ஒரு குரூப்பாக பாழுங்கிணற்றைத் தாண்டி தவ்விச் சென்ற தவக்களைகளில் இரண்டு கால்தவறி அதற்குள் தொபகடீரென்று விழுந்துவிட்டது.
இரண்டு தவளைகளும் முழுத் தெம்பையும் உபயோகித்து குதித்து எம்பிப் பார்த்துக்கொண்டிருந்தன.
இதை மேலேயிருந்து வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த சக தவக்களைகள் “உஹும்.. இது ரெண்டும் பூட்ட கேஸு. இனிமே இவன்களால நிச்சயமா எந்திரிச்சு வெளியே வரமுடியாது.” என்று தலையாட்டி பெட் கட்டி விவாதித்துக்கொண்டிருந்தன.
கரைத் தவக்களைகளின் இந்தக் கேலி சம்பாஷனையைக் கேட்ட கிணற்றில் விழுந்த ஒரு தவக்களை திராணியற்று ஸ்தம்பித்துப்போய்விட்டது. சிறிது நேரத்தில் ஹார்ட் அட்டாக் வந்து அந்த இடத்திலேயே உயிரைவிட்டது.
இன்னொரு தவளை விடாமல் எம்பியது. அந்தத் தவளை அண்ணாந்து பார்த்து தப்பிக்க மூச்சுமுட்டக் குதிக்கும்போதெல்லாம் கிணற்றுக்கட்டையில் குழுமியிருந்த தவளைகள் கைகொட்டிச் சிரித்து அதன் முயற்சியை பழித்தன.
விடாக்கொண்டனாக தொடர்ந்து எழும்பி கடைசியாக ஒரு க்ளைமாக்ஸ் ஜாக்கிசான் துள்ளலில் வெளியே வந்து குதித்துவிட்டது அந்த தவக்களை.
இரண்டு தவளைகளும் முழுத் தெம்பையும் உபயோகித்து குதித்து எம்பிப் பார்த்துக்கொண்டிருந்தன.
இதை மேலேயிருந்து வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த சக தவக்களைகள் “உஹும்.. இது ரெண்டும் பூட்ட கேஸு. இனிமே இவன்களால நிச்சயமா எந்திரிச்சு வெளியே வரமுடியாது.” என்று தலையாட்டி பெட் கட்டி விவாதித்துக்கொண்டிருந்தன.
கரைத் தவக்களைகளின் இந்தக் கேலி சம்பாஷனையைக் கேட்ட கிணற்றில் விழுந்த ஒரு தவக்களை திராணியற்று ஸ்தம்பித்துப்போய்விட்டது. சிறிது நேரத்தில் ஹார்ட் அட்டாக் வந்து அந்த இடத்திலேயே உயிரைவிட்டது.
இன்னொரு தவளை விடாமல் எம்பியது. அந்தத் தவளை அண்ணாந்து பார்த்து தப்பிக்க மூச்சுமுட்டக் குதிக்கும்போதெல்லாம் கிணற்றுக்கட்டையில் குழுமியிருந்த தவளைகள் கைகொட்டிச் சிரித்து அதன் முயற்சியை பழித்தன.
விடாக்கொண்டனாக தொடர்ந்து எழும்பி கடைசியாக ஒரு க்ளைமாக்ஸ் ஜாக்கிசான் துள்ளலில் வெளியே வந்து குதித்துவிட்டது அந்த தவக்களை.
ஹீரோயிஸம் காட்டிய அந்தத் தவளையை எல்லாத் தவளையும் சூழ்ந்துகொண்டு “டேய்! ஹீரோ. எப்படிடா அவ்ளோ ஆழத்திலிருந்து தப்பிச்சே” என்று தோளைத்தட்டி விசாரித்தபோது திருதிருவென்று விழித்த தப்பித்த தவக்களை “என்ன?” என்று ஜாடையாக கையை ஆட்டியது.
ஐந்தாறு முறை எல்லாத்தவளையும் கூக்குரலிட்டு கேட்டபோதும் பதிலலிக்காததால் ஒரு மோட்டா தவக்களை வாயருகில் கையை கொண்டு வந்து “பேசமாட்டியா?” என்று அபிநயத்தது.
”பஹ்..”என்று சிரித்த அந்தத் த.தவளை, “ச்சே..ச்சே... நல்லா பேசுவேன். ஆனா காதுதான் சுத்தமாக் கேட்காது”ன்னுது.
நீதி: வாழ்க்கையில முன்னேறனும்னு நினைச்சா அதற்கு தடையா அனாவசிய டயலாக்ஸ் வரும்போது காதுக்கு “கே” இனிஷியல் மாட்டிக்கோங்க. உருப்படலாம்.