Tuesday, July 6, 2010

கிரேன் டிரைவர்

இந்த படங்களை பார்த்தவுடன், நாலு தடி ஆட்கள் என் கனாக்களில் வந்து என்னை என்  கற்பனை குதிரையில் ஏற்றி வலுக்கட்டாயமாக உட்காரவைத்து கல்கியின் வந்தியத்தேவன் மாதிரி சவாரி செய்து ஒரு  விறுவிறு கதை எழுத சொன்னார்கள். இந்த படங்களை ஆர்வத்துடன் கிளிக்கிய http://catkid.livejournal.com க்கு இருகை கூப்பி  நெஞ்சார்ந்த ஒரு நன்றி கார்ட் டைட்டிலில் போட்டுவிட்டு ஆரம்பிப்போம். எல்லாத்துக்கும் நாலு பேர் தேவைப்படுகிறது. ஒ.கே ரெடி ஸ்டார்ட்... டேக்.. இந்தக் கதையை காக்க காக்க அன்புச்செல்வன் சொல்வது போல படிக்கவும்..

1ரொம்ப நாள் முன்னாடி நான் வேலைப்பார்த்த கம்பனி இது. முதலாளி சுத்த மோசமான ஆள். தன்னை சுத்தி இருக்குற யாரையும் துளிக்கூட நம்பமாட்டான். கட்டுன பொண்டாட்டி, பையன், பொண்ணு அப்படின்னு யாரையுமே. காலையில ஆறு மணி ஷிப்ட்டுக்கு போனா சாயந்திரம் ஆறு மணி வரைக்கும் வேர்வையோட ரத்தம் சொட்ட சொட்ட உழைக்கணும்.  என்னோட வேலை நீங்க பார்க்கிற இந்த கிரேன் ஓட்டனும், ஒண்ணுல்ல ரெண்டுல்ல பன்னெண்டு மணி நேரம்.


2
இந்த வலதுகைப் பக்கம் நீங்க பார்க்குற தெருவின் கடைசி மூலையில தான் எங்க முதலாளியோட வீடு இருந்தது. ரொம்ப பெரிய பங்களா. அஞ்சாறு காரு, ஆள், அம்பு சேனைன்னு ஒரு பெரிய கூட்டமே உள்ள இருந்தது. கம்பனி சுத்திப்பாக்க ஒரு நாள் அவரோட பொண்ணு வந்தப்ப என்னோட மொத ஷிப்டு ஆளு மேலேர்ந்து ஒரு கான்க்ரீட் ஸ்லாப் எடுத்து வேற இடம் மாற்றும் போது இவ மேல போட்ருப்பான்.  பாவி. உலகத்துல அழகுக்கு எடுத்துக்காட்டே இல்லாம போயிருக்கும். இவ மேல படும்னு நான் பாஞ்சு அவளை அணைத்து அந்தப் பக்கம் உருண்டேன். உருண்டதுல அவளுக்கு தலையில லேசா ரத்தம் வந்து, என் சட்டையை கிழிச்சு கட்டு போட்டு.. இப்ப எதுக்கு அதெல்லாம் விடுங்க. அப்ப அவளை வீட்டுக்கு இந்த வழியாத்தான் கொண்டுவந்து விட்டேன்.


3இப்ப நீங்க இடது கைப்பக்கம் பார்க்கறது என்னோட வீட்டுக்கு போற வழி. சுடுகாடு தாண்டி போகணும். அந்த அசம்பாவித சம்பவம் நடந்த முடிஞ்ச பிறகு ஒரு நாள் சாயந்திரம் ஆறரை மணி வாக்கில் ஹவாய் செருப்பு தேய நான் இந்த வழியா நடந்து போற போது அவ வந்து கார்ல வரியா அப்படின்னு கேட்டா. பர்சுல வைக்குற பணம் லாக்கர்லையும் கால்ல போடற வாக்கர் வெளியிலையும் கிடக்கணும் அப்படிங்கற மனுஷ ஜாதியின் எளிய விதி எனக்கும் தெரிஞ்சிருந்தது. இல்லைங்க பரவாயில்ல.. நீங்க போயிட்டு வாங்க அப்படின்னு சொல்லி அனுப்பினேன். என்னோட மனசு மட்டும் அவளோட கார் ஏரி அப்பவே போய்டிச்சி.


4நீங்க பார்க்கிற இந்த வலது கைப்படம், சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. யாராவது ஒளிஞ்சிருந்து "பா..." அப்படின்னு பயம் காட்டினாலே நாலு நாள் ஜுரத்துல படுத்துருவேன். ஆனா அன்னிக்கு, அப்படி ஒரு யான பலம் எப்படி வந்ததுன்னு எனக்கே தெரியல. கார் ரிப்பேர் ஆனதால அவ நடந்து இந்த வழியாத்தான் காலேஜ் போய்க்கிட்டு இருந்தா. அவ்ளோ கார் இருந்தும் ஒரு தடியனும் அன்னிக்கி வரல. அன்னிக்கு காலையில எனக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை. லீவ் போட்டுட்டு டாக்டரை பார்க்க போய்கிட்டு இருந்தேன். அந்த கோடி வீட்டு காசுக்கார தடிப்பய முன்னாடி பின்னாடி போய் அந்த தங்கத்தை உரசி உரசி பார்த்தான்.   சொல்லிப் பார்த்து, கொஞ்சி பார்த்து, கெஞ்சி பார்த்து ஒத்து வராம போட்டேன் தலையில பக்கத்துல கிடந்த பாறாங்கல்லை தூக்கி.


5மயங்கி தான் கீழ சாஞ்ஜான்னு நினைச்சேன். ஆனா அவன் அப்புறமா எழுந்திரிக்கவே இல்லை.  மேல போய் சேர்ந்துட்டான். அங்கேர்ந்து நாலு கால் பாய்ச்சல்ல ஓடிட்டேன். ரெண்டு மூனு நாள் யார் கண்ணுலேயும் படாம அங்ஞாதவாசம் இருந்தேன். அவளை பார்க்காம இருக்க முடியலை. கண்ணு ரெண்டும் எங்க பார்த்தாலும் அவளையே எனக்கு காட்டிச்சு. மறஞ்சு மறஞ்சு வந்து நீங்க இங்க பார்க்கிற இந்த இடத்தில நின்னு பார்த்தேன். அவளுக்கு அப்படியே அழுகை பொத்ததுக்கிட்டு வந்தது. என்னாலதானே உனக்கு இந்த நிலைமை அப்படின்னு ரொம்ப அழுதா. நா அவளைத் தேத்திட்டு,  கவலைப்படாதே நான் வந்துடுவேன் அப்படின்னு ஆறுதல் சொன்னேன்.

6அவ கிட்ட பேசிட்டு அடுத்த தெரு வறதுகுள்ள  போலீஸ் என்னை சுத்தி வளச்சிட்டாங்க. ஒன்னும் செய்ய முடியலை. கொலை குத்தம் சொல்லி என்னை ஜெயில்ல போட்டுட்டாங்க. ஜெயில் கம்பியில, கிறுக்கின செவுருல, கக்கூசுல இப்படி எங்க பார்த்தாலும் அவ நினைப்புதான். நாலு பாரா முன்னாடி அவ கார்ல லிப்ட் கொடுத்தப்ப வேண்டாம்ன்னு சொன்ன நான் ஏன் எப்படி ஆயிட்டேன்னா அது அவளோட அந்த கொள்ள அழகு. எல்லாரையும் அவ பின்னாடி சுத்த விடுற அழகு. நாட்கள் ஓடிக்கிட்டே இருந்திச்சு. மனசு சொல்லிகிட்டே இருந்திச்சு. எப்படியாவது இங்கேர்ந்து தப்பிச்சு போயிடனும் அப்படின்னு திட்டம் போட்டு ஒரு நாள் ஜெயில்ல பின்னாடி இருந்த ஒரு கதவு, நீங்க இங்க பாக்குறீங்களே அந்த கதவுதான், அது வழியா தப்பிச்சு ஓடி வந்தேன்.

7அங்கேர்ந்து நேரா அவ காலேஜுக்கு போனேன்.... அங்க அவ இல்லை... போற வர ப்ரொபசர் ஸ்டுடென்ட் எல்லார்ட்டையும் கேட்டேன். யாருக்கும் ஒன்னும் தெரியலை... என்னை மலங்க மலங்க பார்த்தானுங்க.. காதல் வந்த ஒருத்தனை இப்பதான் முத முதல்ல பார்க்கறானுங்க போலன்னு நினைச்சேன்..


8

அங்கேர்ந்து அவர் கார்ல வீட்டுக்கு போற வழிய ஓடினேன்... கரண்ட் கம்பி மேல உட்கார்ந்திருந்தா காக்கால்லாம் என் வேதனைய பார்த்து அழுது கத்தி கூட்டமா பறந்து போச்சு... எனக்கு ஒன்னுமே புரியலை.. அவங்க வீட்டுப் பக்கம் போனா அங்கே யாருமே இல்லை... கால் வலிக்க வலிக்க ஊர் முழுக்க மறஞ்சு மறஞ்சு ஓடினேன்... என்ன பன்றதுன்னே தெரியலை.. அதுக்குள்ள ஊர்ல போலீஸ் தேட ஆரம்பிச்சிட்டுது..








9இப்படி இருக்குற போதுதான் அவங்க கார் ரிப்பேர் பண்ற மெக்கானிக் செட்டுக்கு போய் பார்க்கலாம்ன்னு போனேன். ஒன்னு ரெண்டு ஜீப்பு நின்னுச்சு.. யாரையும் காணலை. கடைப் பையன்ட எங்கடா முதலாளி அப்படின்னு கேட்டேன்... அவன் ரெண்டு வண்டி தாண்டி கீழ காட்டினான்.



10குனிஞ்சு கீழ படுத்திருந்த மெக்கானிக்கை பார்த்தேன். அவன் என்னை பார்த்ததும் அலர்ட் ஆயிட்டான். எப்படியும் போலிசை கூப்பிடுவான்னு தெரியும். அதுக்குள்ள அவனை மடக்கி எங்க என் முதலாளி குடும்பம் அப்படின்னு கேட்டேன். அவன் எங்க முதலாளி குடும்பம் சீரழிஞ்ச கதையை சொல்லிட்டு, அவங்க ஊருக்கு வெளியே இருக்கிற ஒரு பலமாடி குடியிருப்புல  ஒரு ஒண்டி குடித்தனத்துல இருக்காங்க அப்படின்னு சொன்னான்... அங்கேர்ந்து ஓடினேன்...





11அந்த காலனியை நான் அடைஞ்சபோது எனக்கு உண்டான சந்தோஷத்தை சொல்ல எனக்கு வார்த்தையில்லை. அவளோட என்ன பேசணும், எப்படி இருப்பா இப்படி பல கனவுகளை எனக்குள்ள வளர்த்துகிட்டு நான் போனா.... அங்க நான் பார்த்தது வேற... சொட்டையா... அசிங்கமா ஒருத்தன் அவள்  தோளைத் தொட்டு பேசிக்கிட்டு இருந்தான். ஒரு சின்ன அரை நிஜார் போட்ட பையன் அவ இடுப்புல... பக்கத்து கடைக்காரன் அவங்க ரெண்டு பேரும் புருஷன் பொண்டாட்டி அப்படின்னு சொன்னான். அப்படியே இடிஞ்சி போயிட்டேன்.

12வழக்கமா எல்லா கதையிலும் அவ எப்படி இருந்தாலும் நல்லா இருக்கட்டும் அப்படின்னு சொல்ற மாதிரி நானும் மனசுக்குள்ள சொல்லிட்டு,  அந்த இடத்தை காலி பண்ணிட்டு, நம்ம ஊர்ல இடத்துக்கா பஞ்சம், சிலையெல்லாம் நிறையா இருக்குற பீச் பக்கமா ஒதுங்கினேன். அந்த சிலை கீழேயே மூஞ்சியில துண்டைப் போட்டு மணல்ல படுத்து தூங்கினேன். காலையில ஒரு காளை மாடு அந்த சிலை பக்கம் ஒதுங்கினப்ப எனக்கு விழிப்பு வந்திச்சு..

16நான் இப்ப ஒரு முடிவுக்கு வந்துட்டேன். இனிமே  நமக்கு வெளிஉலகம் சரிப்பட்டு வராது. அவ இல்லாத உலகம் நமக்கு சிறை தான் அப்படின்னு நினைச்சுக்கிட்டு வானத்த அண்ணாந்து ஒரு தடவை பார்த்துட்டு நேர ஜெயிலப் பார்க்க நடையை கட்டினேன்.

1 comments:

'பரிவை' சே.குமார் said...

nalla irukkappu. padaththukkaka kathai pola thonrinaalaum... unga nadai nalla irukku

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails