Saturday, May 9, 2015

அகோரத் தபசி : அசோகமித்திரன்

ஞாயிறு மதியங்களில் அவசியம் ஒரு சிறுகதையோ நாவலோ படிக்கவேண்டும் என்கிற கட்டாய அட்டவணை ஒன்றை மானசீகமாக கடைபிடிக்கிறேன். ஒரு பத்து பக்கத்திற்குமேல் படிக்க நேரமில்லை என்று தெரிந்தால் கும்பகோணம் பதிப்பு மஹாபாரதமோ அல்லது தஸம ஸ்கந்தமோ புரட்டுவேன். அம்பரீஷனுக்காக துர்வாசரைத் துரத்திய சக்ராயுதக் கதை அப்படிதான் படித்தேன். அதை இன்னொரு பதிவில் எழுதுகிறேன். இப்போது வேறு கதை.

இன்று ”அகோரத் தபசி” மாட்டியது. அசோகமித்ரன். ஸாய் பஜனையில் பார்த்த யாரோ ஒருவரைப் பற்றிய கதை. “எல்லோரும் சாமியார்களைப் பார்க்கப் போறதே கஷ்டம் தீரறத்துக்குதானே..” என்று எழுதுகிறார். அதில் வரும் பசுபதி என்கிற பாத்திரம் கிருஷ்ணாம்பேட்டையில் பூஜை செய்யப் போகிறது. ப்சுபதியின் மனைவிக்கு உதவிக்கரம் நீட்டி இவர் க்ருஷ்ணாம்பேட்டையைத் தேடிக்கொண்டு செல்கிறார். மொத்தம் ரெண்டரை பக்கம்தான் கதை. 

கிருஷ்ணாம்பேட்டை வர்ணனையும் அங்கே வெட்டியானுடன் நடக்கும் சம்பாஷனையும் அபாரம். சாம்பிளுக்கு சில.

# இவ்ளோ பெரிய ஸ்மசானமா? உலகத்தில் உள்ளவர்கள் எல்லோரையுமே அங்கே சமாதி கட்டிவிடலாம் போலிருந்தது. எங்கெங்கோ பிணங்கள் எரிந்துகொண்டிருந்தது.

# ”இங்கே நேத்து முந்தினம் கறுத்த மனுஷன் ஒருத்தர் வந்தாரா?”

“நூறு பேர் வந்தாங்க.. நாங்க பொணத்தத்தான் பார்ப்போம்.. ஆணா.. பொண்ணா?”

# ”இவரு பூஜை சாமான் கொண்டு வந்திருப்பாரு.. கருப்பா உசரமா”

“ம்...ஒருத்தன் எலும்பு திருட வந்தான். போலீஸ் கொண்டு போய்ட்டாங்க”

“அந்த ஆள் பேரு எதாவது சொன்னாரா?”

“எலும்பு திருடறவனுக்கு பேர் என்ன?”

“ஏன் .. உனக்கு பேர் இல்லியா”

“என்ன பேரு சின்ன வெட்டியான், அண்ணன் பெரிய வெட்டியான்”

அனாயசமாக ஆளை அடித்துப் போடும் வசனங்கள். எவ்ளோ யதார்த்தம்! உனக்குப் பேர் இல்லியா? என்கிற கேள்விக்கு சொன்ன பதில்... அமியின் சொற்சிக்கனமும் சொற்களின் வாயிலாக படம் பிடிக்கும் காட்சிகளும்... 

கதையைப் படித்த பின்னர் வழக்கமாக ஞாயிறு மதியம் கண்கள் சொருகிக் கட்டையைச் சாய்க்கும் எண்ணம் கூட வரவில்லை.

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails