Wednesday, September 17, 2014

கடன்காரன்

மனோவுக்கு ”காதோரம் லோலாக்கு” பாடல் மூன்று டேக் வாங்கியதாம். ஜானகியம்மா ராஜாவிடம் ”மிரட்டாதே...”ன்னு சொல்லிவிட்டு “நீ பயப்படாம பாடுடா...”ன்னு தெம்பூட்டியதைக் குட்டிப் பசங்களுக்கு நேரே அரிச்சந்திரனாய் ஒப்புக்கொண்டார் மனோ. எண்பது தொன்னூறுகளில் ராஜாவின் பொற்காலமாக இருந்த திரையிசைக்கு இதுவும் ஒரு மூலகாரணம். இசைக் கலைஞர்களுக்கும் பின்னணிப் பாடகர்களுக்கும் இடையே இருந்த அன்பு ஃபெவிகால் போட்டு ஒட்டிய ”பச்ச்ச்சக்...”. தோழமை. பந்த பாசம். லட்சோப லட்சம் பேர் பார்க்க இதை டிவியில் வெளிப்படையாகப் பேசிய மனோ மனோதிடம் மிகுந்த ஆள். ஹாட்ஸ் ஆஃப்.

*

கல்யாண மண்டபத்தில் மாக்கோலம் போட்டதிலேர்ந்து கட்டுசாக்கூடை கட்டி புதுப் பொண்ணை புக்காத்துக்கு அனுப்பும் வரை ஓடியாடி வேலை செஞ்சா தொண்டை கட்டுமே... சுண்ணாம்பு தடவிய தொண்டைக் குழியிலிருந்து ”புஸ்ஸு.. புஸ்ஸு..”ன்னு வெறும் காத்து மட்டும் வருமே... அதுமாதிரி தொண்டை அடைத்திருக்கும் ஜானகியை விஜய் டிவில கூப்பிட்டு.... சோஃபால உட்கார வைச்சு... பாடச் சொல்லி பாவகாரியம் செய்கிறார்கள். புண்ணியம் செய் மனமே...மனமே...

**

”யார் சார் ஃபோன்ல...”
“கடன்காரன்...”
“அச்சச்சோ.. .. படுபாவி... எவ்ளோ தரணும்?”
”இல்லை.. நாந்தான் அவனுக்குப் பத்தாயிரம் தரணும்....”
“கலியுகத்துல கடன் கொடுத்தவன் கடன்காரனாயிடறனா?.. போச்சுடா...”
“ஹி..ஹி.. ஆமாம்.. கடன்கொடுத்தார் நெஞ்சம் போல கலங்கினான் இன்றைய வேந்தன்....”
வாய்க்கு ஜிப் போட்டுக்கொண்டேன்.

***

‪#‎அக்கப்போர்‬
‪#‎சூசி‬

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails