Thursday, February 25, 2010

உலக கிரிக்கெட்டின் ஒரே தலைவன்

உலக கிரிக்கெட்டின் ஒரே தலைவன் - சச்சின் டெண்டுல்கர்

ஒரு பத்துக்கு பத்து இடம் இருந்தால் கூட நாலு பேர் மூனு குச்சி ஒரு பந்து ஒரு மட்டை (தென்னை மட்டையாய் இருந்தால் கூட) வைத்து நாடெங்கும் விளையாடும் அனைவரும் நேற்றைய தினம் பரவசத்தில் ஆழ்ந்து மகிழ்ந்தார்கள். ஜிம்பாப்வேயின் சார்லஸ் கோவேன்டிரி 2009ல் பங்களாதேஷ் அணிக்கு எதிராக அடித்த 194 நாட் அவுட் உலக சாதனையாக இருந்தது சாதனைக்கே சந்தோஷமாக இல்லை போலும். நேற்றைய தென்னாப்ரிக்காவிற்கு எதிரான போட்டியில் சாதனை சச்சினுக்கு தன்னை வழங்கிக்கொண்டது. அப்பாடா! இப்போதுதான் சாதனைக்கே பெருமை.

கீழ்கண்ட சமன்பாடு நேற்றைய போட்டியில் எல்லோராலும் சரிதான் என்று சரிபார்க்கப்பட்டது.
    6 + 4 = 10+DULKAR = TENDULKAR

வரலாறு படைத்த ஆட்டத்தின்  காட்சிகள் கீழே


டில்லி செல்வோர், டில்லியிலிருந்து வருவோர், லண்டனில் படிப்பு முடித்து வருவோர், திருமண நிகழ்ச்சிக்கு தாலி எடுத்து கொடுக்க வருவோர், தையல் மிஷின் குடுக்க வருவோர், மகளிரணி இளைஞரணி முதியோரணி மாநாடுகளில் மரியாதை ஏற்க வருவோர், மாநகராட்சி கழிப்பறை திறக்க வருவோர், பல அரசுத் திட்டங்களை நாட்டுக்கு அர்பணிக்க வருவோர், பிறந்த நாள் கொண்டாடுவோர், பதவி கிடைத்தவர், இன்னும் பலப்பல 'நற்காரியங்கள்' செய்வோரை பாராட்ட சாலையின்  இருமருங்கிலும், நடுவிலும், மரத்தின் மேலேயும்  மற்றும் தொங்க, நிற்க, கட்ட வசதியாக உள்ள பல இடங்களில் பதாகை வைப்பார்கள். 
கிரிக்கெட் ரசிகர்கள் சச்சினுக்கு பதாகையை  உள்ளத்தில் வைப்பார்கள்.

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails