Monday, October 26, 2015

கொ.கு.அ.கூ.வே‬

ஒரு பரம தரித்ரன் வீட்டுக்கு ஒருநாள் திருடன் வந்துட்டானாம். பாதம் தரையில பட்டும் படாமலும் மொதக்கட்டு இரண்டாம் கட்டைத்தாண்டி பதமா ரேழிக்குள்ள நுழைஞ்சுட்டான். அதான் தரித்ரன் வீடாச்சே.... சுத்தமா துடைச்சுக்கிடக்கு... ஒண்ணுமில்லே... வீட்டுக்கு உடமைக்காரி ரேழில படுத்துண்டிருக்கா... புருஷங்காரன் வெளியூர் போயிருக்கான்... அவளுக்கு திருடன் நுழைஞ்சது தெரிஞ்சுபோச்சு... வீட்ல ஒரு தம்படி கிடையாது... இப்படி வந்து மாட்டினுட்டானே திருடர் பிரகிருதின்னு..... அவனுக்காகப் பரிதாபப்பட்டாளாம்....
அவனும் கொல்லையோட வாசல் அலைஞ்சுப் பார்த்துப்பிட்டு... என்னடா இது ஒண்ணுமே தேரலை...விடியாமூஞ்சி வீட்டுக்குள்ள வந்து மாட்டினுட்டோமே... இவ்ளோ தூரம் வந்துட்டோம்... ஒண்ணுமேயில்லாம வீட்டுக்குப் போறது செய்யற தொழிலுக்கு இழுக்காச்சேன்னு...ரெண்டு மூணு ஜாமமா தயங்கித் தயங்கி வீட்டுக்குள்ளேயே சுத்தறான்...கால் ஓஞ்சுபோச்சு... ஏதும் ஆம்படலை.... கடைசியா சமையக்கட்டுல ஒரு ஓரமா ஈர உமி கிடந்ததை பார்த்துப்புட்டான்....சரி... வந்தத்தத்துக்கு உமியை அள்ளிண்டு போய்டுவோம்னு.. ஹால் மித்தத்துல நிலா பிரகாசமாத் தெரிஞ்சுதாம்.. அதனால அந்த வெளிச்சத்துல இடுப்புல கட்டிண்டிருந்த வேஷ்டியை அவுத்து கீழே விரிச்சுட்டு.. உமியை அள்ள உள்ள போனானாம்....
அவன் சமையக்கட்டுக்குப் போனபோது... ஹால்ல முழிச்சுண்டே படுத்துண்டு இருந்தவ... அந்த வேஷ்டியை சுருட்டிண்டு வாசல் ரூமுக்குள்ள போய் கதவைச் சாத்திண்டாளாம்... இடுப்புல வஸ்திரமில்லை... ரெண்டு கை நிறைய உமியை அள்ளிண்டு.... இன்னும் ரெண்டு கையில்லையே.. இந்த ஐஸ்வர்யத்தை அள்ளிண்டு போகன்னு....வந்து பார்க்கிறான்.. ஹால் தரையிலே விரிச்சிருந்த வேஷ்டியைக் காணலை... இது ஏதுடா வம்பாப் போச்சு... கௌபீனம் கூட இல்லாம வந்துட்டுமே...வேஷ்டியையும் காணலையே.. இப்ப என்னடா பண்றதுன்னு... இப்டியே வீதியிலே போனா ஊர்ல யாரெல்லாம் பயப்படுவாளோன்னு... வெளிறிப்போயி சுத்திமுத்தி தேடறான்...
அப்போ வாசல் ரூம்லேர்ந்து “ஐயோ.. திருடன்..திருடன்....”ன்னு ஜன்னல்ல நின்னுண்டு சத்தம் போட்டாளாம் அந்த வீட்டுக்காரி... கௌபீனம் இல்லைன்னாலும் பரவாயில்லைன்னு வாசல் தாண்டி அந்த ஜன்னல் கிட்டே ஓடி வந்து அந்த திருடன் ஆங்காரமா..... “அடியே.... நீ கொள்ளைக் குடுத்த அழகுக்கு கூப்பாடு வேறயோடி.....”ன்னு கேட்டுப்புட்டு அப்படியே ஓடிப்போயிட்டானாம்...
பி.கு: சே.அ.தீக்ஷிதர்வாள் பாகவத சப்தாகத்தில் சொன்ன ஜோக். லோக க்ஷேமார்த்தம் எழுதிப்பார்த்தேன். 
smile emoticon

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails