Thursday, June 1, 2017

எழுத்தாள ஆசீர்வாதங்கள்

ஆஹா! 2017ன் ஆரம்பமே அதீத உற்சாகமூட்டுவதாக இருக்கிறது. உள்ளம் கள்வெறி கொள்கிறது.



புதிதாய்க் கை கால் முளைத்த குழந்தை ரேழி மித்தத்தில் தத்தக்காபித்தக்கா என்று நடக்கும் பொழுது அப்பா அம்மா தாத்தா பாட்டி அத்தை மாமாக்கள் சுற்றி உட்கார்ந்து கண்கள் விரிய "அடச் செல்லமே!...ஜுஜ்ஜுப் பாப்பா..." என்று சந்தோஷத்துடன் கன்னம் கிள்ளி ரசிப்பது போல இரு மாண்புமிகு எழுத்தாளர்கள் எனக்கு ஊக்கமருந்து புகட்டியிருக்கிறார்கள். காலையிலிருந்து கண்கள் சொருகும் போதையாக இருக்கிறது. ஒருவர் எழுத்துமிகு அசோகமித்ரன் சார் Thyagarajan Jagadisan அவர்கள் இன்னொருத்தர் வர்ணனைமிகு வண்ணதாசன் சார் Vannadasan Sivasankaran S அவர்கள்.
என் போன்ற அரை ட்ராயர்கள் கீழேயிருந்து மேலே அண்ணாந்து பார்க்கும் தூரத்தில் கண்கள் கூசும் கோடி சூர்யப் பிரகாசத்தோடு எழுத்து வானில் இயங்கிக் கொண்டிருக்கும் இவ்விருவரும் கருத்துரைத்து "கோ அஹெட்" சிக்னல் கொடுத்தது யான் செய்த பாக்கியமே! (ரெண்டாயிரத்துப்) பதினேழில் மேஜரான மகிழ்ச்சி.
இவர்களோடு என்னுடைய பதிவுதோறும் வருகைபுரிந்து லைக்கி.. கமென்ட்டிட்டு.. என்னுள் இருக்கும் யத்கிஞ்சிதம் மொழியை முடுக்கிவிட்டு பாலீஷ் போட்ட ஸ்நேகிதர்கள் அனைவருக்கும் இதயம் நிரம்பிய இமாலய நன்றி!!

2, ஜனவரி , 2017-ல் எழுதியது!

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails