Sunday, October 22, 2017

விஜயவாடா கனக துர்க்கா

குன்றுப் பாதை செப்பனிடும் பணி நடப்பதால் மின்தூக்கியில் ஏழு மாடி தூக்கிச் சென்று தேவியிடம் விட்டார்கள்.
சட்டென்று தேவலோகத்தில் நுழைந்தது போலிருந்தது. சந்தனக் காப்பில் சிரித்த முகத்துடன் அருளினாள் கனக துர்க்கா. ஸ்வயம்பு என்கிறார்கள். பொன் மஞ்சளும் அரக்குக்கலர் பார்டரும் போட்ட பட்டுப் பாவாடையில் ஜெகஜோதியாய் பார்த்தேன். அற்புதமான தரிசனம். மனசுக்குள் இனம் புரியாத நிம்மதி. அம்மாவாரு அன்பின் ஸ்வரூபமாக காட்சியளிக்கிறாள். நமது கன்னம் கிள்ளி "செல்லக் கண்ணா" என்று கொஞ்சி மடியில் இருத்திக்கொள்ளும் நம் தாய் போன்றதொரு தோற்றம்.
காஞ்சி காமாட்சி கர்ப்பக்ரஹத்தினுள் வீசும் தாழம்பூ குங்கும வாசனை கனக துர்க்கை சன்னிதியிலும் மணத்தது. ஐந்து நிமிடங்களுக்கு மேலே அவளின் அழகைக் கண்டு ரசித்து அனுபவித்ததில் பிறவிப் பயன் அடைந்தேன். பிரசாதமாகத் தந்த குங்குமத்தை நெற்றியில் தரிக்கையில் மெய் சிலிர்த்தது. சுக்ரவாரத்தில் கிடைத்த அம்மன் தரிசனத்தில் உள்ளம் பூரித்தது. ஜெகமாளும் சக்திக்கு அனந்த கோடி நமஸ்காரம்.
யா தேவி சர்வ பூதேஷு லக்ஷமி ரூபனே சமஸ்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:


2 comments:

ப.கந்தசாமி said...

கோவில் எங்கே இருக்கிறது என்று சொல்லவில்லையே?

ஸ்ரீராம். said...

பாக்கியம்.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails