்கொன்றும் அங்கொன்றுமாக மூக்குக்கு கீழே எட்டிப்பார்த்த அந்த அரும்பு மீசையும் கார்த்திக்கை எப்போது வீட்டு வாசலில் வந்து நின்றாலும், படிக்கட்டுகளில் உட்கார்ந்தாலும், சைக்கிள் மிதித்து வெளியில் சென்றாலும், சக நண்பர்களுடன் வீதியில் நின்று பேசும்பொழுதும் வாயோடுவாய் இங்க்லீஷ் முத்தம் கொடுக்கும் காதலர்கள் போல தலையை அவள் வீட்டு பக்கமே சாய வைத்து, குறும்பு பார்வை பார்க்க வைத்தது. தலை திருப்பமுடியாத தருணங்களில் மனதோடு கண்கள் இரண்டும் அவள் இருப்பிடம் தேடி ஒருமுறை அவள் வீட்டு ஆளில்லா புழதி படிந்த திண்ணை வரை அலைபாய்ந்துவிட்டு மீண்டு வரும். யூனிபார்ம் அணியாத கூர்க்கா போல கார்த்திக் தன் தெருவை குறுக்கும் நெடுக்குமாக பலமுறை பலபேரோடு பலதருணங்களில் சைக்கிளில், தோளோடு தோள் கை போட்டுக்கொண்டு, கிரிக்கெட் மட்டையை ஆஞ்சநேயர் கதை போல தூக்கிக்கொண்டு சப்தமாக "டேய்... பாபு... நில்றா... நானும் வரேன்..." என்று கூவிக்கொண்டு இப்படியாக குட்டி போட்ட புஸ்ஸி போல அவள் கண்பட பலமுறை உலாத்தினான். 

போன புதன் கிழமை காலையில் நடந்து முடிந்த உலாத்தலில் நீலக் கலர் மரச்சட்டம் அடித்த அவள்வீட்டு வெளிக் கதவில் தொங்கிய வெண்கல நவ்தால் பூட்டால் கார்த்திக்குக்கு மதிய உணவு உள்ளே செல்ல மறுத்தது. "நேற்று கூட அவள் வீட்டில் பழியாக கிடந்தோமே. வாத்தியார் கூட ரெண்டு தடவை செட்டி கடைக்கு போகச் சொன்னாரே. யாருமே ஒன்னும் சொல்லலியே" என்று நவ்தால் பூட்டை பார்த்து கேட்டு விட்டு பாபுவிடம் விசாரிக்கலாம் என்று அவன் வீட்டில் கேட்டால் அவனும் இல்லை. பாபு பாட்டி குளிர் கால நடுநடுங்கும் குரலில் தட்டு தடுமாறி பேசியதில் கார்த்திக்கின் காதுகளில் விழுந்ததில் காலாண்டு விடுமுறைக்காக நான்கு நாட்கள் அவர்களுடைய கிராமத்துக்கு சென்றிருப்பதாகவும், கூடவே பாபுவும் கம்பெனியாக போயிருப்பதும் தெரியவந்தது. "அயோக்யப் பயல். இவன் என்ன தொடுப்பு கூடவே, இவ்ளோ படிச்சு படிப்பு சொல்லிக்கொடுக்குற வாத்தியாருக்கு தெரிய வேண்டாம் இவன் கூட வயசுப் பொண்ணை அனுப்பலாமா கூடாதான்னு" என்று சில்லி 65 சாப்பிட்ட எஃபக்ட்டுடன் வயரெரிந்து, வந்தவுடன் இவனை கொஞ்சம் கவனிக்கவேண்டும் என்று முடிவெடுத்தான் கார்த்திக்.

ஐந்தாம் நாள் காலை ஆயுத பூஜை. சுபாவின் சுபவரவு சுபமுகூர்த்த நாள். சைக்கிளை நன்கு குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்து ஈர்க்குச்சியை தூரிகையாய் கொண்டு சந்தனத்தால் முன் பின் மட்கார்டுகளில் ம.செ வின் திறமை காண்பித்து அதை துளைத்து அம்பு விட்டு, தென்படும் இடங்களிலெல்லாம் குங்குமம் இட்டு ஒரு இரண்டு முழம் மல்லிப்பூவை மாலை போல் ஹான்ட்டில் பாரில் சுற்றி, அம்மன் கோயில் திருவிழாக்களில் இரவு முழுவதும் சைக்கிள் சுற்றும் வித்தைக்காரன் போல தெருவை சுற்றி சுற்றி வந்தான். பத்தாம் நம்பர் பஸ்ஸில் தெருமுக்கில் பகட்டான பட்டுப் பாவாடையில் அவள் வந்திறங்கியபோது மனசு அவனை விட்டு அந்த ப.பாவாடை பாப்பா பின் போனது.  கூடவே அந்தக் கருங்காலியும் வந்தான். அரசல்புரசலாக ஒருநாள் அவனிடம் கூட தன் எண்ணத்தை பகிர்ந்திருந்தான் கார்த்திக். அது தெரிந்தும் கள்ளப் புன்னகை இதழ்களில் தெறிக்க "என்ன கார்த்திக் நாலு நாள் நல்லா பொழுது போச்சா..." என்று குசலம் விசாரித்தான் பாபு. 

இதற்குமேல் பொறுமையாக இருந்தால் காத்திருந்தவன் காதலியை நேற்று வந்தவன் தள்ளிட்டு போன கதியாகிவிடுமாகையால் எப்படியாது தனது லப்டப் அதிகரித்த காரணத்தை சுபாவிடம் சொல்லி அனுப்ப வேண்டும் என்று எண்ணி புறா,அன்னம் இல்லாத ஊரில் காக்கை காதல் தூது போகும் என்ற லாஜிக்கில் ஒரு நாள் அந்தரங்கமாக பாபுவிடம் நேரடியாக தன்னுடைய சுபாவை "சுபா கார்த்திக்" ஆக்கும் எண்ணத்தை பளிச் என்று தெரிவித்தான். அதற்க்கு தன்னாலான உதவிகளை நிச்சயம் செய்வேன் என்று அறிக்கை வெளியிட்டு பேசும் மத்திய மந்திரி போல பேசி நேசக்கரம் நீட்டிய பாபுவிடம் சுபாவின் காதலிக்கும் எண்ணத்தை அறிந்துகொள்வதர்க்காக, சுபா தன்னை (அதாவது கார்த்திக்கை) காதலிப்பதாக இருந்தால் மாலை சரியாக ஆறு மணி அளவில் வீட்டு வாசலில் வந்து நின்றால் தன்னை காதலிப்பதாக எடுத்துக்கொள்வேன் என்று கார்த்திக் பாபு தூது அனுப்பினான்.

ஆதி காலத்து வெள்ளை வண்ண உட்புறம் கொண்ட வட்ட வடிவ சுவர்க்கடிகாரம் ஆறு முறை அடித்து கார்த்திக்கை வீட்டுக்கு வெளியே கொண்டு தள்ளியது. மிகவும் ஆர்வத்துடன், ஆசையுடனும் தலையை ஒரு கையால் ரஜினி ஸ்டைலில் கோதிக்கொண்டு அதே இரண்டாவது பாரா இ.முத்தம் பாணியில் ஸ்லோமோஷனில் தலையை திரும்பி பார்த்ததும் சங்கடத்தில் அதிர்ந்துபோனான் கார்த்திக். அந்த இடத்தில் சுபாவின் அம்மா ஆஜானுபாகுவாக கையை கட்டிக்கொண்டு கடைக்கண் பார்வை வீசி நின்றுகொண்டிருந்தார். நல்ல வேலை மீசை வாத்தியார் இல்லை. இவ்வளவும் செய்த கபடவேடதாரி  பாபு கார்த்திக்கை பார்த்து "ஒருக்கால் அவுங்க அம்மா உன்னை லவ் பண்றாங்களோ" என்று கிண்டலடிக்க, சைக்கிளை கால்களால் தள்ளி ஓடிப் போய் அமர்ந்து பறந்தான் கார்த்திக். இரவு எட்டு மணி வாக்கில் கார்த்திக் வீடு திரும்பியபோது மீசை, மீ.சம்சாரம் போன்றோர் பஞ்சாயத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.   இனிமேல் அந்தப் பக்கம் கார்த்திக் தலைவைத்து படுக்கக் கூடாது என்று நாட்டாமையாகிய மீசை தீர்ப்பளித்து பஞ்சாயத்தை முடித்துக்கொண்டார். நீண்ட நாட்களுக்கு தினம் தினம் அந்த ஆறு மணிக் காட்சி கார்த்திக்கின் கனவுகளில் வந்து முதலில் தொந்தரவு செய்தது பின்பு சிரிப்பை தந்தது ஒரு ஜோக் போல.
(Q வில் நின்ற கார்த்திக்கின் காதலிகள் பாதியாக குறைந்தனர்)
பட உதவி: http://www.latestngreatest.net/

Tuesday, June 15, 2010

எதிர்காலம் எழுது

கை கால் முன்னும் பின்னும் சுற்றத் தெரிந்த வயது முதலே வளைந்து நெளிந்த மூன்று கருவக் குச்சி, இரண்டு ருபாய் பச்சைக் கலர் ரப்பர் பந்து, ஒரு பாதியை கைப்பிடியாக செதுக்கிய மரப்பலகை (கிட்டத்தட்ட கசாப்புக்கடை கத்தி போல) போன்ற முக்கிய உபகரணங்கள் மற்றும் மட்டை பிடிக்க பேட்ஸ்மேன் ஒருவன், பந்து வீச பௌலர் ஒருவன், பின்னால் பாதுகாக்க கீப்பர் ஒருவன் இருந்தால் போதும், கூட்ட நெரிசல் இருக்கும் ரோட்டோரம், வயசான வேப்பமர அடிவாரம், வாசல் திண்ணை பெரியதாக உள்ள வீடு, அரைகுறை ஆங்கில வழி கல்விப் பள்ளியின் அரை கிரௌண்ட் விளையாட்டு மைதானம், ஆற்றங்கரை செல்லும் ஒத்தயடிப் பாதை, சிவன் கோவில் நந்தவனம் (பூ பூக்காத) என்று எங்கு வேண்டுமானாலும் கிரிக்கெட் விளையாடலாம். ஜன நெருக்கடி உள்ள இந்த நாட்டில் கிரிக்கெட் பிரபலம் ஆனதற்கு மேற்கண்ட காட்சிகள் ஒரு எடுத்துக்காட்டு. கிரிக்கெட்டுக்கு எல்லோரும் விளையாடி பயிற்சி பெறுவதற்கு மைதானம் அவசியமில்லை. ஆனால் ஹாக்கி, புஃட்பால் போன்ற பிற திறந்த வெளி விளையாட்டுகளுக்கு ஏதாவது ஒரு வறண்ட குட்டையாவது வேண்டும், பந்தை உதைக்க, மற்றும் இழுத்துச் செல்ல.


சர்வலோகத்திற்கும் ரைட்டு போட்டு காண்பிக்கும் நைக்கி ஷு கம்பெனியார் தயாரித்த எதிர்காலம் எழுது (Write the Future) உலகக் கோப்பை 2010 -இன் விளம்பரம் இப்போது பிரசித்தி பெற்றிருக்கிறது. இந்தப் பதிவை எழுதும் வரையில் இந்த படக்காட்சி உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்களினால் 15,402,388 முறை யூட்யூபில் பார்க்கப்பட்டிருக்கிறது. ரொனால்டோ, டென்னிஸ் கிங் ரோஜர் பெஃடரர் போன்றோர் தோன்றி சிறப்பித்திருக்கும் இந்த மூன்று நிமிட விளம்பர படத்தில் கடைசி சில நொடிகளில் "உஃப்" என்று ஒரு பெருமூச்சு விட்டு சிலை திறப்பு விழா நடத்துவது மிகவும் அருமை.

என் இனிய கால்பந்து ரசிகர்களுக்காக...  (பாரதிராஜா ஸ்டைல்)

செந்தமிழ்ப் பலகைகள்

வணிக மையங்கள் தங்களது பெயர்ப்பலகையில் செம்மொழியாம் தமிழ்மொழிக்கு அரியாசனம் தராவிட்டாலும் தம்மாத்தூண்டு இடமாவது கட்டாயம் கொடுக்கவேண்டும் என்று சென்னை மாநகராட்சி சமீபத்தில் பிறப்பித்த அதிரடி உத்தரவினால் விளைந்த சில நற்றமிழ் பெயர்கள் சில என் கண்ணில் தென்பட்டன.  இந்த மாதம் இருபதாம் தேதிக்குள் இத்தமிழ்ப் பெயர் சூட்டும் வைபவைத்தை நடத்தாதவர்களின் கடைகள் சென்னையிலிருந்து முற்றிலுமாக அகற்றி அந்த இடம் சுத்தப்படுத்தப்படும் என்று மாநகராட்சி மேயர் தெரிவித்துள்ளார். என் கண்களுக்கு சிக்கிய சென்னை செந்தமிழ்ப் பெயர்ப் பலகைகள் சில கீழே உள்ள மேஜையில் :)  சாரி... நானும் பின் வரும் Table ன்னு சொல்றதுக்கு பதிலா மேஜைன்னு தமிழிட்டேன்.... சுனில் மிட்டலின் Airtel நிறுவனம் தமிழில் பெயர் வைத்தால் எப்படி இருக்கும் என்று ஒரு அட்டகாசமான கற்பனை செய்து கீழ்கண்ட படத்தை போஃட்டோஷாப்பிய  http://www.mypno.com வலைத்தள வடிவமைப்பு அன்பருக்கு வாழ்த்துக்கள்.
 
 நான் கண்ட பெயர்ப்பலகைத் தமிழ் சில..

Ezhil Opticals
எழில் கண்ணணியகம்

Balaji Traders
பாலாஜி வணிகர்கள்

Kumar Snacks
குமார் நொறுக்குத் தீனி

Tip Top Dry Cleaners
டிப் டாப் உலர் சலவையகம்

Chandra Working Women Hostel
சந்திரா வேலை செய்யும் பெண்கள் விடுதி

Muthu Tea and Snacks
முத்து டீ அண்டு ஸ்நேக்ஸ்

Siva Hardwares
சிவா கடினப்பொருளகம்

Sify E-Port
ஸிஃபி ஈ-போர்ட்

Dhiraviyam Coffee Shop
திரவியம் கொட்டை வடி நீர்க் கடை

Raj Travel Agency
ராஜ் பயண முகவர் பணிமனை

தமிழ்ப் பெயர் வைக்கும், வைக்க தூண்டிய தமிழ் கூறும் நல்லுலகிற்கு நன்றி! (கடைசி வார்த்தை நன்றியை நாம் ஊர்த் திருவிழாக்களிலும், அனைத்து பண்டிகை காலங்களிலும் தவறாமல் பார்க்கும் சன், விஜய் போன்ற தொலைக்காட்சிகளிலும் இடம்பெறும் பட்டிமன்றங்களில் தனது கட்சி வாதத்தை எடுத்துரைத்த பிறகு முடிவாக சொல்லும் நன்றி போல மூன்று தடவை படிக்கவும்).

Monday, June 14, 2010

கார்த்திக்கின் காதலிகள் - Part 1

காலங்கார்த்தால கண்ணன் மாஸ்டரிடம் ஏ பிளஸ் பி ஹோல் ஸ்கொயர் ஈகுவல் டு ஏ ஸ்கொயர் பிளஸ் பி ஸ்கொயர் பிளஸ் டூ ஏ பி (மேற்கண்ட வாக்கியம் (a+b)2 = a2+b2+2ab என்ற கணித சமன்பாட்டை தமிழில் எழுதும் முயற்சி) படிக்க வரும் போது தான் கார்த்திக்கின் கண்கள் அவளை கிளிக்கி அவனுடைய பலவீனமான ந்யூரான்களின் அழியாத பாகத்தில் பலவந்தமாக சேமித்து வைத்தது. யாரோ அரசுக் கல்லூரி ப்ரொஃபசர் பொண்ணாம். ப்ரொஃபசருக்கு பெட்ரோல் பங்க், சூப்பர் மார்க்கேட்ன்னு ஊர்ல நிறைய பிசினெஸாம். ஏகப்பட்ட துட்டாம், பெரிய கையாம். ரெண்டு காரோட, குரோட்டன்ஸ், வைலெட்,சிகப்பு, மஞ்சள் என்று பல வண்ண வண்ண பூக்கள்  பூக்கும் ஒரு குட்டி பார்க்கோட ஐந்தாறு சுமோ ஃபைட்டர்கள் தோள் மேல் கைபோட்டு சேர்ந்து போற அளவுக்கு நிலைவாசல் வச்சு ரோஜா நகர்ல சினிமாக்களில் நடிக்கும் கொங்கு நாடு பங்களா மாதிரி ஒரு வீடாம்.

ஆட்டுக்கு இலை பறிக்கும் அலக்கு மாதிரி நெட்டையாக, அரிசி மூட்டைக்கு குட்டை பாவாடை கட்டிய மாதிரி, எப்போதும் தலையை சொரிந்து நகக்கண்ணில் ஈறு பார்க்கும் ட்யூஷன் பயிலும் மாணவிகளுக்கிடையில் வெள்ளிக்கிழமைகளில் தலை முழுகி, சாம்பிராணி  மணக்கும் முடியை நுனியில் கட்டி, உலராத முடியின் ஈரம் பாவாடையின் பின்னால்  சில உலக நாடுகள் போல மேப் வரைந்து நனைக்க, நெற்றியில் போன பாரா முடிவில் இருக்கும் முற்றுப்புள்ளிக்கு சற்று பெரியதான அரக்கு நிற சாந்து பொட்டுக்கு மேலே மெலிதான சந்தனக் கீற்றோடு வருபவளை பார்த்தாலே இதயம் சைலென்ஸர் கழன்ற சென்னை ஆட்டோ போல உள்ளே அலற ஆரம்பித்துவிடும். அந்த அல்ஜீப்ரா படிக்க வேண்டிய கணித காலை நேரங்களை 1+1=1 என்ற காதல் கணித நேரங்களாக மாற்றியவள் அவள். 'அம்மா'வுக்கு கருநீலம் அணிந்த கமாண்டோ படை போல குறைந்தது ஐந்து பேர் முழு சாலையையும் தர்ணா பண்ணிக்கொண்டு பழைய பஸ் ஸ்டாண்ட், கான்வென்ட் ரோடு, பிள்ளையார் கோயில் தெரு, மூணாம் தெரு, புதுத் தெருக்களை சைக்கிளால் புனிதப்படுத்திக்கொண்டு வந்துசேரும் அவளுக்கு பாதுகாப்பாக அவர்களுக்குள் பேசியபடியே அவள் பின்னால் ரோந்து வருவார்கள்.  காலடி மண் எடுத்து பூசிக்கொள்ளாதது தான் பாக்கி. அவ்வளவு பக்தி. பரீட்சை சமய இரவு நேர வகுப்புகளின் போது தெரு முனை வரை சென்று பாதுகாப்பாக வீடு அடைந்ததை உறுதிப் படித்திக்கொண்டு விட்டுதான்  தத்தம் வீடு திரும்புவார்கள்.  தேசப்பிதா காந்தி, முண்டாசுக் கவி போன்றோர் இருந்தால் இந்தப் 'பெண் மரியாதை' பார்த்து ஆனந்தக் கூத்தாடுவர். இந்தப் பொது சேவையிலிருந்து ஒருநாள் கூட இவர்கள் தவறியதாக தெரியவில்லை. காலை ஆறு மணி சிறப்பு வகுப்புக்கு டி.வி.எஸ் 50 யில் வந்திறங்கி அந்த ஈர மணலில் ஸ்டாண்ட் போட முடியாமல் அவள் தவிக்கும் போது தடாரென்று விழுந்தால் உடையும் நிலையில் இருக்கும் சைக்கிளை சடாரென்று கீழே போட்டுவிட்டு கர்மசிரத்தையாக ஆத்மசுத்தியுடன் வந்து அவள் வண்டிக்கு ஸ்டாண்ட் போட்டு தொண்டாற்றுவர்.

மாஸ்டர் "ஊர்மிளா நீ சொல்லு" என்று கேள்வி கேட்கும் போது எழுந்து நின்று அவள் பதில் தந்தாலும், தராவிட்டாலும் அழகு. தந்தால் அந்த "சார், அது லைக்..... இஃப் யூ ஆட் டூ பிளஸ்.... " என்ற தமிங்க்லிஷ் அழகு, தராவிட்டால் இருமருங்கும் உருண்டு புரண்டு தவித்து பதிலுக்கு கேள்வி எழுப்பும் அந்த கோலிகுண்டு கண்ணின் மொழி அழகு. "உங்க நோட்டை தரீங்களா, நா கொஞ்சம் காப்பி பண்ணிட்டு தரேன், ப்ளீஸ்..." என்று ஒரு நாள் கேட்டபோது பக்கத்தில் ஆயிரம் பேர் நின்று ஆர்க்கெஸ்ட்ரா வாசித்தது போல் இருந்தது கார்த்திக்கு.   அவளின் அந்த 'கன்னி'ப் பேச்சு கேட்ட கணத்தில் கார்த்திக்குக்கு கடவுள் பார்த்த பக்தன் போல கையும் காலும் ஓடவில்லை. அப்போது யாராவது அஞ்சும் மூனும் எவ்வளவு என்றால் ஒம்போது என்று சொல்லியிருப்பான்.

"அவ என்னடா பெரிய ஆளா, முன்னாடி ரெண்டு சிங்கப்பல்லு நீட்டிகிட்டு இருக்கு" என்று சக ட்யூஷன் மாணவன் மூன்றாம் தெரு முரளி கேட்டவுடன் அவன் பல்லை தட்டி கையில் கொடுக்கும் கோபம் வந்தாலும் அவள் கண்ணெதிரே இருந்ததால் முரளி தப்பித்தான். கோபத்தை அடக்கிக்கொண்டு  "அவள் தெத்துப் பல்லுக்கு என் சொத்தையே எழுதி வைக்கலாண்டா" என்று வாயிலிருந்து ஜொள் ஒழுக உதார் விட்டான்.  ஒரு செவ்வகத்தின் பரப்பளவு பார்முலா கூட சட்டென்று சொல்லத் தெரியாதவன் அவள் சிரிக்கும் போதெல்லாம் அந்த பல்லின் அழகை ரசித்து அதன் நீளம், உயரம், அகலம் ஆகியவற்றை தூக்கத்தில் எழுப்பி கேட்டாலும் சொல்லுமளவுக்கு கணிதத்தில் முன்னேறிவிட்டான். அவளை முன்னும் பின்னும் காலையும் மாலையும் சுற்றி சுற்றி சுற்றளவு கணிதங்கள் கூட கற்றுக்கொண்டான்.

அந்த இரண்டு வருட 'சிறப்பு' வகுப்புகள் முடிந்தபின், ஊர்மிளா வீட்டு ரோடை முன்னும் பின்னும் சைக்கிளில் சென்று அரசாங்க சர்வேயர் போல அளந்தான். ஒரு நன்னாளில் அவளுக்கு திருச்சியில் அம்மன் பெயர் கொண்ட ஒரு பொறியியல் கல்லூரியில் இன்ஜினியரிங் சீட் கிடைத்து ப்ரொஃபசர் திருச்சியோடு  ஜாகை மாற்றுவதாக கேள்விப்பட்டான். பதில் படுவதற்காக மறுநாள் போன போது அந்த வீட்டில் 'ஆள்' நடமாட்டமே இல்லாமல் வாசல் செக்யூரிட்டி யாரோ ஒரு கொண்டை போட்ட பெண்ணிடம் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தான். அப்புறம் கார்த்திக் எங்கேயோ ஏதோ ஒரு கிராமத்தின் வயல்வெளியில் அரை கி.மீ நடந்த சென்று படிக்கும் ஒரு கலைக் கல்லூரியில் இளங்கலை அறிவியல் படிப்புக்கு சேர்ந்தான்.  நான்கு வருடம் கழித்து ஆட்டோகிராப் சேரன் போல ஊருக்கு வந்து விசாரித்ததில் ப்ரொஃபசர் தலையில் கல்லைத் ( "அடிப்பாவி தலையில 'கல்லை' தூக்கி போட்டுட்டியேடி"- என்று காதல் சம்பவம் கேட்டு கதறும் பெற்றோர் வசனத்தில் வரும் அந்தக்  'கல்')   தூக்கி போட்டுவிட்டு, தன்னோடு படித்த ஒரு அழகாக இருக்கும்  நுனி கிளையில் உட்கார்ந்து அடிக்கிளையை வெட்டும் ஒருவனுடன் ELOPED என்று தெரியவந்தது. ஒருதலைக் காதலன் கார்த்திக் இந்த செய்தியறிந்து அந்த அடிமுட்டாளுடன் தன்னை ஒப்பிட்டு தற்காலிகமாக சிறிது நாள் ஒரு வாடகை வீட்டில் அவளுடன் கற்பனையில் குழந்தை  குட்டிகளுக்கு கிலு கிலுப்பை காட்டி ஆட்டி குடும்பம் நடத்தினான். 

பட உதவி: http://www.zazzle.com/she_took_my_heart_away_tshirt-235354443170477879

(Q வரிசையில் நிற்கும் கார்த்திக்கின் காதலிகள் இன்னும் வருவார்கள்)

Saturday, June 12, 2010

கல்யாணமான பெண் யார்?

 கல்யாணமான பெண் யார்?


மேற்க்கத்திய நாடுகளில் லிட்டில் ஜானி ஜோக்குகள் மிகப் பிரபலமானவை. இந்த ஜோக் அசைவ வகையறா. சைவப் பிரியர்கள் இதற்குமேல் படிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வகுப்பறையில் பாடங்களை கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தான் லிட்டில் ஜானி. வகுப்பெடுத்துக்கொண்டிருந்த மேடம் லிட்டில் ஜானியிடம் கீழ் கண்ட கேள்வியை கேட்டார்.

"ஜானி, ஒரு லாம்ப் போஸ்ட் வயர்-ல மூனு பறவைங்க உட்கார்ந்துகிட்டு இருக்கு. ஒரு வேடன் துப்பாக்கி எடுத்து ஒரு பறவையை சுட்டுட்டான். மீதி எவ்வளோ பறவை இருக்கும்?"

"ஒன்னும் இருக்காது மேடம்"

"எப்படி?"

"துப்பாக்கி சத்தத்துல பயந்து பறந்திருக்கும்"

"விடை தவறு. மீதி இரண்டு பறவைகள் இருக்கும். ஆனா, நீ சிந்திச்ச விதம் எனக்கு பிடிச்சிருக்கு" என்றார் மேடம்.

பதிலுக்கு ஜானி மேடத்தை ஒரு கேள்வி கேட்டான்.

"ரோடுல மூனு பொம்பளைங்க கோன் ஐஸ்க்ரீம் சாப்பிட்டுகிட்டே போறாங்க. ஒரு பொம்பளை லேசா கடிச்சு கடிச்சு சாப்பிடறா, ரெண்டாவது பொம்பளை நாக்கை வெளியே நீட்டி பூனை தட்டுல பாலை குடிக்கிற மாதிரி சாப்பிடறா, மூனாவது பொம்பளை பெரிய வாழப்பழத்தை தோலை உறிச்சி சாப்பிடற மாதிரி சாப்பிடறா. இந்த மூனு பொண்ணுங்கள்ள யார் கல்யாணம் ஆனவங்க?

கொஞ்சமா அதிர்ச்சியான புருவத்தை உயர்த்திய ஆசிரியர் மேடம், சுதாரித்துக் கொண்டு  "மூனாவது பெண்" என்றார்.
லிட்டில் ஜானி சிரித்துக் கொண்டே
"தப்பு மேடம். எந்தப் பொண்ணு கைவிரல்ல கல்யாண மோதிரம் இருக்கோ அந்தப் பொம்பளை தான் கல்யாணம் ஆனவ. ஆனா, நீங்க யோசிச்ச விதம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு மேடம்" என்றான்.

Wednesday, June 9, 2010

காதல் நரம்பு

scifi


"எவ்வளவு ஆவும்?"
"அம்பது கோடி"
"அம்பது கோடி? டூ மச். ரொம்ப ஜாஸ்தி"
"அந்த காலத்த நினைச்சு பாரு...இது மாதிரி முடியுமா? பாத்து, பேசி, பழகி...."
"இருக்கலாம்.. ஆனாலும் இது ரொம்ப ஜாஸ்தி.."
"இதுக்குதான் அம்பது கோடி.. வேற ஏதாவது காமி ரேட் குறையுமான்னு பார்க்கலாம்"
"நானே போய் பேசிப் பார்த்துடலாம்.."
"நாங்களா தடுக்கறோம்.. போய் பாருங்க.."
"கொஞ்சம் பார்த்து சொல்லுப்பா..." என்று ஐம்பதாவது முறையாக மண்டியிட்டு கேட்காத குறையாக கேட்டுவிட்டேன். ஆசை யாரை விட்டது. இந்த விலை படியாத போதுதான் பல இளைஞர்கள் விர்சுவல் ரியாலிட்டிக்கு போயிடறாங்க.

"இங்க பாருப்பா கௌஷிக்... நீ நரசுக்கு தெரியும்னு தான் இந்த ரேட்டு.. முடியாதுன்னா விடுப்பா.. கவர்ன்மென்ட்டுல கூட ஏக கெடுபிடியா இருக்கு.. இதுக்கு தண்டனை என்ன தெரியுமா? HPZ(Highly Polluted Zone) ஜெயில்ல ஆறு மாசம். பழைய பாட்டரி, இருபதாம் நூற்றாண்டு கம்ப்யூட்டர் மானிடர், இத்துப்போன டி.வி, எலெக்ட்ரானிக் ஐட்டங்கள் எல்லாத்தையும்  ரீ-சைக்கிள் பண்ற இடம். உள்ள இருந்துட்டு வந்தா தெரியும். இந்த இந்தப்பக்க காதும் அந்தப்பக்க கண்ணும் ஏன் இப்படி கருப்பா சூம்பிப் போன மாதிரி இருக்கு தெரியுமா? போன ஜூன்ல போயிட்டு வந்தேன்.. அதனாலதான்.."

புரோக்கர் கறார் பேர்வழி. கொஞ்சமும் இறங்குவதாக இல்லை. ஆதி காலத்தில் ஏதோ கல்லாம், ஊருக்கு வெளியே இருக்குமாம். பேரு இளவட்டக் கல்லாம்.தலைக்கு மேலே தூக்கி  நிரூபிச்சா போதுமாம். அப்படி இருந்தா எவ்வளவு ஈசி. போன வாரம் ப்ரௌனி வீட்டுல கூட ஏதோ பழைய படத்துல அந்த காலத்துல போட்டுகிற வெள்ளை வேஷ்டி சட்டை போட்டுக்கிட்டு ஒரு வயசான ஆளு அந்த மாதிரி ஒரு பெரிய கல்லை எடுத்து அந்தண்டை போட்டுட்டு ஒரு சிரி சிரிச்சுட்டு போனார். படம் பேரு சரியா தெரியலை, ஏதோ "மல்லு வேட்டி கட்டி இருக்கு.. அதுல மஞ்ச வந்து ஒட்டிக்கிச்சு" அப்பிடின்னு ஒரு பாட்டு பாடிச்சு.  

ஆனா இந்த மெதட் இப்பதான் லேட்டஸ்ட் ஹிட் ஆயிருக்கு. 100% கியாரண்டி. நாம நினைச்சதை நிச்சயமா அடையலாம். போன வாரம் அந்த ஒட்டடை குச்சி நரசிம்மன் கூட நூறு மாடி "Splendor" பஜார் முழுவதும் பளபளக்க ராஜநடை போட்டு கைகோர்த்து கூட்டிட்டு போனபோது பாதிபேர் இரை விழுங்க வாய்திறக்கும் முதலை மாதிரியும், உள்நாக்கு தெரியும்படியும் "ஆ" காட்டி கண்ணால் பார்த்ததை நெஞ்சுக்குள் விழுங்கினார்கள். யாரோ நகாசு வேலை நன்றாக தெரிந்த பயோ டெக்னாலஜிஸ்ட் தான் இப்படி திறமை முழுவதும் காண்பித்து விளையாடியிருக்கவேண்டும். எல்லாமே ஒரு மில்லி மீட்டர் குறையாம பார்த்து பார்த்து அளந்து செஞ்சு அசெம்பிள் பண்ணினாமாதிரி. 

நான் முடிவு செய்து விட்டேன், அடைந்தால் அனாமிகா இல்லையேல் விஷ காஸ் ஸ்டேஷன் சென்று ப்ராணஹத்தி செய்துகொள்வதென்று. இப்படி தன்னுயிரை மாய்த்துக்கொள்ள ஏதுவாக மக்களுக்காக ஊருக்கு ஒன்றாக அரசு அமைத்திருக்கும் "விஷ வாயு கொட்டகை' க்கு ஒரு நன்றி. சிடிசன் கார்டை பிளாக்-ல் விற்றால் ஐம்பது கோடி கிடைக்கலாம். "காதல் நரம்பு" ஊசியை அந்த புரோக்கர்  உதவியுடன் அவளுக்கு ஏற்றிவிட்டால்,  நம்மை பார்த்தாலே அவளுக்கு காதல் சுரக்கும். இந்த நூற்றாண்டில் நானும் நிஜ காதல் கொண்டேன் என்று எல்லோரிடமும் பிராட்காஸ்ட் செய்துகொள்ளலாம்.

ஸிந்தெடிக் ரோடில் டிராஃபிக் அதிகமாக இருந்ததால் தன்னுடைய எரிவாயு இருசக்கர வாகனத்தில் 'Flight Mode' அழுத்தி லேன்ட் ஆகும் விமானத்தில் அடிபடாமல் ஒரு 'கட்' கொடுத்து லோ பிளையிங்கில் ஆகாய மார்கமாக சிடிசன் கார்டை பிளாக் மார்க்கெட்டில் விற்க பறந்தான் கௌஷிக். 

இந்த சம்பவம் நடந்த 3030 AD யில் வெகுஜனங்கள் Virtual Reality -இல் கல்வி, காதல், கலவி மூன்றையும்  பெற்றார்கள். கௌஷிக் போன்றோர் ஒரு உயிரோட்டமுள்ள பெண் கழுத்தில் இருக்கும் காதல் நரம்பில் ஏவப்படும் அவர்கள் பற்றிய தகவல் அடங்கிய ஊசியால் உயிர்க்காதல் தமக்கு வாய்க்கப்பெற்றார்கள்.

பின்குறிப்பு: இது என்னுடைய சயின்ஸ்  பிஃக்ஷன் கதை எழுதும் 'கன்னி' 'கண்ணா' முயற்சி.

 படஉதவி: http://www.sciencefictiondestiny.com/

Monday, June 7, 2010

பள்ளிக்கூடம் போகலாமா....


ஆறு மணிக்கு "செல்லம் எழுந்திரு....எழுந்திரு ..... ஸ்கூலுக்கு  லேட் ஆயிடிச்சு" என்று "கொக்கரக்கோ" கூவி அறிதுயிலெழுப்பி, கோல்கேட் பிதுக்கி சிபாகாவில் இட்டு, "பூச்சி வரும்" பயமுறித்தி ஒழுங்காக பல் விளக்கச் சொல்லி, அரை பக்கெட் தண்ணீர் ஊற்றி "ஆ ஜில்லா இருக்கு.."(நேற்று மழை உபயம்), கொஞ்சம் சுடுதண்ணீர் கலந்து, மீண்டும் மேலுக்கு ஊற்றி, டவ் தேய்த்து மீண்டும் ஒரு முழு பக்கெட் ஊற்றி சோப்பு அலம்பி, தேங்காய்ப்பு டவல் கொண்டு துவட்டி, உள்ளாடைகள் உடுத்தி, கொஞ்சம் கொஞ்சம் ஆவி ,பிசாசெல்லாம் பறந்த இட்லியை "சூ... சூ..." ஊதி அவசரம் அவசரமாக வாயில் திணித்து, தொண்டையில் அடைத்து இருமும் போது வாயில் தண்ணீரும் சேர்ந்தே கொடுத்து,  "ஊம் சீக்கரம் தின்னு... பஸ் வந்துடும்" அதட்டி, திரும்பவும் "இயற்கை" அழைக்கிறதா என்று கேட்டு அதற்க்கு விட்டு, பஜாஜ் அல்மான்ட் ட்ராப்ஸ் தலைக்கு இட்டு வாரி இரு பின்னல் போட்டு, வெள்ளை ரிப்பன் கொண்டு மடக்கி கட்டி, புது யூனிபாஃர்ம் மாட்டி, பெல்ட்டை ஒரு லூப்பில் மாட்டாமல் திரும்பி உருவி லூப்பில் நுழைத்து மாட்டி, வலது கால் இடது கால் மாற்றாமல் சரியாக சாக்ஸ்ஸும் வெள்ளை கான்வாஸ் ஷூவும் மாட்டி, தோளில் புது "பேக்பாக்" தொங்கவிட்டு.....

.................இவர்களுக்கு கொக்கரக்கோ கூவுவதற்கு முன்னரே எழுந்திருந்து டப்பர்வேர்  கட்டி, பள பள வாக்ஸ் தடவிய வாஷிங்டன் ஆப்பிள் தோல் சீவி நறுக்கி ஸ்நாக்ஸ் ஆக வைத்து, தண்ணீர் போத்தல்கள் நிரப்பி.....

மேற்கண்ட பாராக்கள் சமாச்சாரங்களை என்னுடைய இடதுபாகம் இருமுறை ரிபீட் (எனக்கு ரெண்டு பசங்க..)  செய்தபோது நானும் ஒரு கை கொடுத்து எல்லாம் செய்து பஸ் ஸ்டாப் சென்று, வராத பஸ்சிற்கு இருபது நிமிடங்கள் காத்திருந்து, பஸ் டிரைவருக்கு போன் அடித்து, "நாங்க அங்க வந்துட்டு போய்ட்டமே சார்" கேட்டு, அடித்து பிடித்துக் கொண்டு காரில் ஏற்றி ஐந்து கிலோமீட்டரில் பஸ்ஸை பிடித்து "என்னப்பா ஹரி?" கேட்டு அவர் "நின்னு பார்த்தேன் சார்" என்று சூடம் அணைக்காமல் சொல்லி, குலுக்கல் முறையில் ஹமாம் வீடு பரிசாக கிடைத்த வெற்றியுடன் பஸ் ஏற்றி விட்டுவிட்டு வீடு வந்து சேர்ந்தபோது பக்கத்து வீட்டு மாமா "பசங்களுக்கு ஸ்கூல் தொறந்தாச்சு போலருக்கு.." என்று வழக்கமான சிரிப்போடு  கேட்டார்.

பட உதவி: http://all-free-download.com/graphic/vector-file/vector-clip-art/back_to_school_clip_art_22824.html

Sunday, June 6, 2010

பாவப்பட்ட புள்ள...

இந்தப் படம் 18+ ஆ இல்லையான்னு தெரியலை. நெட்டுல பின்பக்கம் பார்த்த எனக்கே பயங்கரமா இருந்தா நேர்ல முன்பக்கம் பார்த்த அந்தப் பச்சப்புள்ளைக்கு எப்படி இருக்கும்... தரிசனத்தோட அதிர்ச்சியில அந்தப் பையனோட ரியாக்ஷனைப்  பாருங்க... பாவம்.. இதுக்குமேல எனக்கு ஒன்னும் எழுத வரல....


இந்தப் படப்புதையல் கண்டெடுக்கப்பட்ட இடம்:
இது புள்ள பட்ட பாட்டை எல்லோரும் தெரிஞ்சிக்கணும்னு  நீங்க விருப்பட்டா உங்க ஓட்டை "கீழ" குத்துங்க....
http://i.imgur.com/D7UCP.jpg

Saturday, June 5, 2010

கசப்பான உண்மை

இன்று உலக சுற்றுப்புற சூழல் நாள். நவீன சினிமா படங்களுக்கு தலைப்புக்கு கீழ் பஞ்ச் வாக்கியம் வைப்பது போல இந்த வருட சுற்றுப்புற சூழல் நாளுக்கு ஒரு பஞ்ச்சான கருப்பொருள்  "பல உயிரினம், ஒரே கோள்,  ஒரே எதிர்காலம்" என்பது. யு.என் செக்ரெட்டரி ஜெனரல் பான்-கி-மூன் விடுத்துள்ள உலக சுற்றுப்புற நாள் செய்தியில் "பாம்பு, தவளை பல்லியிலிருந்து கொரில்லா வரை, பெரிய தாவரங்களிலிருந்து சிறிய பூச்சிகள் வரை, பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் ஆபத்தில் உள்ளன" என்று தெரிவித்திருக்கிறார். சுற்றுச் சூழல் மாசுபடுதலால் நிறைய உயிரினங்கள் வேரோடு அழிந்து வருகின்றன, நமது தேசிய விலங்கான புலியை காப்பதற்கு சிங்கம் சூரியா கூட டி.வி சானல்களில் வந்து காப்போம் என்று உறுதிமொழி எடுத்துக்கொள்ள வற்புறுத்துகிறார்.   இந்த நாளில் இந்தியர்களாகிய நாம் என்னவெல்லாம் செய்யக்கூடாது என்பதை முதலில் தெரிந்துகொள்வோம். பிறகு அமுல்படுத்துவோம். பின்வருவனவற்றில் சிலது பிளாஸ்டிக் கழிவு போன்ற மாசு சமாச்சாரங்கள் சிலது நம்மவர் பாடிய "சொர்க்கம் என்பது நமக்கு"கை தக்க வைத்துக்கொள்ள நாம் தவிர்க்கவேண்டியவை.

ewaste


தொலைபேசி ஜங்க்சன் பாக்ஸ் பின்னால், ஈ.பி டிரான்ஸ்பார்மர் கீழ், ஆளில்லா ரோட்டோரம், விளக்கில்லா தெருமுனைகள் போன்ற இடங்களில் அற்ப சங்கைக்கு ஒதுங்காமல் இருப்பது மற்றும் ஓடும் ரயிலுக்கு பின்புறம் காண்பித்து தண்டவாளம் ஓரம் வெட்கப்படாமல் உட்காருதல் போன்றவற்றை தவிர்ப்பது.

தீபாவளி காலங்களில் ஏதோ சம்ப்ரதாயத்திர்க்கு ஒன்றிரண்டு பட்டாசு கொளுத்தி மகிழ்வது. கிருஷ்ணர் நரகாசுரனை கொன்றுவிட்டு ஸ்டாண்டர்ட் பட்டாசு கொளுத்தவில்லை, கொளுத்தும்படியும் சொல்லவும் இல்லை. சன், ஜெயா, விஜய் ராஜ், கலைஞர் என்று ஒரு ரவுண்ட் வந்தால் தீபாவளி ஓடிவிடும்.

நாடார் கடைக்கு சென்று இரண்டு எவரெடி பென்டார்ச் பாட்டரி வாங்கினால் கூட கருப்பு கலர் காரி பாகில் போட்டுத் தரச் சொல்லி அழும்பு பண்ணக் கூடாது. நாயர் கடையில் அந்த அரை அவுன்ஸ் டீயை பிளாஸ்டிக் டம்ப்ளரில் வாங்கிக் குடிக்கக் கூடாது. ஐயங்கார் பேக்கிரியில் ஐம்பது கிராம் பக்கோடவுக்கு ரோஸ் கலர்  பை போட்டுத் தா என்று அடம் பிடிக்கக் கூடாது. கையில் பை எடுத்துச் செல்வதை அகௌரவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மயிலாப்பூர் பண்ட் ஆபீஸ் காய்கறி மார்கெட்டில் எவ்வளவோ வயதான மாமாக்கள் தோளில் துணிப்பையோடு அந்த கால படங்களில் வரும் ஜர்னலிஸ்ட் மாதிரி உலவுவதை நாம் பார்க்கலாம்.

சினிமா தியேட்டர் படிக்கட்டு, அனைத்து அரசு அலுவலகங்கள் படிக்கட்டு மூலைகள், நடு ரோடு, பஸ் ஜன்னல்கள் போன்றவற்றில் புகையிலை சேர்ந்த பான்பராக் மற்றும் வெற்றிலைச்சாறை "புளிச் புளிச்" துப்பி வைக்கக்கூடாது. சென்னையில் ஒரு அரசு அலுவலகப் படிக்கட்டை துப்பியே சிகப்பு வர்ணம் தீட்டியிருந்தார்கள்.

இ-வேஸ்ட் என்ற எலக்ட்ரானிக் வேஸ்ட் சமாச்சாரமும் இப்போது அழுக்கு ஜீன்ஸ் அணிந்து இந்தியாவில் இருந்துகொண்டு அமெரிக்க நேரத்திற்கு உழைக்கிற கார்பேஜ் இன் கார்பேஜ் அவுட் துறையில் மிகப் பிரபலமான வார்த்தை.  உபயோகித்த பழைய கம்புட்டர் மற்றும் ஸி.ஆர்.டி மானிடர் பெட்டிகளை எப்படி நாம் ஆயுதபூஜையன்று ஆபிசிலிருந்து ஒழிக்கிறோம் என்பது பற்றியது. இந்த பழைய பொட்டிக்கு பேரிச்சம் பழம் கிடைக்கும் ஆசையில் இதை எங்கோ கொண்டு கொட்டிவிடுகிறோம். ஆனால் இதில் உள்ள ஈயம், பாதரசம் மற்றும் காட்மியம் போன்ற பொருட்களால் சுற்றுச் சூழல் மிகவும் மாசுபடுகிறது.

இந்த சுற்றுச்சூழல் மாசுபடுவதை பற்றிய அமெரிக்க முன்னாள் உதவி ஜனாதிபதி அல் கோரின் An Inconvenient Truth ஒரு அட்டகாசமான படம்.


யூட்யூபில் இலவசமாகவே காணலாம். 
இந்தப் படம் சொல்வதைத்தான் இந்தப் பதிவும் சொல்ல ஆசைப்பட்டது.
 
பட உதவி: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ். http://www.expressbuzz.com

Friday, June 4, 2010

எஸ்.பி.பி சொன்ன காதல் கதை

என்னுடைய ஆதர்ஷ பாடகர் பாடும் நிலா பாலுவின் பிறந்தநாள் இன்றைக்கு.  வித்தியாசமான முறையில் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லும் விதமாக சட்டென்று நினைவுக்கு வந்த அவர் பாடிய சில பாடல்கள் மூலமாக ஒரு காதல் கதை சொல்லிப்பார்த்தேன், பச்சை வண்ண குண்டு எழுத்துக்களில். கதைக்கு போவோமா?


இன்று காலையில் எழுந்தவுடன் இப்படி ஒரு இன்ப அதிர்ச்சி கிடைக்கும் என்று நினைக்கவில்லை கார்த்திக். நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில் என்றாகும்படியாக காயும் கத்திரியில் குளிர் நிலவாக எதிர் வீட்டு வாசலில் படைத்தானே பிரம்ம தேவன் பதினாறு வயதுக் கோலம் நின்று  தலை சாய்த்து விரித்து கைகளை கோதி (இப்போது நான் பூவெடுத்து வைக்கணும் பின்னால... என்று நினைத்துக்கொண்டான்) காய வைத்துக்கொண்டிருந்தாள் மஞ்சள் பாவாடை பச்சை தாவணி அணிந்த நித்யா. மெதுவாகவும் இதமாகவும் அடித்த தென்றலை கண்டு மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே நீ ஆடையில் ஆடினால் மன்மதன் விளையாட்டே என்று கற்பனை செய்துகொண்டு காமனை நிந்தித்தான் கார்த்திக். அவளுக்கு அந்த இளங்காற்று தென்றல் என்னை முத்தமிட்டது போலாகியது. அவளைத் தொட்ட காற்று அவனைத் தொடும் போது பூங்காற்று உன் பேர் சொல்ல கேட்டேனே இன்று என்று மெதுவாக சொல்லிக்கொண்டான். பின்னால் ஏதோ ஒரு எஃப்.எம் ஸ்டேஷன் ரேடியோ  நீல வான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா பாடியது. "நித்தூ..." என்ற அம்மாவின் அழைப்பிற்கு "இதோ வந்துட்டேம்மா...." என்று  பாடிப் பறந்த குயிலின் கடைக் கண்களில் இளமனது பலகனவு விழிகளிலே வழிகிறதே என்றுணர்ந்தான் கார்த்திக்.

கல்லூரி வாகனத்திற்காக கடைவீதியில் காத்திருக்கும் போது நம்ம கடைவீதி சும்மா கலகலக்கும் என்று கிண்டலடித்து பாடிய பாஸ்கரிடம் அவள் ஒரு பச்சைக்குழந்தை பாடும் பறவை பருவம் பதினாறு என்றான் கார்த்திக். தன்னை கண்டும் காணாதது போல போன நித்யாவைப் பார்த்து கேளடி என் பாவையே பாட வேண்டும் போல இருந்தது அவனுக்கு. பேருந்தின் இடது கைப்பக்கம் கார்த்திக்கும் வலது கைப்பக்கம் மகளிர் வரிசையில் நித்யாவும் பாடம் படிக்க கல்லூரி செல்லும்போது ஒரு ஜோடி சேர்ந்து செல்லும் பயணங்களில் என்று சரணம் பாடும் என் கண்மணி உன் காதலி இளமாங்கனியை கற்பனை செய்துகொண்டான். காலையில் இருந்தே குளிர்த் தென்றல் வீசி தேன் சிந்துதே வானமாகி சற்று தனது பூவாளியை திறந்து விட்டது. மழையும் நீயே வெயிலும் நீயே என்று அந்த கரு நீலக் கண் ரெண்டும் பவழமாக இருக்கின்றவளைப் பார்த்து மருங்கினான். தன்னிடம் இன்னமும் வாய் திறக்காதவளைப் பார்த்து மலரே மௌனமா என்றான்.

எந்தப்பெண்ணிலும் இல்லாத ஒன்று அவளிடம் இருந்ததால் ஒரு காதல் என்பது உன் நெஞ்சில் உள்ளது, உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி என்று இவன் நெஞ்சில் இருந்ததை மாலை வீட்டிற்கு பஸ் ஏறும் போது முதன் முதலாக காதல் டூயட் பாட வந்தேனே என்று சொல்லிவிட்டான். காதெலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் கார்த்திக் காதலே என் காதலே என்னை என்ன செய்யப் போகிறாய் என்று தவித்தான். மீண்டும் மாலையில் பன்னீர் மேகம் தூறல் போடும் போது அந்தி மழை பொழிந்து ஒவ்வொரு துளியிலும் அவள் முகம் தெரிந்தது. மாலை கடைத்தெருவிற்கு தன்னை கடந்து செல்லும் போது சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி என்று கேட்டுக் கொண்டிருந்தான். சின்னராசு ஜூஸ் கடையில் நின்றிருந்த பாஸ்கர் நித்யாவிடம் சிரித்தும் கையை பிடித்தும் பேசும்போதுதான் தெரிந்தது இவ்வளவு நாளாய் உன்னை நினச்சேன் பாட்டு படிச்சேன் அப்புவாக அவன் இருந்தது.

என்னை காணவில்லையே நேற்றோடு என்று புலம்பிய கார்த்திக்குக்கு அடுத்த இரண்டு நாளில் நிச்சயாதார்த்தம் முடிந்து அவளின் கல்யாண சேதி கேட்டது. அதிலிருந்து வாழ்க்கை வெறுத்துப் போனவனன் சத்தம் இல்லாத தனிமை கேட்டான். இப்படி இவன் பித்துப் பிடித்து திரிந்த காலத்தில், ராத்திரியில் பூத்திருக்கும் தாமரையாக அவளை பாவித்து வளையோசை கல கலக்க பாஸ்கர் அவள் இதழில் கதை எழுதும் நேரத்தில் கார்த்திக் உச்சி வகுந்தெடுத்து பிச்சி பூ வச்ச கிளி பச்சைமலை பக்கத்துல மேயுதுன்னு சொன்னங்க என்று சிவகுமார் கணக்காக பாடிக்கொண்டிருந்தான்.

Happy Birthday SPB Sir. Wish you Many More Happy returns of the Day.

Thursday, June 3, 2010

மைக்ரோஸாஃப்ட் வழங்கும் சிரிப்பிற்கான சர்டிபிகேட்

Microsoft Certified Sirippu Professional    (MCSP)

ஜன்னல் தயாரிக்கும் கேட்ஸ் நகைச்சுவையுணர்வை வகைப்படுத்தி மைக்ரோஸாஃப்ட்  எஜுகேஷன் வலைதளத்தில் வெளியுட்டுள்ள ஒரு அட்டவணை என்னை கொஞ்சம் பாடாய் படுத்தியது. மின்சார அவனில் ஷாக் அடிக்காமல் சாப்பிடும்படி சமைப்பதற்கு, கால் கியர் உள்ள இரண்டு சக்கர வாகனத்தை இரு கை பிடித்து எதிரே வரும் மாமி மேல் விடாமல் ஓட்டுவதற்கு, "வாட் இஸ் யூவர் நேம்?" என்று கேட்டால் மூச்சு விடாமல் பேசி எதிராளி மூர்ச்சை ஆகும்படியாக நன்றாக வாயாடியாவதர்க்கு, மார்கழி மாதம் மட்டும் முதல் நாள் இரவே கோலம் போடுவதற்கு, கை காலை வானத்திற்கும் பூமிக்குமாக அசைத்து உடற்பயிற்சி என்று ஒன்று செய்வதற்கு, பொது இடங்களில் அனகோண்டா மாதிரி வாயை திறந்து எட்டூருக்கு கேட்கும்படி "ப்ஆ...ப்ஆ" என்று ஏப்பம் விடாமல் சாப்பிடுவதற்கு, நாய் குளிப்பாட்டுவது எப்படி?, புடவை தோய்த்தும் வீடு பெருக்கியும் கூட எப்படி பொண்டாட்டியிடம் அடி வாங்காமல் இருப்பது என்பதற்கு, மேலை நாட்டு பாணி கக்கூசுகளில் இரண்டு காலையும் கம்மோடு மேலே தூக்கி வைக்காமல் மலஜலம் கழிப்பதற்கு என்று ஒன்றுவிடாமல் எல்லாவற்றுக்கும் புத்தகம்/குறிப்புகள் போட்டது பத்தாமல் பல் காட்டி சிரிக்கத்தெரிந்த ஒரே விலங்கான மனிதனை அந்த விதத்திலும் வகை தொகை படுத்தியுள்ளது மைக்ரோசாப்ட். மொத்தம் நான்கு வகையறாக்கள். சாதாரண ஆள், மத்திம ஆள், முன்னேறிய ஆள், கை தேர்ந்த ஆள்.  என்னவென்று பார்ப்போம். இதற்க்கு கீழே அவர்களது அட்டவணை.

சாதாரண ஆள்:
  1. "ஈச்சட்டி தலையா, தேங்கா மண்டையா" என்றெல்லாம் திட்ட மாட்டார்கள்.
  2. கழிவறையிலிருந்து வெளிவரும் கவுண்டரை செந்தில் போல் "என்னன்னே சாப்டாச்சா?" என்று கேட்க மாட்டார்.
  3. மயான அமைதியும் கோபம் கொப்பளிக்கும் இடங்களில் புன்னகை மன்னன் சாப்ளின் கணக்காக சேஷ்டைகள் செய்து உக்கிரத்தை குறைப்பார்.
  4. கீழ்ப்பாக்கம் கேஸ் போல "ஹி... ஹி ..." என்று ப்ளாட்பாரம்களில் தனியாகவும் எதிர் ஆளை பார்த்தும் சிரிப்பார்.

மத்திம ஆள்:
  1. ஒரு பெரிய கும்பலை "அது அவ்வளவு பெருசு.." என்று 'கெட்ட' காரிய ஜோக்குகள் சொல்லி ஒன்றுபடுத்துவார்.
  2. பொண்டாட்டி வீட்டை விட்டு  ஓடிப்போனவரை பார்த்து "இன்று உன்னுடையது நேற்று மற்றொருவனிடம் இருந்தது" என்று கீதை சொல்லி இன்னொருவனிடம் இருந்து உங்களுக்கு கிடைக்கும் என்று சமாதானப்படுத்துவார்.
  3. விழுந்து விழுந்து சிரித்து அரை வேஷ்டி நழுவி கீழே விழும்படி செய்து  டியர்ட் ஆக்குவார். 
  4. காதில் "சேம் ப்ளட்" சொல்லும் வடிவேலுவிடம் தலையில் டீ ஊற்றி அசிங்கப்படும் விவேக் போல இருப்பார்.

முன்னேறிய ஆள்:
  1. செத்த வீட்டில் கெக்கேபிக்கே என்று சிரிக்க மாட்டார். "உனக்கு மட்டுமா பொண்டாட்டியா இருந்தா..ஊருக்கே... " என்று செந்தில் போல கதை பேச மாட்டார்.
  2. ஐயா மேல படுத்திருக்கார் என்று சொல்லும்போது நான் அப்புறம் பேசறேன் சொல்லும் எஸ்.வீ.சேகர் போல இருப்பார்.
  3. எங்கே ஜோக் சொன்னால் செருப்படி விழும் விழாது என்று நன்றாக தெரிந்து வைத்திருப்பார்.
  4. மேடை போட்டு கும்பல் கூட்டி சிரிப்பது கூட்டத்திற்கு உகந்தது என்று புரிந்து வைத்திருப்பார்.

கை தேர்ந்த ஆள்:
  1. நான், நீ, நாய், பூனை, சாமியார், மாமியார்  என எல்லாவற்றிலும் சிரிப்பே நீக்கமற நிறைந்திருப்பது என்பார்.
  2. தனக்கு ஜோக் சரியாக வராவிட்டால் யாரயாவது தனக்கு ஜோக்குக்கு துரோனாச்சாரியாராக இருக்க வேண்டி இறைஞ்சுவார்.
  3. நகைச்சுவை மூலம் இந்தியா பாக்கிஸ்தானுக்கு ஒரு நட்பு பாலத்தை உருவாக்குவார்
  4. அடுத்த ஆள் தன்னை ஓட்டினாலும் ரத்தம் வர பிறாண்டினாலும் அதற்க்கும் ஒத்துழைப்பார்.
(மைக்ரோசாப்ட்ன் அட்டவணை)  
சுட்டி: http://www.microsoft.com/education/competencies/humor.mspx

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails