Sunday, July 3, 2011

டிரைவர் ஒபாமா - ஒன்று ஒன்று பூஜ்ஜியம்

நறுக் - 6 

obama car driver


அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா இந்தியாவிற்கு வந்தார். தடபுடலாக பல ஏற்பாடுகள் செய்திருந்தார்கள். சொந்த ஊரில் இருப்பது போல மிகவும் மகிழ்ச்சியாக ஒரு சொகுசுக் காரில் பவனி வந்தார் ஒபாமா. தான் பயணித்துக் கொண்டிருந்த ப்ளஷர் காரை ஒபாமாவுக்கு மிகவும் பிடித்துவிட்டது. டிரைவரை பின்னாடி உட்காரச் சொல்லிவிட்டு வண்டியை ஓட்டிக் கொண்டு நகர்வலம் வந்தார். அழுத்து அழுத்தென்று அழுத்தி ஊரெங்கும் பறந்தார். ஒரு சின்சியர் டிராபிக் போலீஸ் அந்த வண்டியை மடக்கினார். உள்ளே டிரைவர் சீட்டில் உட்கார்ந்திருக்கும் ஆளைப் பார்த்தவுடன் மிரண்டு "ஐயா"விற்கு போன் பண்ணினார்.

"சார் ஓவர் ஸ்பீட்ல போன ஒரு முக்கிய புள்ளிய பிடிச்சிருக்கேன்"

"யாருயா... கலெக்டரா..."

"இல்லீங்க..."

"மினிஸ்டரா?"

"இல்லீங்க..."

"முதலமைச்சரா?"

"இல்லீங்க.."

"கவர்னரா?"

"இல்லீங்க...."

"யோவ்.. வேற யாருயா சொல்லித்தொலை..."

[அட்டகாசமான அவரது பதில் கடைசியில்...]

**********
சிவகுமாரன் என்ற ஒரு கவிஞர் பதிவுலகில் சிங்கமென உலவுவது நிறைய பேருக்கு தெரிந்திருக்கும். மனிதனுடைய எல்லா உணர்வுகளுக்கும் கவிதை எழுதும் அவரது பேனா. அவர் பக்திமணம் கமழ எழுதும் இன்னொரு வலைப்பூ அருட்கவி.

தக்குடு என்று ஒரு துடுக்கு. வார்த்தைக்கு வார்த்தை நகைச்சுவை. அலுவலகத்தில் இவரது பதிவுகளை திருட்டுத்தனமாக படிப்பது கடினம். வாய்விட்டு சிரித்து மாட்டிக்கொள்வீர்கள். உம்மாச்சி காப்பாத்து என்று இன்னொரு பதிவில் பக்திப் பழமாகவும் எழுதுகிறார். கணேசா காப்பாத்து!

இது என் எழுத்து. இது என் கருத்து. இது என் மைத்துளிகள் என்று கவிதாப்பூர்வமாக எழுதுபவர் மாதங்கி.(मातंगी). திடீரென்று ஒரு நாள் தத்துவ விசாரணை நடக்கும் மறுநாள் துப்பாண்டி புராணம் இருக்கும். இசையில் தேர்ந்த ஞானம் பெற்றிருக்கிறார். அவரின் மைத்துளிகள் இங்கே.

பதிவுலகில் எல்.கேயைத் தெரியாதவர் எவருமிலர். ஒரு நாளில் எல்லா நண்பர்கள் பதிவுகளையும் படித்து சுருக்கமாக கருத்துரையிடுவார். ரெண்டு மூணு ப்ளாக் வைத்திருக்கிறார். கூடிய விரைவில் எழுத்துக்கு விடுமுறை விடப்போகிறேன் என்று மிரட்டுகிறார். ஓடிச்சென்று படித்துவிடுங்கள்.

தம்பி இளங்கோவுக்கு ஊரு கோயம்புத்தூரு. விழுதுகள் என்ற இயக்கத்தில் சமூகத் தொண்டுகள் புரிகிறார். அவ்வப்போது வலையில் எழுதி கலைத்தொண்டும் ஆற்றும் இப்படிக்கு இளங்கோவை இங்கே சென்று பாருங்கள். சிறு சிறு துளியால் பெரு வெள்ளம் ஆக்க எழுதுகிறார். ரெண்டு நாள் முன்பு எழுதிய ராமர், லெட்சுமணர், அனுமாரு நன்றாக இருக்கிறது.

சுரங்க ஊரான நெய்வேலியிலிருந்து பொக்கிஷமாக வெங்கட் நாகராஜ். தற்சமயம் டில்லிக்கு ராஜாவாக இருக்கிறார். மனைவியையும் பதிவிடச் சொல்லி கால்கட்டு போட்டுக்கொண்ட பதிவர்கள் மத்தியில் சந்தோஷமாக உலவுகிறார். தில்லியைப் பற்றி இருவருமே அவ்வப்போது எழுதுகிறார்கள்.

தற்போது விம்பிள்டன் பார்த்துக்கொண்டிருக்கும் மெட்ராஸ் பவன் உரிமையாளர் சிவகுமார் நன்றாக எழுதுகிறார். நிறைய படங்களுக்கு விமர்சனம் எழுதும் இவரை வருங்காலத்தில் பிலிம் மேக்கராக பார்க்க வாய்ப்பிருக்கிறது. இவரும் நண்பன்டா என்று இரண்டாவது வீடு ஒன்று வைத்துள்ளார்.

மன்னார்குடியில் இருந்து மொத்தம் ஐந்து வலைப்பதிவர்கள் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறார்கள். பெசொவி என்று பெயர் வைத்துக்கொண்டு எல்லோருக்கும் சீனியர் ஒருவர், மன்னை மைந்தர்களில் ஒருவன் என்று மாதவன், மன்னார்குடி மதிலழகு என்றெழுதும் ராஜமன்னார்குடி , ஆயுத எழுத்தாக பல துறைகள் பற்றியும் பதிவெழுதும் கோப்லி என்கிற ஏ.ஆர்.ராஜகோபாலன், மன்னையின் செல்வன் சிவா என்று ஒரு பட்டாளமே வலை உலகத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார்கள். அரசியல், நகைச்சுவை, கவிதை என்று பின்னி பெடலெடுக்கிறார்கள். மன்னையின் அனைத்து இடங்களுக்கும் போய்வந்தது போல இருக்கும்.

பதிவு ராஜராஜேஸ்வரி போல நீள்கிறது.

எங்கள் ப்ளாக் பல்சுவை பதிவுகள் வழங்கும் உங்கள் ப்ளாக். மூன்று பேர் சேர்ந்து எழுதுகிறார்கள். நிறைய புதிர், போட்டி என்று நடத்தி ஊக்குவிப்பார்கள்.
திருவாளர்கள் ஸ்ரீராம் மற்று கௌதமனை தெரியும். பத்மனாபனப் போல பதிவுலகம் முழுக்க சென்று ஊக்குவிப்பது ஸ்ரீராமின் பொழுபோக்கு. வாழ்க அவரது பணி. என்னுடைய ஜட்டிப் பதிவு யூத் புல் விகடனில் வெளிவந்தது அவரால் தான் எனக்கு தெரிய வந்தது.

ராஜபாளையம் லாஜி ஸாரி ராஜி. கோடை விடுமறை முடிந்து மீண்டும் எழுதத் துவங்கியிருக்கிறார். அம்மணி இடும் பின்னூட்டங்கள் பதிவைப் பிளக்கின்றன. கதை, கவிதை போன்றவற்றை சுவையாக எழுதுகிறார்.

பணியிலிருந்து ஒய்வு பெற்றாலும் எழுத்துப் பணியை விடாமல் செவ்வனே செய்து வருபவர் வை. கோபாலக்ருஷ்ணன். வையகம் புகழ கதைகள் எழுதுகிறார். எவ்வளவு பார்ட் வரும் என 1 of 4  என்று தலைப்பில் போட்டு எழுதும் யதார்த்த கதைக்காரர். இவரது சிறுகதைகள் சில கல்கியில் வெளிவந்துள்ளது.

பொன்மாலைப் பொழுதில் எழுதிவருபவர் அண்ணன் கக்கு மாணிக்கம். கும்பகோணத்துக்காரர். அரசியில் திருடர்களை வஞ்சனை இல்லாமல் வைது பதிவுகள் போடுவார். வீரதீரப் புலி.

அவ்வப்போது எழுதும் சாய் ராம் கோபாலன். இவருக்கு தற்சமயம் கையில் ஆப்பரேஷன் நடந்துள்ளதால் இலக்கியப் பணி ஆற்றுவதற்கு கொஞ்சம் சமயம் பிடிக்கும். மனதில் பட்டதை அப்படியே ஒளிவுமறைவின்றி எழுதும் அசாத்திய துணிச்சல்காரர்.

யாதோ ரமணி எதையும் கவி புனைவதில் வல்லவர். கட்டுரையைக் கூட கவிதையாக எழுதுவார். வார்த்தைகள் இவர் கவிதைகளில் விளையாடும். இவர் எழுதிய ஜான் அப்துல் நாராயணன் எனக்கு விருப்பமான ஒன்று.

வானவில் எழுதும் வீடு திரும்பல் மோகன்குமார் எங்கள் ஊருக்கு பக்கத்து ஊர்க்காரர். நீடா பார்ட்டி. நல்ல தரமான பல பதிவுகள் எழுதி திண்ணை போன்ற தளங்களில் வெளியிடுகிறார். தன்னம்பிக்கை பதிவுகள் பல எழுதுகிறார். அதுவே அவரது பலம்.

கொஞ்சநாளாக இவங்க வலையுலகத்துக்குப் பக்கம் வரவில்லை என்பதால் நானெல்லாம் தைரியமாக உலவ முடிகிறது. வித்யாவின் கிறுக்கல்கள் என்று எழுதுபவர். நல்ல நேர்த்தியான நடையில் அழகாக எழுதும் சகோதரி. சமீபத்தில் கண்ணில் படவேயில்லை. ரொம்பவும் ஆணி போலிருக்கிறது.

அமைதிச்சாரல் என்று புயலென எழுதும் ஒரு எழுத்தாளர். ஒரு சிறிய இடைவெளிக்கு பின்னர் புதுத் தெம்போடு எழுதுகிறார். படிக்கப் படிக்கப் பரவசம் இவர் எழுத்துக்களில். பாருங்கள். நிச்சயம் பிடிக்கும்.

*********
"அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவையே டிரைவரா வச்சுருக்கிற ஒரு பெரும்புள்ளி" என்றாரே பார்க்கலாம்.

பின் குறிப்பு: நறுக் நறுக்கென்று பல்லு படமால் கடித்த என்னை இத்தோடு வலைச்சரத்திலிருந்து சீனா சார் நறுக்கி விடப்போகிறார். வாய்ப்பளித்தமைக்கு அவருக்கு ஒரு நன்றி. என்னால் இயன்றவரை அளித்திருக்கிறேன் என்ற மன நிறைவோடு விடைபெறுகிறேன். மீண்டும் ஒருமுறை சீனா சாருக்கு ஒரு தானா. தாங்க்ஸ்ன்னு சொன்னேன்.

பட உதவி: http://www.sodahead.com . படத்துல ஒபாமா கார்லேர்ந்து வெளியில போறா மாதிரி.. நானும் ஜூட் விட்டுக்கறேன்.


-

Saturday, July 2, 2011

பிகாரசமான வனதம் - ஒன்று பூஜ்ஜியம் ஒன்று

நறுக் - 5 
பிகாரசமான வனதம்
நறுக் 5 (a )
first and last

நறுக் 5 (b)
கிளச்ர்சியூடுட்ம் பிகாரசமான வனதம். புடிஷ்யான கிளள்ச்சொலுல்ம் ஆபிப்ள் கனன்ங்கள். சோயானின இடை. இச்ன்டேப்  இலால்மலேயே இப்டுபு மறுற்ம் தொயடைளவை பப்ளிகாக்க காடுட்ம் ஜீன்ஸ் பேன்ட். பஸ்ஸ்ண்டாடில் அபெப்ண், பகக்தித்ல் அவ்லிவாபனும்  எதேசைச்யாக உடை உசுரம் நெருகக்தித்ல் நின்றிந்ருர்தாகள். மூகோக்டு ஆயுளைம் சேத்ர்து இழுதத்து அளிவன் நறுணமம். அம்ங்மகை குத்திது விழும் புஸ்புஸ் கேத்சதை ஒதுகுக்ம் விலிரல் அணிதிந்ருந்த நீலநிற மோரதிம் கனன்த்தை நெருகுங்ம்போது பளபளதத்து.  செம்வபள வாயிருலிந்து முத்திதுர்ந்து "எக்கிஸ்யூஸ் மீ" என்றாள். காதுளிகல் ஓயிராரம் வயலிகன்ள் டூயட் வாசிதத்ன. பாதிரஜாராவின் வெணுண்டை தேவகதைள் குழுமி நின்று லாலில்லலி பாடிர்னாகள். அவனையுறிமயாமல் தரையிருலிந்து ஆசகாதித்ர்க்கு பக்றக ஆரபிம்த்ருதிந்தான்.
மேற்கண்ட இரு பாராக்கள் என்னவென்று தெரிகிறதா? புரிந்திருக்கும். விளக்கம் கடைசியில்.

**********
இந்தப் பதிவில் நான் எழுதப்போகும் சில பேர் வலையில் நான் வளைத்துப் பிடித்த ரத்தினங்கள். வலைச்சொந்தங்கள். பாசக்காரர்கள். இவர்கள் எழுத்துக்களைப் பார்த்து நான் நிறைய பொறாமைப்பட்டதுண்டு. எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்கு போறார் என்ற ரீதியில் நான் எழுதும் எழுத்துக்களை படித்துவிட்டு உற்சாகப்படுத்தும் பெருந்தன்மை இவர்களுக்கு உண்டு. நீங்களும் படித்துப் பாருங்களேன்.

தேன் தமிழில் ஒவ்வொரு எழுத்தாக தோய்த்து எழுதும் பாங்குடையவர் திருவாளர் மோகன்ஜி. வானவில் மனிதன் என்று எழுதும் இவர் கற்பனை மேகத்தின் ஊடே அலையும் ஒரு வான்வெளி மனிதர். நேசம், பாசம், சோகம் என்று தோளில் கைபோட்டு பக்கத்தில் உட்காரவைத்து உருக்கமாகக் கதை சொல்லி ஒரு குரல் அழவிடுவார். ஆனந்தக் கண்ணீர் சில சமயம். உணர்ச்சி பெருக்கில் அழுகைக் கண்ணீர் சிலசமயம். சமீபத்தில் கிசுகிசு எழுதி எல்லோரையும் கிச்சுகிச்சு மூட்டினார். இந்தக் கிசுகிசு பதிவைப் படிப்போர் தவறாமல் பின்னூட்டக் கும்மியைப் படித்து ரசிக்குமாறு வேண்டப்படுகிறார்கள். நிறைய அதிகாரிகளுக்கு பாடம் எடுக்கும் அதிகார ஆசான். இவரோடு சேர்ந்து நான் அடித்தக் கொட்டத்தை நினைத்தால் சிறுவர்களுடன் கூட அவருடைய எளிமையான பழகும் மாண்பு எனக்கு புரிகிறது.

தமிழில் கவிதை என்பது என்னை ஏமாற்றும் அடங்காப்பிடாரி காதலி. ஒருதலைக் காதலில் நெருங்கி நெருங்கிப் பார்ப்பேன். "ச்.சீ. போ.. நீ அஞ்ஞான அசிங்கம்" என்று என்னை விட்டு காத தூரம் விலகி ஓடிவிடும். கவிதையாய் பேசினாள் என்று பெண்களைக் கூறுதல் கவிஞர்களின் இயல்பு. கவிகள் சுந்தர்ஜியிடம் ஐந்து நிமிடம் பேசினால்  சுந்தர்ஜியாய் பேசினாள் என்று அடி மாற்றி எழுதுவார்கள். எதைப் பார்த்தாலும் கவிதை புனையும் அவரது விசைப்பலகையில் ஏதோ மந்திர கவிவிசை இருக்கிறது. சுந்தர்ஜி பத்து வார்த்தை பேசினால் ஐந்தைந்து வார்த்தைகளாய் இரண்டு ஹைக்கூக்கள் பிறக்கின்றன. கைகள் அள்ளிய நீர் என்று அடக்கம் தெறிக்கும் தலைப்பில் எழுதிவருகிறார். இல்லையில்லை.. கவிக்கிறார்.

லிக என்று கலியை திருப்பிப் போட்ட கதை மூலமாக எனக்கு அறிமுகமானார் அப்பாதுரை. அவர் 'அப்பப்பா'துரை. அடேங்கப்பா! மூன்றாம்சுழி என்ற வலைப்பூவின் ஆசிரியர். ஒரு முறை உள்ளே மாட்டிக்கொண்டால் மீள முடியாமல் ஆளை உள்ளே இழுக்கும் சுழி மூன்றாம் சுழி. கட உபநிஷத்தை வெண்பாவினால் எழுதி தமிழ்ப் ப்ரியர்களுக்கு அருந்தொண்டு புரிந்திருக்கிறார். மாடர்ன், ஹிஸ்டாரிக், சயின்ஸ் ஃபிக்ஷன் என்று பல தரப்பட்ட தமிழ் படைப்புகள் தங்குதடையில்லாமல் அருவியாய் கொட்டுகிறது. சுழித்துக்கொண்டு வலையெங்கும் ஓடுகிறது. உள்ளே போனால் அட்லீஸ்ட் அரை மணிநேரம் நீங்கள் ஒதுக்கவேண்டியிருக்கும். உலகை மறக்கலாம். சுழிக்கு செல்ல இங்கே சொடுக்கவும்.

தேகத்தை கட்டுடைத்து எழுதும் எழுத்து போகனுடையது. மன உணர்ச்சிகளை கிசேலங்களை வார்த்தைகளாய் புட்டுபுட்டு வைக்கிறார். பிகினி அணிந்த கவர்ச்சியான கவி எழுத்துக்கள். சிலசமயம் எட்டிப்பார்க்கத் துடிக்கும் பிறந்தமேனியாய். எழுத்துப்பிழை என்று முரண்நகையாக பெயர் வைத்துக்கொண்டு பிழையில்லாமல் எழுதுகிறார். எதையாவது ஒன்றைக் கொடுத்து அவரது வலையை தொடுக்க வேண்டுமே என்று இங்கே ஒரு லிங்க் தருகிறேன். நிறைய வாசிப்பனுபவம் மிக்கவர். படிக்க படிக்க போதையேறும் எழுத்துக்கள் இவரது. முதிர்ந்த வாசகர்கள் நாடும் தளமிது. முதிர விரும்பும் வாசகர்களும் படிக்கலாம்.

ஒரு சிறிய பொறியென இருக்கும் கருவை வளர்த்து சுமந்து பெற்றுப்போட்டு பெயர் வைத்துவிடுவார் ரிஷபன். கதையோ, கவிதையோ பிரமாதப்படுத்துகிறார். காற்றை நேசிக்கும் இவருக்கு எழுத்து சுவாசமாக இருக்கிறது. சமீபத்தில் எழுதிய ஆண்டாள் நாச்சியார் பற்றிய பதிவும் கல்கியில் அச்சாகியிருக்கிறது. நம் நெஞ்சத்தில் அச்சாவாக அச்சானவை ஏராளம்.

ஆனந்த வாசிப்பு என்று வெறும் தலைப்பு பெயராக மட்டுமல்லாமல் பல பதிவர்களின் பதிவுகளை ஊன்றி படித்து ஊக்கமூட்டும் பின்னூட்டங்களைப் பதியும் பத்மநாபனைப் பற்றி வலைப்பூவில் தெரியாதவர் உண்டோ? அத்தி பூத்தார் போல அவரது வலைமனையில் எழுதினாலும் தினமும் பின்னூட்டங்களால் பல அற்புதப் பதிவு பல வலைப்பூக்களில் கொண்டிருக்கிறார். பதிவை எழுதிவைத்துவிட்டு வலைமனை வாசலில் பத்துஜின் கமேன்ட்டுக்காக காத்துக்கிடப்போர் ஏராளம். அதில் நானும் ஒருவன். சில பின்னூட்டத்தைப்  பார்த்தால் நாம் எழுதாமல் விட்ட சில கருத்துக்கள் அங்கே கண்ணடித்துக் கதை சொல்லக் காத்திருக்கும்.


தமிழக அரசு விருது பெற்ற எழுத்தாளர் வித்யாசுப்ரமணியம் வலைப்பூவில் எழுதுகிறார். எழுதுவதோடு மட்டுமல்லாமல் வளரும் எழுத்தாளர்களை உற்சாகப் படுத்துகிறார்.  கதையின் கதை என்று எழுதும் அவரது வலைப்பூ அர்த்தத்தின் அர்த்தத்தை அனாயாசமாக விளக்குகிறது. ஒரு சீனியர் ரைட்டர் பல தளங்களுக்கு சென்று கருத்திடுவது போஸ்டர் அடித்து போற்றத்தக்க பெருஞ் செயல்.

ஆரண்ய நிவாஸ் ஆர். ராமமூர்த்தி என்னும் இவரை மூவார் முத்தே என்று விளிப்பார்கள். நகைச்சுவை மிளிரும் பதிவுகளும் எழுதுவார், கலங்கடிக்கும் கதைகளும் எழுதுவார். உள்ளே போனால் எழுத்தாரண்யத்தில் மாட்டிக்கொள்வீர்கள். ஜாக்கிரதை!


பின் குறிப்பு: சிலர் முன்பே உங்களுக்கு அறிமுகமாயிருக்கலாம். என் முகத்தில் இவர்கள் எப்படித் தெரிகிறார்கள் என்று எழுதியிருக்கிறேன். சலித்துக்கொள்ளாமல் நான் கொடுத்த இணைப்புகளை படித்து இன்புறுக.

பாராக்களின் விளக்கம்.
முதல் எழுத்தும் கடைசி எழுத்தும் மட்டும் சரியாக இருந்தால் அந்த வார்த்தை மூளைக்கு சரியாக போய்ச்சேரும், பிழைகள் இருந்தாலும் என்று காம்ப்ரிட்ஜ் பல்கலை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தார்கள். இதுவும் சில வருஷங்களுக்கு முன்னால் மின்னஞ்சலில் பல கண்டங்கள் சுற்றிய படம். இரண்டாவது பாராவாக இதை தமிழில் முயற்சி செய்தது அடியேனின் அதிக ப்ரசங்கித்தனம். பாராவில் செய்தால் பரவாயில்லை.. தலைப்பிலும் செய்தது சரியா? முறையா? என்று நீங்கள் காதைக் கிள்ளாதீர்கள்! வலிக்குது.

-

Friday, July 1, 2011

ஆறு + கழுத்துக்கு மேல - ஒன்று பூஜ்ஜியம் பூஜ்ஜியம்

six face

நறுக் - 4 

ஆறு+கழுத்துக்கு மேல....
"உங்க வீட்டுக்காரர் பெயர் என்ன?"

(ஆறு விரலைக் காட்டினார் அவர்)

"ஆறு"

"அதோட கழுத்துக்கு மேல இருக்கறதைச் சேர்த்துக்கோங்க"

"தலையா?"

"உஹூம்.. அது இல்ல.. முன் தல.. இது...இது..."

"ஓஹோ...முகம்... உங்க வீட்டுக்காரர் பேர் ஆறுமுகம் சரிதானுங்களா?"
(ம. தொகை கணக்கெடுக்கும் அதிகாரி நெஞ்சு பத பதைக்க அந்தப் பதிபக்தி நிறைந்த பெண்மணி சொன்ன பதில் கடைசியில்.....)

*********
சைக்கிள் என்று ஆயிரமாயிரம் கால் உள்ள 'வலை'சைக்கிளில் எழுதுபவர் மிருணா. நிறைய கவிதைகள் எழுதுகிறார். "இங்கே எழுத்தாக நான்" என்று கவித்துவமாக அறிமுகம் செய்து கொள்கிறார். சமீபத்தில் பயணம் என்ற தலைப்பில் இவர் எழுதுவது அற்புதமாக இருக்கிறது. இவரது எழுத்து ஆளில்லா சாலையிலே சுகமான ஜன்னலோரப் பயணம்.


திரு காஷ்யபன் அவர்கள் தீக்கதிர் பத்திரிக்கையில் துணை ஆசிரியராகப் பணியாற்றி ஒய்வு பெற்றவர். தன் எழுத்துக்கு ஓய்வில்லாமல் தொய்வில்லாமல் எழுதிக்கொண்டிருக்கிறார். தமிழ், ஹிந்தி ஆங்கிலத்தில் சிறுகதைத் தொகுப்பு வெளியிட்டிருக்கிறார். பெரியவர். எனது சேஷ்டைகளை ஒதுக்கிவிட்டு மரியாதையாக நான் படிக்கும் ஒரு ப்ளாக். http://kashyapan.blogspot.com/

இது என் ரஃப் நோட்டு என்று எழுதிவரும் பதிவர் டோடோ. ஜப்பானியப் பதிவரா என்று கேட்கிறீர்களா? இல்லை. அருந்தமிழ்ப் பதிவர். ஆங்கிலப் படங்களையும் பாடல்களையும் பற்றிக் கூட ஒரு பதிவு வைத்திருக்கிறார். சமீபத்தில் இவர் எழுதிய ஒரு கிளாஸ் அஞ்சலி நன்றாக இருக்கிறது. ஒரு கிளாஸ் சைசில் சிறிய சிறிய கவிதைகள் ரம்மாக. ச்சே. ரம்மியமாக எழுதுகிறார்.  திகட்டாமல் இருக்கிறது.

The Roots என்று தான் சுய விவரத்தில் போட்டிருந்தது. நல்ல ஆணி வேர். ஆனந்த விகடன் தீபாவளி மலரில் வெளியான தனது அப்பத்தா கதையை நமக்காக உண்மை புதிததன்று  என்ற தனது வலைத்தளத்தில் ப்ரசூரித்திருக்கிறார் பாரதி கிருஷ்ணகுமார்.

கென்யாவிலிருந்து ராகவன் எழுதும் வலைத்தளம் கூடல்கூத்தன்.ப்ளாக்ஸ்போட் .காம்.  வால்நட்சத்திரம்  என்ற இவரது சமீபத்திய கதை அற்புதமாக இருக்கிறது. ரசிகன் என்ற தளத்திலிருந்து என்கிறார்....

பிரசன்னா ராஜன் ஒரு பயோ மெடிக்கல் பொறியாளர். ஒளியுடையோன் என்ற வலைப்பூவில் அவர் எழுத்துக்களால் ஒலியெழுப்பாமல் பிரசன்ன ஒளி எழுப்புகிறார். மாசத்துக்கு ஓரிருமுறை எண்ணங்களை பதிவாக பிரசவிக்கிறார். அற்புதமான நடையில் மிளிர்கிறார். ஒலக சினிமா நிறைய பார்க்கிறார். ட்ரான்சிஸ்டர், தேங்காய், வறுகடல என்ற இவரது சிறுகதையை மார்கோனி படிக்கவேண்டும். ரேடியோவின் பல பயன்பாடுகள் தெள்ளெனத் தெரிகிறது. நல்ல வாசிப்பனுபவம்.

சங்கப்பலகையில் எழுதிவருபவர் திரு. அறிவன். அல்லவை தள்ளி நல்லவை கொள்ள என்று உப தலைப்பு வைத்திருக்கிறார்.  பெண் எழுத்துப் பற்றி பொன் எழுத்தாக அவர் எழுதியதின் சுட்டி இங்கே. நிறைய அரசியல் எழுதுகிறார். தமிழில் நன்கு தேறியவர் என்பது அவரது தேர்ந்த எழுத்துக்களில் தெரிகிறது. ஒரு முறையாவது சங்கப்பலகையில் உட்கார்ந்து பாருங்கள். சுகமாக இருக்கும்.

*********
"அந்த நாய எல்லோரும் அப்படித்தான் கூப்பிடுவாங்க."
இது இரா முருகனின் ராயர் காப்பி கிளப்பில் இருந்து சுட்டது.

-

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails