Wednesday, March 8, 2017

குமாரின் தேசபக்தி

குமார். வயது 45 இருக்கலாம். தள்ளுவண்டி பழக்கடைக்காரர். காரில் வந்து இறங்கி கார்டு தேய்க்கும் பெரிய பழமுதிர்ச்சோலையிலிருந்து ஒதுங்கி நடைபாதை ஓரக் கடைக்காரர். உட்காராமல் வியாபாரம் செய்யும் கடின உழைப்பாளி.
“ஆயிரம் ரூபா ஐநூறு ரூபா வித்ட்ரா பண்ணினதால உங்களுக்கு ப்ராப்ளம் இருக்கா?”
“ஐநூறு ஆயிரம் செல்லாதுன்னு சொன்னதப் பத்தி பாப்பா கேட்கறாங்க” என்று சிரித்தார் குமார்.
கேள்வி சின்னவளோடது.
.
“அப்பா.. ஒரு ப்ராஜெக்ட். Demonitisation பத்தி.... Different Vendors க்கிட்டேயிருந்து feedback கேட்டு எழுதணுமாம். ஸ்கூல்ல சொல்லியிருக்கா” என்றவளை கற்பூரவள்ளி வாங்குவதற்கு அழைத்துவந்தபோது கேட்டாள்.

“முன்னூறு ரூவாய்க்கி பளம் வாங்குறவங்க.. சில்ற தட்டுப்பாடுங்கிறதுனால... இருநூறு ரூவாய்க்கு வாங்கிட்டு.. மிச்சம் நூறு ரூவாயை பர்ஸுல சொருகிக்கிட்டுப் போயிடறாங்க... கொஞ்சம் இளப்புதான்..”
“வீட்டுல செலவுக்கெல்லாம் Problem இல்லாம இருக்கா?”
“அதெல்லாமில்லை.. சொல்லப்போனா... வீண் செலவு கொறஞ்சிருச்சி...”
“ஐநூறு ஆயிரம் rupees நோட்டுல்லாம் திரும்பவும் வேணூமா? வேணாமா?”
“ஐம்பது நாள் பொறுத்துக்கோங்கன்னிருக்காரு... ,மோடி... ஐம்பது நாளென்னா அஞ்சு மாசம் கூட காத்துக்கிடக்கலாம்.. இந்தியா வல்லரசாயிடும்ங்கிறாங்களே! பொறுத்துக்குக்க வேண்டியதுதானே சார்! அப்படியே எழுதிக்கோம்மா...”

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails