Monday, October 23, 2017

பாதி குடிச்ச சுருட்டு

ஒரு ஓட்டு வீடு பத்திக்கிச்சாம். வீடு பூரா எரிஞ்சு சாம்பலாயிடிச்சு. வீட்டோட ஓனர் வாசல்ல நின்னு ஓன்னு அழுதுக்கிட்டிருந்தானாம். அவனோட குடும்பமும் சேர்ந்து அழுதுச்சாம். சம்பந்தமே இல்லாம ஒருத்தன் அங்க வந்து நின்னு கேவிக்கேவி அழ ஆரம்பிச்சானாம். நீ ஏம்பா அழுவுற? இது உன்னோட வீடுமில்ல... அழறவங்க உன்னோட ரிலேடிவ்ஸ்ஸும் இல்ல.. ஸோ நீயும் சேர்ந்து ஏன் அழுவுற...ன்னு கேட்டாங்களாம்... அதுக்கு அவன் சொன்னான்..
இல்லே... அந்த வடக்குக் கூரை ஓடோட கடைசி வரிசைல என்னோட பாதி குடிச்ச சுருட்டு ஒண்ணு சொருகி வச்சிருந்தேன்.. அதுவும் சேர்ந்து மொத்தமா எரிஞ்சு போச்சேன்னு துக்கத்துல அழுவறேன்னு சொன்னானாம்...
அடி செருப்பால..ன்னு துரத்திக்கிட்டு போய் எல்லோரும் போட்டுச் சாத்துணாங்களாம்....
”அச்சச்சோ பெரிய ப்ராப்ளமா இருக்கே”ன்னு நினைச்சு நாம வருத்தப்பட்டுக்கிட்டிருக்கும் போது பக்கத்தில் வந்து நின்று கொண்டு பிசாத்து ப்ராப்ளத்துக்கெல்லாம் நொந்து போயி பினாத்துபவர்களைக் கண்டதும் மேற்கண்டவைகள் நியாபகம் வந்தது. என்னுடைய நண்பர் சுரேஷ் இதை ஒரு தெலுங்கு பழமொழியாக அறிமுகம் செய்தார்.

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails