Wednesday, September 17, 2014

இசை மும்மூர்த்திகள் - திராக்ஷை:வாழை:பலா

தியாகைய்யரின் கீர்த்தனங்கள் திராக்ஷை மாதிரி.... கொத்துலேர்ந்து ஒவ்வொன்னா பறிச்சு அப்டியே வாய்ல போட்டுக்கலாம். ஈஸி. ஷ்யாமா சாஸ்திரியினுடையது வாழைப்பழம்... தோலை பக்குவமா உரிச்சு உரிச்சு சாப்பிடணும். தீக்ஷிதர் க்ருதிகள் மாதுளம் பழம் போல.. பழத்தை உரிச்சு.. பிரிச்சு... முத்துகளைத் தட்டித் தட்டிச் சாப்பிடறா மாதிரி.. கொஞ்சம் மெனக்கெடனும்... ராக ரஸத்தைப் பிழிந்து தருவதால் மும்மூர்த்திகளின் கீர்த்தனங்களைப் பழமாக பாவித்தது அற்புதம்.

கர்நாடிக் ம்யூசிக் கேட்கணும் போல இருந்தது. யூட்யூப் அலசலில் யதுகுலகாம்போஜியில் அமைந்த ஷ்யாமா சாஸ்திரியின் “அம்பா காமாக்ஷி” கேட்க நேர்ந்தது. டி.எம்.க்ருஷ்ணா பாடியது. உருகியது. ஊரடங்கிய பின் கேட்டது சுகானுபவமாக இருந்தது. காஞ்சி காமாக்ஷியின் சன்னிதியில் நேரில் கொண்டு போய் நிறுத்தியது. தாழம்பூ குங்கும வாசனை. யதுகுல காம்போஜி, பைரவி, தோடி மூன்றும் “ரத்ன த்ரையம்” என்று சாஸ்திரியின் பாடல்களில் போற்றத்தக்கவையாம். 

இத்துடன் இணைக்கப்பட்ட சுட்டியில் எழுதியிருந்தவைகளை முதல் பாராவில் தமிழ்படுத்தியிருக்கிறேன். கர்நாடக சங்கீதம் எனக்கு கேள்வி ஞானம்தான்.

http://youtu.be/RfRcP5rHk4g
‪#‎அம்பா_காமாக்ஷி‬

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails