Thursday, December 15, 2016

காசு..பணம்.. துட்டு... மணி..மணி...

அவன் என்னை அவமானப்படுத்திட்டாண்டா...

ஏன் தலவரே...
ஐநூறு ரூவா நோட்டு மாலையும் ஆயிர ரூவால க்ரீடமும் வைக்கறான்... நா ஒரு செல்லாக்காசுன்னு சிம்பாலிக்கா சொல்றாம்ப்பா... கட்சிய வீட்டுத் தூக்கணும்..
**
ச்சே... இவன் பர்ஸ ஏண்டா அட்சோம்னு ஆயிடுச்சுப்பா...
ஏன்?
வெறும் ஐநூறு ரூவா.. ஆயிர ரூவாதாம்ப்பா வச்சுருக்கான்... பிச்சக்காரப்பய..
**
அவனே பாவம்ப்பா... ஐநூறும் ஆயிரமமுமாக் கொட்டிக் கிடந்தும்.. பத்துக்கும் அஞ்சுக்கும் நாயா பேயா அலையறான்..
**
ஐநூறை அழித்தவனே போற்றி...
ஆயிரத்தை ஒழித்தவனே போற்றி..
அயோக்கியர்களை நசுக்கியவனே போற்றி...
கறுப்பை நீக்கிய ஒளியே போற்றி...

என்னதிது? ஸ்வாமிக்கு அர்ச்சனை செய்யச் சொன்னா... குருக்கள் மாமா....
**
கட்டப்பைய எடுத்துக்கிட்டு காய் வாங்கப் போறீங்களா?
ச்சே..ச்சே.. ஏடியெம்முக்கு..
லட்சலட்சமாக் கூட பணம் எடுக்க முடியாதே...
யோவ்.. ஒரு ரூபாய்.. பத்து ரூபாய்தான் டினாமினேஷனாம்... ஆயிர ரூபா எடுத்துக்கிட்டு வரச்சொல்லியிருக்கா பொண்டாட்டி...
**
வணக்கம். முக்கிய செய்திகள்.
சென்னை அண்ணாசாலையிலுள்ள ஒரு வங்கியைக் கொள்ளையடிக்க ட்ரெயிலர் லாரியில் வந்த கொள்ளையர்களை மக்கள் துரத்திச்சென்று பிடித்தனர்....

**
என்னங்க இது அநியாயமா இருக்குது... ஒரு ஆம்பிளை கொலுசு போட்டுக்கிட்டுக் கூச்சமேயில்லாம நடந்து போறாரு....
அடப்போய்யா... அவரு ஐநூறு ஆயிரத்தையெல்லாம் சில்லறையா மாத்தி பேண்ட் பாக்கெட் ஃபுல்லா காயினா வச்சுருக்காரு.... நடந்து போகும் போது அதுதான் ஜல்..ஜல்.ஜல்ன்னு ரிதமிக்காச் சத்தம் கேட்குது...
பின் குறிப்பு: பழைய ஐநூறு ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை என்ன செய்யவேண்டும் என்று தெரிந்திருந்தாலும் ஒரு ஃபன்னுக்காக எழுதிப்பார்த்தேன்.

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails