Sunday, August 2, 2015

பௌர்ணமி நிலா

கிணற்று மதகில் விஸ்ராந்தியாக அமர்ந்திருக்கிறேன். ஆகாயத்தில் பௌர்ணமி நிலா காய்கிறது. மின்சார விளக்கு பாயாத இடங்களில் ஊர்வன தெரியுமளவிற்கு சன்னமான வெளிச்சம். தென்னை மட்டைகள் சரசரக்க மிதமான காற்று வீசுகிறது. நாள் பூராவும் உழைத்துக் களைத்த மேனி மெதுவாய்க் குளிர்கிறது. "கல்யாணத் தேன் நிலா..... காய்ச்சாத பால் நிலா....." பாடல் எங்கிருந்தோ கசிவது கேட்கிறது. இந்த நாள் மெல்ல மெல்ல விடைபெற்று விடியலை நோக்கி நகர்கிறது. கண்கள் சொருக..... சொரு....க...

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails