Tuesday, June 1, 2010

பாப்பா

வாத்தியார் சுஜாதா எழுதியது இது.  எந்த புத்தகத்தில் என்பது என் ந்யூரான்களில் டார்ச் அடித்து பார்த்தும் சட்டென்று கிடைக்கவில்லை. என்னுடைய லாங்வேஜில் இங்கே தருகிறேன். நல்ல ஜோக்.

aish

ஒரு கல்லூரி உயிரியல் பேராசிரியர் இன்னொரு கல்லூரிக்கு "வைவா"விர்க்காக எக்ஸ்டெர்னல் எக்ஸாமினராக சென்றிருந்தார். மறு நாள் மாலை பார்க்கில் வாக் போகும்போது தனது நண்பரிடம் தன்னுடைய எக்ஸ்டெர்னல் அனுபவத்தை இவ்வாறாக பகிர்ந்துகொண்டார்.

"இந்த காலத்து பொண்ணுங்கெல்லாம் ரொம்ப அட்வான்சுடு சார்." 

"ஏன் அப்படி சொல்றீங்க..."

"இல்ல.. நேத்து ஒரு காலேஜுக்கு எக்ஸ்டெர்னலா போயிருந்தேன். ஒரு பொண்ணு ஆள அடிக்கர/அசத்துற மாதிரி டிரஸ் பண்ணிக்கிட்டு நாவப்பழம் மாதிரி கண்ணை உருட்டிகிட்டே ஒரு மாதிரியா சிரிச்சுகிட்டே நாணி கோணிக்கொண்டு பக்கத்தில வந்து நின்னா. அதைப் பார்த்தாலே மக்கு மாதிரி இருந்துது. இருந்தாலும் சிம்பிலா  அவள்ட்ட ஒரு கேள்வி கேட்டேன் 
ஏம்மா உடம்புல எந்த பாகம் நாம உணர்ச்சிவசப்பட்டாலோ, பரவசப்பட்டாலோ பத்து மடங்கு பெரியதாகும் அப்படின்னு கேட்டேன் அதற்க்கு அந்தப் பெண் வெட்கப்பட்டுகிட்டே சீ...ச்...சீ.... சார் நீங்க ரொம்ப மோசம்! நான் இந்த கேள்வுக்கு பதில் சொல்ல மாட்டேன் அப்படின்னுட்டா"

"அப்புறம் என்ன பண்ணினீங்க.."

"பக்கத்துல இருந்த பெண்ணைக் கேட்டேன். டாண்னு பதில் சொல்லிட்டா..."

"என்ன சார் பதில்..."

" 'பாப்பா' கண்ணுக்குள்ள இருக்கிற "ப்யுப்புல்"..."

"அச்ச்சோ இது தெரியாமா போய்டுச்சே அந்த அசடுக்கு."

"கடைசியா அந்த பொண்ணப் பார்த்து மூனு வாக்கியம் சொல்லிட்டு வந்துட்டேன்"

"என்ன"

"நீ இன்னும் சப்ஜெக்ட் நல்லா படிக்கணும்,
உன் புத்தி ரொம்ப மோசமாயிருக்கு, 
இதுக்கெல்லாம் மேல கல்யாணத்திர்க்கப்புறம் நீ ரொம்ப ஏமாறப் போற அப்படின்னு.,.."

நண்பர் "ஆ" என்று வாய் பிளந்து நின்றார். இந்தக் ஜோக்கின் கடைசி வரியில் இது அசைவமாகியிருக்கலாம். நான் பொறுப்பல்ல.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails