Monday, December 15, 2014

ஞாயிறென்ன திங்களென்ன...

பிள்ளையார் கோயில்
கண்டாமணி அடிச்சுது..
அர்த்தஜாமம் ஆச்சு...
நடை சாத்தியாச்சு...
வாசலில்...
அழுக்கு மூட்டையோடு...
மூட்டையாய்ச் சுருண்டு கிடக்கும்...
பிச்சைக்காரக் கிழவிக்கு...
ஞாயிறென்ன திங்களென்ன....


கடைசிப் பெட்டியை
உள்ளே தூக்கி வச்சாச்சு..
தொங்கின ஐட்டமெல்லாம்
கடைக்குள்ளே தூங்கப் போயாச்சு...
பாதி ஷட்டர் இறக்கி
எல்லா சாமானையும்
பங்கிடு பண்ணியாச்சு...
’ஸர்ஃப்’ பனியன் போட்ட
பலசரக்குப் பையனுக்கு
ஞாயிறென்ன திங்களென்ன...

பச்சை, கற்பூரம்
மோரீஸ், புள்ளி, சிறு பழம்
தினுசு தினுசாக
வாழைப்பழம்...
ஓரத்தில் கொஞ்சம்
கொய்யாவும்...
ஒரு கூறு கமலா ஆரஞ்சும்...
நடைதளர்ந்து வீடு செல்லும்
தள்ளுவண்டி யாவாரிக்கு....
ஞாயிறென்ன திங்களென்ன...

க்ரில் கம்பிக்கு பின்னால
ஷெல்ஃப் பூரா மதுப்புட்டிகள்..
ஸ்டியாக அளக்கும் சரக்கூற்றி...
அட்டாஸ்மாக்கிலிருந்து...
சன்னமான வெளிச்சத்தில..
எட்டு போட்டு நடந்துவரும்
உற்சாகபானப் பிரியருக்கு
ஞாயிறென்ன திங்களென்ன...

சரி சரி நாழியாச்சு...
எனக்கு நாளைக்கு ஆஃபீஸுண்டு
ஞாயிறு போற்றுதும்....
திங்களும் போற்றுதும்....
‪#‎எண்ணச்_சுழல்‬

1 comments:

'பரிவை' சே.குமார் said...

ஞாயிறென்ன திங்களென்ன... கவிதை அருமை அண்ணா...

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails