Tuesday, July 13, 2010

சனி வளையத்தில் பூமி

நவக்கிரஹங்களில் சனி பகவானுக்குதான் ஸ்பெஷல் ஆக வளையம் உண்டு. சனிக்கு இருக்கும் வளையம் போல நம்முடைய பூமிப் பந்துக்கும் மாட்டிவிட்டால் எப்படி இருக்கும் என்று கற்பனையாக ஒரு வீடியோ தயாரித்திருக்கிறார்கள். நமது பூலோகத்தின் பூமத்தியரேகை வழியாக ஒரு வளையத்தை கிழக்கிலிருந்து மேற்க்காக சுற்றிவிட்டு, அது ஒவ்வொரு ஊராக வானத்தில் எப்படி தெரியும் என்று வித்தியாசமாக முயர்ச்சித்திருக்கிரார்கள்.  பூமத்தியரேகையின்  அருகில் வானத்திற்கு குறுக்கு வெட்டாக இந்த வளையம் செல்வதால் அந்தப் பகுதியில் பிளேடு கொண்டு கிழித்த வானத்தை காண்பிப்பது மிகவும் அருமை.  அதே போல் பூமத்திய ரேகையை விட்டு வெகுதூரம் விலகி வரும்போது வானத்திற்கு மிக அருகில் இருப்பது போல் இருக்கும்.  பகல் நேரங்களில் சூரியனுடைய வெளிச்சத்தை குடித்து இரவில் பட்டையாக பௌர்ணமி நிலா போன்று ஒளிரும்.  நிலாச் சோறு ஊட்டிய காலம் போய்  தாய்மார்கள் வளைய வானத்தை காட்டி சோரூட்டுவார்கள்.




என்னடா இது பூமிக்கு பிடித்த சனியனா இது என்று நினைக்கிறீர்களா? நல்ல அட்டகாசமான கற்பனை.  நல்ல முயற்சி.

வளையமே வளையமே ஓடி வா.. நில்லாமல் ஓடி வா.. ( நிலா நிலா ஓடிவா பாடலின் ரீமிக்ஸ்...).

1 comments:

பின்னோக்கி said...

அருமையான கற்பனை. மிக அழகாக படமாக்கப்பட்டிருக்கிறது. பகிர்தலுக்கு நன்றி.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails