Showing posts with label ஜோக்ஸ். Show all posts
Showing posts with label ஜோக்ஸ். Show all posts

Saturday, May 9, 2015

மிஸஸ் ஜோஷி

"தோ பார்றா... நானு உன்ன மாதிரி அறிவுக்கொழுந்து கிடியாது... மூளை புடைக்கிற மாதிரி புத்திஜீவித்தனமான சோக்குகீக்கெல்லாம் பண்ணாத... அப்புறம் ’நீ ஏன்டா சிரிக்கலை... நீ ஏன்டா சிரிக்கலை’ன்னு நாள்பூரா முதுகுல ரத்தம் வர பிராண்டக்கூடாது.. கேட்டியா...”

“ஹக்காங்..... ரொம்பதான் சிலுத்துக்கிறியே.. சொல்றேன்.. புர்தா பாரேன்....”

“ம்... சொல்லித் தொலை....”

“ஒரு நாளு மிஸஸ் ஜோஷிக்கு ஒரு ஃபோன்... ஹலோ.. மிஸஸ் ஜோஷி இருக்காங்களா? ம்... மிஸஸ் ஜோஷிதான் பேசறேன்....என்ன வேணும்னு அப்டீன்னாங்க....”

“போச்சுடா.. இது க்ராஸ் டாக் மொக்கையா?”

“இருடா.... பல்பு வாங்காதே... பொறுமையாக் கேளு.. மேடம்.. நானு டாக்டர் காந்தன் மெட்ரோ லேபாரேட்டரிலேர்ந்து பேசறேன்னுதும்... மிஸஸ் ஜோஷிக்கு கையும் ஓடலை.. காலும் ஓடலை...”

“காலு ஓடும். கை எங்கியாவது ஓடுமாடா?”

“இப்ப நீ வாயைப் பொத்தலைன்னா என் கை உன் கன்னத்துல ஓடும்.... என்னாச்சு என்னாச்சு...ன்னு வார்த்தைக்கு வார்த்தை எக்கோ போட்டுக் கேட்டாங்க மிஸஸ் ஜோஷி..... அதுக்கு லாப் டாக்டரு... போன வாரத்துல உங்க டாக்டர் மிஸ்டர் ஜோஷியோட சாம்பிளை பயாப்ஸிக்கு கொடுத்தாரு... அதே டயத்துல இன்னொரு ஜோஷியோட சாம்பிளும் பயாப்ஸிக்கு லேப்புக்கு வந்திச்சு.. எப்படியோ சாத்தான் க்ருபையால ரெண்டு சாம்பிளும் கலந்துடிச்சி.. இப்ப யாரோட ரிசல்ட் யாரோடதுன்னு எங்களுக்கே விளங்கலை.. ஆனாலும் ரெண்டு ரிசல்ட்டுமே சொல்லிக்கும்படியா இல்லை... ஒன்னுக்கு அல்ஸீமர். இன்னொன்னுக்கு ஹெச்ஐவி பாஸிட்டிவ்.”

”மணாளனே மங்கையின் பாக்கியம்.... மேலே சொல்லு....”

“உடனே மிஸஸ் ஜோஷி.... அச்சச்சோ டாக்டர்.. எம்புருஷனுக்கு திரும்பவும் சாம்பிள் எடுங்க.. டெஸ்ட் பண்ணிப்பார்த்துடுங்க...அப்படீன்னு துடிச்சுட்டாங்க... லேப் ஆள் ரொம்ப பொறுமையா சொன்னான்.. பதறாதீங்க மேடம்... இது ரொம்ப காஸ்ட்லியான டெஸ்ட். இன்ஷூரன்ஸ் ஆசாமிங்க இன்னொரு தபா இதுக்கே பணம் தரமாட்டாங்க...”

“புருஷனை அடிச்சுத் துரத்திட்டு என்னைக் கல்யாணம் பண்ணிக்கோ..ன்னு லாப் ஆசாமி ஆசை காட்டினானா?”

“டேய் அது ஜோக்காடா.. கிராதகா... காலை காட்சி மலையாள படம்டா... முடிச்சப்புறம் பேசுடா... மிஸஸ் ஜோஷி... லாப் டாக்டர்கிட்டே இப்ப என்ன பண்ணலாம்னு யோசனை கேட்டாங்க.... உடனே லேப் டாக்டர்.. மேடம் மேடம்... இன்ஷூரன்ஸ் ஹெல்ப் டெஸ்க்ல கேட்டேன் அவங்க ஒரு ஐடியா கொடுத்துருக்காங்க... செய்யறதும் சுலபம். பைசாவும் பெரிசா செலவில்லை...”

“உங்க கல்யாண புடவை எதுன்னு கேளுங்க.. தெரியலைன்னா உங்க புருஷனுக்கு அல்ஸீமர்... டிவோர்ஸ் பண்ணிடுங்க... இதானே ஜோக்கு.... போடாங்....”

”நாக்கை மடிக்காதடா பேக்கு... அப்படிப் பார்த்தா உலகத்துல 99 பர்செண்ட ஹஸ்பெண்ட்ஸுக்கு அல்ஸீமர்தான்.. டிவோர்ஸ்தான்.... ஹெல்ப் டெஸ்க்ல சொன்னாங்களாம்.... புருஷனை வண்டியில ஏத்திக்கிட்டு கண்காணாத இடத்துல கொண்டு போய் இறக்கிட்டு திரும்பிப் பார்க்காம வீட்டுக்கு வந்துடணுமாம்....”

“அப்ப நான் சொன்னதுதானே... புதுசா கல்யா.....”

“டேய்.... குரவளையை கடிச்சுருவேன்.. வெறியேத்தாதே.... அவங்க சொன்னதை அப்படியே அடுத்த வரில சொல்றேன் கேட்டுக்கோ...

மேடம் நீங்க வீட்டுக்கு வந்தப்புறம்.... எங்கியோ கொண்டுபோய் இறக்கி விட்ட புருஷன் அட்ரெஸ் மாறாம வீடு தேடி கரெக்டா வந்து கதவைத் தட்டினா.... தயவுசெய்து கிட்ட சேர்த்துக்காதீங்க....அது ஆபத்து... அப்டீன்னு சொன்னாங்களாம்..”

”புரிஞ்சுதுன்னு சொல்லிட்டு படார்னு சிரிச்சுடறேன்.. இல்லைன்னா நீ திரும்பவும் இதோ ஜோக்கை சொல்லிப் படுத்துவே... ஹி.ஹி.ஹி.ஹி... ஹாஸ்யம் பரம ஔஷதம்....”

Monday, August 9, 2010

செமினார் செல்வங்கள்

sleepஇந்த பொட்டி தட்டி வயிறு நிரப்பும் வேலையில் இருப்பதால் அடிக்கடி  இது ஃபீல்டுக்கு புதுசு என்றும், ரோடு ஷோ என்றும், மென்பொருள் உருவாக்குபவர்கள் சங்கமம் என்றும், திட்ட அதிகாரிகள், முதன்மை தொழில்நுட்ப அதிகாரியில் (CTO) ஆரம்பித்து முதன்மை எக்ஸ் அதிகாரி(CXO) வரை நடத்தப்படும் கருத்தரங்குகள், பயிலரங்கங்கள் போன்றவற்றிக்கு போன் மேலே போன் போட்டும், ஈமெயில் அனுப்பியும் மாப்பிள்ளை வீட்டுக்காரர்களை கூப்பிடுவது மாதிரி வருந்தி வருந்தி அழைப்பார்கள். சமீபத்தில் இதுபோல் கூப்பிட்ட மரியாதைக்கு போய் எட்டிப்பார்க்கலாம் என்று போனதில் கிடைத்த திருவாசகம் தான் இது.

"அதே அலுத்துப்போன மேரி, சீதா, ராணி போன்ற கம்பனியின் கந்தர்வக் கன்னிகளை ஒருநாளேனும் கண்ணுறாமல் இருப்பதற்கும், கழனித்தண்ணி கேண்டீன் காப்பியை தவிர்ப்பதற்கும், துர்வாசம் வீசும் இயற்கைக்கு ஒதுங்கும் அறைகள் மேலும் வீசாமல் இருக்கவும், ஓயாமல் தொலைபேசி பிடுங்கும் உள்ளூர்/வெளியூர் ஆபிஸ் ராட்ஷசர்களிடம் இருந்து தப்பிப்பதர்க்கும், ஒரே இடத்தில் உட்கார்ந்து பொட்டி தட்டி கைகால்கள் மரத்து போகாமல் ஒரு உடற்பயிற்சி போல இருக்கவும், நம்போன்றோருக்கு அமையும் கபாலி கோயில் அருட்ப்ரசாதம்தான் ஸ்டார் ஹோட்டல் செமினார்கள்"
 என்று இந்த தளத்தில் பத்து பதினைந்து வருடங்கள் பழம் தின்று கொட்டை போட்டு சுறுசுறுப்பாக ஒரு இளைஞன் போல் இயங்கிக்கொண்டிருக்கும் "செமினார் செல்வன்" ஒருவர் தெரிவித்தார். இவ்வகை செமினார்கள் பற்றியும் அதில் பக்குவமாக பார்வையாளனாக பங்குபெறுவது எப்படி என்பது பற்றியும் நம்மிடம் அவர் பகிர்ந்த விஷயங்களில் சில துளிகள் கீழே.

1. நாள்தோறும் கணினிப் பொட்டியை திறந்து மெயில் பார்க்கையில், முதலில் ஆரக்கிள், மைக்ரோசாப்ட், அடோபி, ஐ.பி.எம், இன்டெல் போன்ற உலக கம்பனிகளில் இருந்து மெயில் வந்திருந்தால், முதல் வேலையாக பார்த்தகையோடு நாள், கிழமை, நட்சத்திரம் பார்த்துக்கொண்டு "ஐயா/அம்மா நான் நிச்சயம் வருகிறேன், எனக்கு ஒரு சீட் போடுங்கள்"  என்று ஒரு பதில் மெயில் அனுப்பி உடனே ஒரு இருக்கையை பிடிக்கவேண்டும். முக்கியமாக, இவ்வகை பிரசங்கங்கள் இலவசமாக இருக்கவேண்டும். அப்போதுதான் நிர்வாகத்தில் சுலபமாக ஓ.கே வாங்கி ஆபிசிலிருந்து தப்பிக்க முடியும்.

2. காலை 9.30 மணியளவில் பேசும் நிகழ்ச்சி ஆரம்பம் என்றால், ஒன்பது மணிக்கே போனால் வரவேற்ப்பில் உட்கார்ந்திருக்கும் ஜீன்ஸ் வெள்ளை சொக்காய் போட்ட பெண்களின் புன்னகை அழைப்போடு தலையில் வெள்ளை குல்லா போட்ட நட்சத்திர சர்வர் கொடுக்கும் டீ காப்பி பிஸ்கட் போன்ற பதார்த்தங்கள் கிடைக்கும். ஜீன்ஸ் வனப்பிற்கு டீ வாயிற்கு. கையில் உங்கள் முகவரி அட்டை இருந்தால் ஒரு பெட்டியில் போட்டு தப்பித்து விடலாம். இல்லையென்றால் வாசலில் நிற்க வைத்து உங்கள் ஜாதகம் எழுதச் சொல்லி படுத்துவார்கள்.

3 . உள்ளே சென்றதும், எந்த சீட்டுக்கு மேல் குழாய் விளக்கு இல்லையோ அதுவே நமக்கு தோதான இடம். பாடசாலையில் படிக்கும் காலத்தில்தான் மாப்பிள்ளை பெஞ்சு அதிசேஃப். இதுபோன்ற செமினார்களில் முதல் வரிசையில் இடதோ, வலதோ கோடி இருக்கை மிக மிக சௌரியம். உட்கார்ந்தவுடன் தூங்கக்கூடாது. அப்படியே தூங்கினாலும் குறட்டை விடக் கூடாது. அப்புறம் பேசுபவர் மைக் வழியே அரங்கத்திர்க்கே உங்கள் குறட்டை சென்றடைந்து நீங்கள் தூங்குவதைக் காட்டிக் கொடுத்துவிடும்.

4. ரொம்பவும் தூக்கம் தூக்கமாக கண்ணை சுழற்றிக்கொண்டு வந்தால், அழைப்பே வராத அலைபேசியை காதுக்குள் சொருகி, வாயை கையால் பொத்தாமல் பொத்தி, ஏதோ தலைபோகிற அவசர அழைப்பு போல எழுந்து வெளியே ஒட்டமும் நடையுமாக சென்றுவிடவேண்டும். ஓய்வு அறை பக்கம் சென்று மூஞ்சி அலம்பி, கை காயவைக்கும் இயந்திரம் கீழே இரண்டு நிமிடம் ஏந்திக் காட்டிவிட்டு  திரும்பினால் இன்னொரு ஒரு மணி நேரம் தாங்கும். அதுவும் சிலபேருக்கு தான் அந்த கொடுப்பினை. அப்படி வரம் இல்லாதவர்கள் அந்த ஜீன்ஸ் பேண்ட் போட்ட பெண்கள் கொடுத்த ஒருபக்க அஜெண்டாவை வெறித்து பார்த்து நெட்ரு  பண்ணிக்கொண்டோ,  அல்லது விழா எப்படி நடந்தது, உங்களை அதிகம் தூங்க வைத்த பேச்சாளர் யார், விழாக் கம்பனியார் உங்களுக்கு ஏற்படுத்திக்கொடுத்த சௌகரியங்கள் பற்றி என்று நிகழ்ச்சி முடிவில் பூர்த்தி செய்யப்பட வேண்டிய படிவத்தை பூர்த்தி செய்யலாம்.

5. நாம் தூங்குகிறோம் என்று தெரியாத வண்ணம் அவ்வப்போது இரண்டு காலையும் ஆட்டுவது, தீடீரென்று யாரோ "டேய்.." சொல்லி கூப்பிட்டது போல பின்னால் திரும்பி பார்ப்பது, தலையை மையமாக வறுமையின் நிறம் சிகப்பு கமல் போல அசைப்பது, கொடுத்த கிறுக்கல் புத்தகத்தில் ஹார்டீன் போட்டு அம்பு விடுவது, பல தினுசுகளில் ஸ்டார் டிசைன் வரைவது, வீட்டில் உட்கார்ந்து சாவகாசமாக பார்க்கமுடியாத பால் கணக்கு போன்ற இத்யாதிகள் எழுதுவது, ரொம்ப மனசுக்குக் கஷ்டமாகவும் சங்கடமாகவும் இருந்தால் சஷ்டி கவசம் எழுதிப்பார்ப்பது போன்ற உபயோகமான செயல்களில் ஈடுபடலாம். போற வழிக்கு புண்ணியமாக போகும்.

6. ஒரு பதினொன்னரை மணி வாக்கில் லைட் போட்டு ஒரு இண்டர்வல் விடுவார்கள். எல்லோருக்கும் முன்பாக ஓடிப்போய் கையில் கப்பேந்தி ஒரு கட்டஞ்சாய் குடித்துவிட்டு, தட்டில் பரப்பி வைத்திருக்கும் பிஸ்கட்களில் நமக்கு பிடித்தவையாக ஐந்தாறு தேர்ந்தெடுத்து கையில் அடுக்கி வைத்து சாப்பிட்டுவிட்டு, யாராவது தெரிந்த முகம் போல இருந்தால் "எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே...போனவாரம் கன்னிமாரா வந்தீங்களா.." என்று கொஞ்சம் பேச்சுக்கொடுத்து பொழுதை போக்கிவிட்டு, எல்லோரும் போனவுடன் ஒருமுறை ரெஸ்ட் ரூம் சென்றுவிட்டு ஆறஅமர மெதுவாக பன்னிரண்டு மணி வாக்கில் உள்ளே சென்று அமரவேண்டும்.

7 . பன்னிரண்டு மணியிலிருந்து அடுத்த அரைமணி நேரம் தாக்குப் பிடிப்பதுதான் இந்த உலகத்திலேயே பேரம் பேசாத சென்னை ஆட்டோ கிடைப்பது மாதிரி அவ்வளவு கஷ்டம். சர்வ நிச்சயமாக வெளியில் தட்டில் இருந்து பொறுக்கிக்கொண்டு வந்த மின்ட் எடுத்து சாப்பிட்டே ஆகவேண்டும். சப்பி சாபிடாமல் மின்டை கடித்து தின்று அதையும் தீர்த்த பின்னர், கள் உண்ட மயக்கத்தில் கண்கள் மூடுவது போல ஸ்லோ மோஷனில் இமைகள் மூடித் திறக்கும். பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் சகதூங்கியின் கால் தானாக நம் கால் மேல் இடிபட எழுந்துவிடவேண்டும்.

8. ஒருவாறாக ஒரு மணியளவில், பேச்சாளர் தனது உரையை ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்து முடித்துவிட்டு "யாருக்காவது டவுட்ன்னா கேள்வி கேளுங்கப்பா..." என்று ஒரு குரல் விடுவார். மிகவும் சமர்த்தாக உட்கார்ந்து பிரசங்கம் கேட்ட ஏதாவது அதிகப்ப்ரசங்கி சாப்பாடு நேரம் என்பதை மறந்து உலகளாவிய டெக்னாலஜி பற்றி சிப், டேட்டா  குவஸ்ட் போன்ற ஊரில் கிடைக்கும் சஞ்சிகைகளை உருப்போட்டு படித்துவிட்டு தாறுமாறாக கேள்வி கேட்டு பேசியவரை படுத்துதோ படுத்து என்று படுத்தி குஷியடையும்.
9. எல்லோரும் கேட்கும்போது சம்ப்ரதாயத்துக்கு நாமும் கேள்விகனை தொடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தால், "மைக்ரோசாப்ட்டை பில் கேட்ஸ் தான் இப்ப பார்த்துக்கராரா?", "ஆரகிள் டேட்டாபேஸ் என்னோட இஸ்த்திரி டேட்டா வைக்க பயன்படுமா?", "500 ஜிபி ஹார்ட்டிஸ்க்கில் 501 ஜிபி ஸ்டோர் பண்ண நான் என்ன செய்யணும்?" என்று உலகே அதிசயிக்கும் வண்ணம் ஆச்சர்யமான சிலபல கேள்விகளை கேட்டு இரண்டு மணிநேரம் பேசியவரை இரண்டே நிமிடத்தில் திக்குமுக்காட செய்துவிடவேண்டும். இந்த வினாக்களால் கொஞ்சநேரத்தில் அரங்கமே கப்சிப்பாகி எல்லோரும் சாப்பாட்டை பார்க்க நடையை கட்ட ஆரம்பித்துவிடுவார்கள். தப்பித்தது டெக்னாலஜி.

10. பசியூட்டி என்று சூப் வைத்திருப்பார்கள். காணாததை கண்ட மாதிரி நிறைய ஊற்றி குடிக்காமல் கொஞ்சமாக அரை கப் வாங்கி குடித்துவிட்டு மெயின் ஐட்டத்திற்கு போய்விட வேண்டும். முழு கப் வழிய வழிய வாங்கி ஏக் கல்ப்பில் அடித்துவிட்டால் சாப்பாடு சாப்பிட முடியாது. பசியூட்டி பசியாற்றி ஆகிவிடும். சமைத்துப் பார் போல நட்சத்திர ஹோட்டல் சாப்பாட்டை வெறித்துப் பார் என்றாகிவிடும். சைவ அசைவ ஐட்டங்களுக்கு பெயர்ப்பலகை வைத்திருப்பார்கள். நமக்கு வெறும் சாம்பார் உருளை கறிதான் வேண்டும் என்றால் அதை மட்டும்  சாப்பிட்டுவிட்டு தயிர்சாதம் டேபிளை அடைந்து கொஞ்சமாக உள்ளே தள்ளிவிட்டு, வன்னிலா ஐஸ்க்ரீம் வித் ஃப்ரூட் சாலட் என்று மேற்ப்படிகள் சாப்பிடுவதற்கு கொஞ்சூண்டு மேல் வயிற்றில் இடம் வைத்துக்கொள்ளவேண்டும். இவ்வளவையும் செமத்தியாக ஒரு கட்டு கட்டியபின், ஸ்வீட் சோம்பு ஒரு கை எடுத்து வாயில்போட்டுக் கொண்டு ஃபீட்பேக் படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்துவிட்டு சுகமாக தூங்குவதற்கு அலுவலகம் சென்றுவிட வேண்டும். 

இதில் கண்ட விஷயங்கள் ஒரு அரை நாள் செமினாருக்காக எழுதப்பட்டது. முழுநாள் செமினாருக்கு இதைவிட அதிகமான விஷயங்கள் இருப்பதாகவும் அதற்க்கு இன்னொரு அடையார் ஹோடேல்லிலோ, சோளா ஷேரடானிலோ, தி பார்க்கிலோ சந்திக்கும்போது விலாவாரியாக பாடம் எடுப்பதாக சொல்லிச்சென்றார் அந்த அன்பர். காத்திருங்கள் முழு செமினாருக்கு.

பட உதவி: blog.sleepingsimple.com

Friday, July 30, 2010

ஆங்கிலத்தில் வசைபாடும் கொரியன்

இந்த வசை பாடும் இலக்கணப் பதிவு கண்டிப்பாக ரசிப்பவர்களுக்கு மட்டும். மேலும் இதை ஒரு நகைச்சுவையாக பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மற்றவர்கள் இன்று என்னுடைய சைட்டுக்கு லீவ் என்று நினைத்துக் கொள்ளுமாறு வேண்டிக்கொண்டு, நாளை சனிக்கிழமை சங்கதியில் சந்திக்கலாம் என்று பணிக்கிறேன். 

ரோடில் கொஞ்சம் ஓரமாக போய்க்கொண்டு இருந்தால் கூட "ஓரமா போடா சாவு கிராக்கி" என்று திட்டும் போது நமக்கு கொஞ்சம் பி.பி ஏறும். உடனே அவர்களை திட்டுவர்தற்க்கு நம்மில் சிலபேருக்கு வார்த்தை கிடைக்காமல் தடுமாறலாம். அவ்வளவு ஒழுக்க சீலர்கள் இருப்பார்களா என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது. இருந்தாலும் அடியேன் போல் பலருக்கு கெட்டவார்த்தை என்றால் எது காய்கனி கெட்டுப்போய்விட்டது என்று சொல்வார்களே அதுபோல ஏதோ வார்த்தை தான் கெட்டுப்போய்விட்டது போலிருக்கிறது என்று நினைத்துக்கொள்வேன். அவ்வளவு யோக்கிய சிகாமணி.
koreanswear1
கொரிய போன்ற நாடுகளில், ஆங்கிலம் பேசும் அந்நியர்கள் தங்களைத் திட்டினால் எப்படி அவர்களுக்கு மறுமொழி அளிப்பது என்பது பற்றி போர்டில் சாக்பீஸ் கொண்டு, டை கட்டி ஒரு பேராசிரியர் போல சொல்லிக்கொடுப்பதை பார்த்த பின்புதான், நம்முடைய ஒரு துறையின் அறிவாற்றலை எப்படி மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தெரிந்தது.தமிழில் என்ன ஒரு பிரச்சினை என்றால் ஏரியாவுக்கு  ஏரியா பேட்டைக்கு பேட்டை இது மிகவும் வித்தியாசப்படும். ஒரு பகுதியில் பேசும் நன்மொழி மற்றொரு பகுதியில் கொச்சை வார்த்தையாகவும், கொச்சை வார்த்தை நல்ல வார்த்தையாக மற்ற இடத்தில் வழக்கில் இருக்கும்.

ஒரு இலக்கணம் வகுத்து அவர் நடத்தும் இந்தப் பாடம் கொரியனில் இருந்தாலும் அதற்க்கு ஆங்கிலத்தில் கார்டு போடுகிறார்கள். இதில் மிக முக்கியம் என்னவென்றால் இதை சொல்லிக்கொடுக்கும் மகானுபாவனின் முகபாவனைகள் தான்.  ஒவ்வொரு வார்த்தைகளையும் தனியாகவும் அதோடு "THE" சேர்த்து சொல்லும்போது எப்படி அதன் பொருள் மாறுகிறது என்று சொல்லும் இலக்கண இலக்கிய வித்தியாசங்கள் அருமை. நான் இதைப் பார்ப்பதற்கு முன்னால் யூடுயூப்பில் 386,234 பேர் இந்த வகுப்பில் பங்குபெற்று தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். ஆகையால் கொச்சை அல்ல என்று தெரிகிறது. கண்டு கேட்டு ரசியுங்கள்.

 

பார்த்தாயிற்றா? தயவு செய்து என்னை திட்டாதீர்கள். பார்க்கும் வரையில் ரசித்துவிட்டு பின்பு திட்டுவது என்ன நியாயம்.

Saturday, June 12, 2010

கல்யாணமான பெண் யார்?

 கல்யாணமான பெண் யார்?


மேற்க்கத்திய நாடுகளில் லிட்டில் ஜானி ஜோக்குகள் மிகப் பிரபலமானவை. இந்த ஜோக் அசைவ வகையறா. சைவப் பிரியர்கள் இதற்குமேல் படிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வகுப்பறையில் பாடங்களை கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தான் லிட்டில் ஜானி. வகுப்பெடுத்துக்கொண்டிருந்த மேடம் லிட்டில் ஜானியிடம் கீழ் கண்ட கேள்வியை கேட்டார்.

"ஜானி, ஒரு லாம்ப் போஸ்ட் வயர்-ல மூனு பறவைங்க உட்கார்ந்துகிட்டு இருக்கு. ஒரு வேடன் துப்பாக்கி எடுத்து ஒரு பறவையை சுட்டுட்டான். மீதி எவ்வளோ பறவை இருக்கும்?"

"ஒன்னும் இருக்காது மேடம்"

"எப்படி?"

"துப்பாக்கி சத்தத்துல பயந்து பறந்திருக்கும்"

"விடை தவறு. மீதி இரண்டு பறவைகள் இருக்கும். ஆனா, நீ சிந்திச்ச விதம் எனக்கு பிடிச்சிருக்கு" என்றார் மேடம்.

பதிலுக்கு ஜானி மேடத்தை ஒரு கேள்வி கேட்டான்.

"ரோடுல மூனு பொம்பளைங்க கோன் ஐஸ்க்ரீம் சாப்பிட்டுகிட்டே போறாங்க. ஒரு பொம்பளை லேசா கடிச்சு கடிச்சு சாப்பிடறா, ரெண்டாவது பொம்பளை நாக்கை வெளியே நீட்டி பூனை தட்டுல பாலை குடிக்கிற மாதிரி சாப்பிடறா, மூனாவது பொம்பளை பெரிய வாழப்பழத்தை தோலை உறிச்சி சாப்பிடற மாதிரி சாப்பிடறா. இந்த மூனு பொண்ணுங்கள்ள யார் கல்யாணம் ஆனவங்க?

கொஞ்சமா அதிர்ச்சியான புருவத்தை உயர்த்திய ஆசிரியர் மேடம், சுதாரித்துக் கொண்டு  "மூனாவது பெண்" என்றார்.
லிட்டில் ஜானி சிரித்துக் கொண்டே
"தப்பு மேடம். எந்தப் பொண்ணு கைவிரல்ல கல்யாண மோதிரம் இருக்கோ அந்தப் பொம்பளை தான் கல்யாணம் ஆனவ. ஆனா, நீங்க யோசிச்ச விதம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு மேடம்" என்றான்.

Thursday, June 3, 2010

மைக்ரோஸாஃப்ட் வழங்கும் சிரிப்பிற்கான சர்டிபிகேட்

Microsoft Certified Sirippu Professional    (MCSP)

ஜன்னல் தயாரிக்கும் கேட்ஸ் நகைச்சுவையுணர்வை வகைப்படுத்தி மைக்ரோஸாஃப்ட்  எஜுகேஷன் வலைதளத்தில் வெளியுட்டுள்ள ஒரு அட்டவணை என்னை கொஞ்சம் பாடாய் படுத்தியது. மின்சார அவனில் ஷாக் அடிக்காமல் சாப்பிடும்படி சமைப்பதற்கு, கால் கியர் உள்ள இரண்டு சக்கர வாகனத்தை இரு கை பிடித்து எதிரே வரும் மாமி மேல் விடாமல் ஓட்டுவதற்கு, "வாட் இஸ் யூவர் நேம்?" என்று கேட்டால் மூச்சு விடாமல் பேசி எதிராளி மூர்ச்சை ஆகும்படியாக நன்றாக வாயாடியாவதர்க்கு, மார்கழி மாதம் மட்டும் முதல் நாள் இரவே கோலம் போடுவதற்கு, கை காலை வானத்திற்கும் பூமிக்குமாக அசைத்து உடற்பயிற்சி என்று ஒன்று செய்வதற்கு, பொது இடங்களில் அனகோண்டா மாதிரி வாயை திறந்து எட்டூருக்கு கேட்கும்படி "ப்ஆ...ப்ஆ" என்று ஏப்பம் விடாமல் சாப்பிடுவதற்கு, நாய் குளிப்பாட்டுவது எப்படி?, புடவை தோய்த்தும் வீடு பெருக்கியும் கூட எப்படி பொண்டாட்டியிடம் அடி வாங்காமல் இருப்பது என்பதற்கு, மேலை நாட்டு பாணி கக்கூசுகளில் இரண்டு காலையும் கம்மோடு மேலே தூக்கி வைக்காமல் மலஜலம் கழிப்பதற்கு என்று ஒன்றுவிடாமல் எல்லாவற்றுக்கும் புத்தகம்/குறிப்புகள் போட்டது பத்தாமல் பல் காட்டி சிரிக்கத்தெரிந்த ஒரே விலங்கான மனிதனை அந்த விதத்திலும் வகை தொகை படுத்தியுள்ளது மைக்ரோசாப்ட். மொத்தம் நான்கு வகையறாக்கள். சாதாரண ஆள், மத்திம ஆள், முன்னேறிய ஆள், கை தேர்ந்த ஆள்.  என்னவென்று பார்ப்போம். இதற்க்கு கீழே அவர்களது அட்டவணை.

சாதாரண ஆள்:
  1. "ஈச்சட்டி தலையா, தேங்கா மண்டையா" என்றெல்லாம் திட்ட மாட்டார்கள்.
  2. கழிவறையிலிருந்து வெளிவரும் கவுண்டரை செந்தில் போல் "என்னன்னே சாப்டாச்சா?" என்று கேட்க மாட்டார்.
  3. மயான அமைதியும் கோபம் கொப்பளிக்கும் இடங்களில் புன்னகை மன்னன் சாப்ளின் கணக்காக சேஷ்டைகள் செய்து உக்கிரத்தை குறைப்பார்.
  4. கீழ்ப்பாக்கம் கேஸ் போல "ஹி... ஹி ..." என்று ப்ளாட்பாரம்களில் தனியாகவும் எதிர் ஆளை பார்த்தும் சிரிப்பார்.

மத்திம ஆள்:
  1. ஒரு பெரிய கும்பலை "அது அவ்வளவு பெருசு.." என்று 'கெட்ட' காரிய ஜோக்குகள் சொல்லி ஒன்றுபடுத்துவார்.
  2. பொண்டாட்டி வீட்டை விட்டு  ஓடிப்போனவரை பார்த்து "இன்று உன்னுடையது நேற்று மற்றொருவனிடம் இருந்தது" என்று கீதை சொல்லி இன்னொருவனிடம் இருந்து உங்களுக்கு கிடைக்கும் என்று சமாதானப்படுத்துவார்.
  3. விழுந்து விழுந்து சிரித்து அரை வேஷ்டி நழுவி கீழே விழும்படி செய்து  டியர்ட் ஆக்குவார். 
  4. காதில் "சேம் ப்ளட்" சொல்லும் வடிவேலுவிடம் தலையில் டீ ஊற்றி அசிங்கப்படும் விவேக் போல இருப்பார்.

முன்னேறிய ஆள்:
  1. செத்த வீட்டில் கெக்கேபிக்கே என்று சிரிக்க மாட்டார். "உனக்கு மட்டுமா பொண்டாட்டியா இருந்தா..ஊருக்கே... " என்று செந்தில் போல கதை பேச மாட்டார்.
  2. ஐயா மேல படுத்திருக்கார் என்று சொல்லும்போது நான் அப்புறம் பேசறேன் சொல்லும் எஸ்.வீ.சேகர் போல இருப்பார்.
  3. எங்கே ஜோக் சொன்னால் செருப்படி விழும் விழாது என்று நன்றாக தெரிந்து வைத்திருப்பார்.
  4. மேடை போட்டு கும்பல் கூட்டி சிரிப்பது கூட்டத்திற்கு உகந்தது என்று புரிந்து வைத்திருப்பார்.

கை தேர்ந்த ஆள்:
  1. நான், நீ, நாய், பூனை, சாமியார், மாமியார்  என எல்லாவற்றிலும் சிரிப்பே நீக்கமற நிறைந்திருப்பது என்பார்.
  2. தனக்கு ஜோக் சரியாக வராவிட்டால் யாரயாவது தனக்கு ஜோக்குக்கு துரோனாச்சாரியாராக இருக்க வேண்டி இறைஞ்சுவார்.
  3. நகைச்சுவை மூலம் இந்தியா பாக்கிஸ்தானுக்கு ஒரு நட்பு பாலத்தை உருவாக்குவார்
  4. அடுத்த ஆள் தன்னை ஓட்டினாலும் ரத்தம் வர பிறாண்டினாலும் அதற்க்கும் ஒத்துழைப்பார்.
(மைக்ரோசாப்ட்ன் அட்டவணை)  
சுட்டி: http://www.microsoft.com/education/competencies/humor.mspx

Tuesday, June 1, 2010

பாப்பா

வாத்தியார் சுஜாதா எழுதியது இது.  எந்த புத்தகத்தில் என்பது என் ந்யூரான்களில் டார்ச் அடித்து பார்த்தும் சட்டென்று கிடைக்கவில்லை. என்னுடைய லாங்வேஜில் இங்கே தருகிறேன். நல்ல ஜோக்.

aish

ஒரு கல்லூரி உயிரியல் பேராசிரியர் இன்னொரு கல்லூரிக்கு "வைவா"விர்க்காக எக்ஸ்டெர்னல் எக்ஸாமினராக சென்றிருந்தார். மறு நாள் மாலை பார்க்கில் வாக் போகும்போது தனது நண்பரிடம் தன்னுடைய எக்ஸ்டெர்னல் அனுபவத்தை இவ்வாறாக பகிர்ந்துகொண்டார்.

"இந்த காலத்து பொண்ணுங்கெல்லாம் ரொம்ப அட்வான்சுடு சார்." 

"ஏன் அப்படி சொல்றீங்க..."

"இல்ல.. நேத்து ஒரு காலேஜுக்கு எக்ஸ்டெர்னலா போயிருந்தேன். ஒரு பொண்ணு ஆள அடிக்கர/அசத்துற மாதிரி டிரஸ் பண்ணிக்கிட்டு நாவப்பழம் மாதிரி கண்ணை உருட்டிகிட்டே ஒரு மாதிரியா சிரிச்சுகிட்டே நாணி கோணிக்கொண்டு பக்கத்தில வந்து நின்னா. அதைப் பார்த்தாலே மக்கு மாதிரி இருந்துது. இருந்தாலும் சிம்பிலா  அவள்ட்ட ஒரு கேள்வி கேட்டேன் 
ஏம்மா உடம்புல எந்த பாகம் நாம உணர்ச்சிவசப்பட்டாலோ, பரவசப்பட்டாலோ பத்து மடங்கு பெரியதாகும் அப்படின்னு கேட்டேன் அதற்க்கு அந்தப் பெண் வெட்கப்பட்டுகிட்டே சீ...ச்...சீ.... சார் நீங்க ரொம்ப மோசம்! நான் இந்த கேள்வுக்கு பதில் சொல்ல மாட்டேன் அப்படின்னுட்டா"

"அப்புறம் என்ன பண்ணினீங்க.."

"பக்கத்துல இருந்த பெண்ணைக் கேட்டேன். டாண்னு பதில் சொல்லிட்டா..."

"என்ன சார் பதில்..."

" 'பாப்பா' கண்ணுக்குள்ள இருக்கிற "ப்யுப்புல்"..."

"அச்ச்சோ இது தெரியாமா போய்டுச்சே அந்த அசடுக்கு."

"கடைசியா அந்த பொண்ணப் பார்த்து மூனு வாக்கியம் சொல்லிட்டு வந்துட்டேன்"

"என்ன"

"நீ இன்னும் சப்ஜெக்ட் நல்லா படிக்கணும்,
உன் புத்தி ரொம்ப மோசமாயிருக்கு, 
இதுக்கெல்லாம் மேல கல்யாணத்திர்க்கப்புறம் நீ ரொம்ப ஏமாறப் போற அப்படின்னு.,.."

நண்பர் "ஆ" என்று வாய் பிளந்து நின்றார். இந்தக் ஜோக்கின் கடைசி வரியில் இது அசைவமாகியிருக்கலாம். நான் பொறுப்பல்ல.

Monday, May 31, 2010

இங்கு கணவன்மார்கள் கிடைக்கும்

நான் ரசித்த ஜோக்:

சமீபத்தில் ஒரு ஊரில் ரிலையன்ஸ் ஃபிரெஷ் போல "கணவர்கள் ஃபிரெஷ்" என்ற சூப்பர் மார்கெட் ஸ்டோர் ஒன்றை திறந்தார்கள். அந்த ஐந்து மாடி கட்டிடத்தில் ஒவ்வொரு மாடியிலும் நிறைய கணவனாகும் அருகதை உள்ள ஆண்களை அலங்கரித்து வைத்து பெண்களை விட்டு சுயம்வரம் காணச் செய்தார்கள். மாடிகளின் தளம் மேல் செல்ல செல்ல நல்ல குணவான்கள் மற்றும் நிறைய நற்பண்புகள் வாய்க்கப் பெற்றவர்கள் நிரம்பியிருந்தார்கள். ஒரே ஒரு நிபந்தனை என்னவென்றால், மேலே மாடி ஏறி சென்றவர்கள் மீண்டும் கீழ் மாடியில் இருப்பவரை தேர்வு செய்ய முடியாது, இறங்கி வெளியே செல்ல வேண்டியதுதான்.


இரண்டு திருமணமாகாத பெண்குட்டிகள் நல்ல புருஷனை தேடிக் கண்டுகொள்வதற்காக அந்த அடுக்குமாடி விற்பனை கூடத்திற்கு சென்றார்கள். அவர்களின் ஐந்து மாடி அனுபவங்கள் கீழே...


முதல் மாடி:
கதவில் பலகையில் எழுதியிருந்த வாசகம்: "இந்த மாடியில் உள்ளவர்கள் வேலைக்கு செல்லும் மற்றும் குழந்தைகளை நேசிக்கும் ஆண்கள்" 
பெண்குட்டிகள்: "தேவலாம் குழந்தையை நேசித்து வேலைக்கு செல்லும் ஆண்கள் இருக்கிறார்கள், மேலே என்ன இருக்கிறது பார்க்கலாம்" என்று படியேறினார்கள் அப்பெண்கள்.


இரண்டாம் மாடி:
பலகை வாசகம்: "அழகான, குழந்தையை நேசிக்கும், நிறைய சம்பாதிக்கும் ஆண்கள்"
பெண்குட்டிகள்: "ம்...ம்... இன்னும் மேலே என்ன இருக்கிறது பார்க்கலாம்"

மூன்றாம் மாடி:
பலகை வாசகம்: "அழகான, குழந்தையை நேசிக்கும், நிறைய சம்பாதிக்கும், வீட்டு வேலை செய்யும் ஆண்கள்"
பெண்குட்டிகள்: "வாவ்... ரொம்ப ஆசையை தூண்டுதே... மேலே அடுத்த மாடியில் என்ன இருக்கு பார்க்கலாம்"

நான்காம் மாடி:
பலகை வாசகம்: "அழகான, குழந்தையை நேசிக்கும், நிறைய சம்பாதிக்கும், வீட்டு வேலை செய்யும், மன்மதக் கலை நன்றாக தெரிந்த ஆண்கள்"
பெண்குட்டிகள்: "ஐயோ... என்ன செய்யறதுன்னு தெரியலையே... இதற்க்கு மேலே ஐந்தாம் மாடியில் என்ன இருக்கும்ன்னு நினைச்சாலே... ஓஒ...ஆ ஆ....." 
என்று கூச்சலிட்டு சந்தோஷத்தின் உச்சக்கட்டங்களில்  படிகளில் ஏறி மேலே ஐந்தாம் மாடிக்கு ஓடினார்கள்.

ஐந்தாம் மாடி:
பலகை வாசகம்: "உங்களை திருப்திப் படுத்த முடியவே முடியாது என்பதை நிரூபணம் செய்வதற்க்காக இந்த மாடி காலியாக உள்ளது. உங்களது இடது கைப் பக்கம் வெளியே செல்லும் வழி உள்ளது. தயவு செய்து இடத்தை காலி செய்யவும்"

எப்புடி?

Tuesday, April 27, 2010

நீ ஏன் இறந்து போனாய்?

தனது தாயிற்கு அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பிய ஜோவிற்கு ஒரே ஆச்சர்யம். பக்கத்தில் இருக்கும் மற்றொரு கல்லறை அருகில் அமர்ந்து ஒருவன் நீண்ட நேரமாக, "நீ ஏன் இறந்து போனாய்?" என்று நொடிக்கொருதரம் கேட்டுக்கொண்டு இருந்தான்.  இவ்வளவு அன்புபும் பாசமும் கொண்டு இருப்பவனுக்கு இப்படி ஒரு சோகம் நிகழ்ந்து விட்டதே என்று பாவப்பட்டு, தன்னிடம் இந்த துக்க செய்தியை அவன் பகிர்ந்து கொண்டால் அவனுடைய சோகம் கொஞ்சம் குறையும் என்று எண்ணி, ஜோ அவனிடம்  "ஏம்பா இவ்வளவு சோகமா ரொம்ப வருத்தப்பட்டு அழுது கொண்டிருக்கிறாயே , இறந்து போனது யார்?" என்று கேட்டான்.

அதற்க்கு அழுதவன் அளித்த பதில்
"இல்லை, இது என் மனைவியின் முதல் புருஷனின் கல்லறை"

Friday, April 9, 2010

திருந்திய குடிகாரனும் பள்ளத்தில் விழுந்த காதலனும்

சமீபத்தில் நான் ரசித்த இரண்டு ஜோக்ஸை இங்கே தருகிறேன். ஒன்று சைவம் அடுத்தது  அசைவம். சைவமா அசைவமா அல்லது இரண்டுமா என்பதை உங்கள் முடிவுக்கே விட்டு விடுகிறேன். வயதுக்கேற்ப தேர்வு செய்து படியுங்கள். இந்த ப்ளாக்ஐ படிப்பவர்கள் அனைவரும் பெரியமனிதர்கள் (வயதில், அறிவில், புத்திசாலித்தனத்தில்) ஆகையால் பிடித்ததை படிப்பது சரவணபவனில் உங்களுக்கு பிடித்த சாம்பார் இட்லி சாப்பிடுவதை போல. இது உங்கள் சாய்ஸ். அசைவத்தை படித்துவிட்டு எனக்கு ஜீரணம் ஆகவில்லை என்று கூறினால் அதற்க்கு நான் ஜவாப்தாரி அல்ல. 


சைவம் - திருந்திய குடிகாரன் 


ஒரு உயர்ந்த ரக பாரில் ஓரத்தில் தனியாக உட்கார்ந்து மூன்று கிளாஸ்களில் பீர் வாங்கி ஒருவர் உள்ளே தள்ளிக்கொண்டிருந்தார். அடித்த சரக்கு பத்தாமால் மீண்டும் ஒரு முறை எழுந்து சென்று சரக்கு ஊற்றித் தருபவரிடம் மூன்று கிளாஸ்களில் பீர் கேட்டார். சரக்கு ஊற்றித் தருபவர் சற்று நேரம் பார்த்துவிட்டு,

"ஸார், நீங்க தப்பா நினைக்கலைன்னா ஒன்னு கேக்கறேன், ஒவ்வொரு கிளாஸா வாங்கி குடிச்சா இன்னும் நல்ல இருக்குமே.நா கிளாஸ்ல ஊத்தும்போதே நுரை அடங்கி உள்ள போய்டுதே ஆனா நீங்க மூணு மூணு கிளாஸா வாங்கி குடிக்கிரீங்களே...இதில இதோட நிஜ டேஸ்டே இல்லாம போய்டுமே" என்றான்.

"இல்லப்பா, நாங்க அண்ணன் தம்பி மூனு பேர். அண்ணன் துபாய்ல இருக்கான், தம்பி கனடாவில இருக்கான், நான் இங்க லண்டன்ல இருக்கேன். சின்ன வயசிலேர்ந்தே நாங்க மூணு பேரும் ஒன்னாதான் சரக்கடிப்போம்.  நாங்க மூனு பேரும் ஆளுக்கு ஒரு மூலையா  பிரிஞ்சு போனதால, சரக்கு சாப்பிடறதா இருந்தா மூனு கிளாஸ்ல வாங்கி, மத்தவங்க ஞாபகார்த்தமா அந்த சரக்கை சாப்பிடனும்னு ஒரு சத்தியம் பண்ணிருக்கோம். என் தம்பி அண்ணன் ரெண்டு பேருமே இதை செஞ்சுட்டுதான் குடிப்பாங்க. அதனாலதான்" என்றார் அந்த குடிமகன். ஆச்சர்யமாக பார்த்தான் அந்த 'சரக்கூற்றி '. (Bar tender)

இதேபோல  தினமும் அந்த பாருக்கு சென்று அமர்ந்து மூன்று மூன்று கிளாஸ்களில் பீர் வாங்கி மோர் போல குடித்து தன் தொப்பையை வளர்த்து வந்தார் அந்த அன்பர். ஒரு நன்னாளில், இரண்டு கோப்பையில் மட்டும் பீர் தரச்சொல்லி வாங்கி குடித்தார்.

இதைக்கண்ட சரக்கூற்றி சரக்கப்பன் மிகவும் சங்கடப்பட்டான். நேரே அவரிடம் சென்று "ரொம்ப ஸாரி ஸார், இப்படி ஆகும்ன்னு நான் நினைக்கலை" என்று சோகராகம் பாடினான்.
"ஏம்ப்பா என்னாச்சு" என்றார் அந்த குடிமன்னர்.
"இல்லை எப்போதும் நீங்க உங்க பிரதர்ஸ் ஞாபகார்த்தமா மூனு கிளாஸ்ல வாங்கி  குடிப்பீங்க. உங்க பிரதர் யாராவது இறந்துவிட்டாங்க போலிருக்கு இன்னிக்கி இரண்டு கிளாஸ்ல  மட்டும் ஊத்தி குடிக்கிறீங்க" என்றான்.

அந்த இரண்டு கிளாஸ் பீரையும் நிதானமாக சிப் பண்ணி குடித்துவிட்டு முழு போதையுடன் சொன்னான் அந்த சரக்கு மன்னன்
"யாருக்கும் எதுவும் ஆகலை, நேற்றையோடு நான்தான் குடியை நிறுத்திட்டேன்பா, அதான் என் பிரதர்ஸ்க்காக இரண்டு கிளாஸ் மட்டும்".

இதைகேட்ட சரக்கூற்றிக்கு போதை தெளிய ரெண்டு நாள் ஆனது. 

அசைவம் -  பள்ளத்தில் விழுந்த காதலன் ( 18+)


18 மற்றும் 20 வயதே பூர்த்தியான காதலர்கள் இருவர் மகிழ்ச்சி பொங்க ஆரவாரத்துடன் மேற்கூரை திறந்த ஆடம்பரமான காரில் வேகமாக ஒரு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்கள். "இன்னும் வேகமா போ... வேகமா போ..." என்று அந்த காதலி அவனை ரேஸ்  குதிரை போல் விரட்டியவண்ணம் இருந்தாள். செயல்களில் குறும்புத்தனம் கொப்பளித்த அந்த காதலன் "நான் இன்னும் வேகமாக போக வேண்டும் என்றால் நீ உன் மேலாடையை கழற்றி வெளியே வீசினால் நான் இன்னும் வேகமாக போவேன்" என்றான்.

காதலனின் ஆசை/கட்டளைக்கு இணங்க அவள் கணநேரத்தில் உடனே கழற்றி வெளியே வீசி எறிந்தாள். "இன்னும் வேகமா போ வேகமா போ..." என்று கத்தி குதித்து துள்ளி துள்ளி ஆடியபடி கேட்டாள். காதல் பித்து தலைக்கேறிப் போன அந்த காதலன் "இன்னும் வேகமாக போக நீ உன் அரையாடையையும் கழற்றி வீசினால் நான் போவேன்" என்றான். அதையும் செய்தாள் அந்த அன்பிற்கினியவள். அரையாடை மற்றும் மேலாடை இல்லாமல் இருந்த காதலியை கண்டு இன்னும் வேகம் (மோகம்?) பொங்க படு வேகமாக ஓட்ட ஆரம்பித்தான்.

கட்டற்ற வேகத்தில் சென்ற அந்த கார் தன் கட்டுப்பாடு இல்லாமல் ஒரு பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. மிகவும் கஷ்டப்பட்டு அந்த காதலி காரிலிருந்து தப்பித்து வெளியே வந்தாள்.  காதலன் மாட்டிக்கொண்டு கஷ்டப்பட்ட நிலையில் காதலியை "ஏய்! யாரையாவது போய் உடனே அழைத்துக்கொண்டு வந்து என்னை காப்பாற்று" என்றான். "போடா, உன்னால் நான் என் எல்லா துணிகளையும் கழற்றி வீசிவிட்டேன். நான் எப்படி சென்று யாரையாவது உதவிக்கு கூப்பிடுவேன்" என்று நாணி கோணினாள். "ஆபத்துக்கு பாபமில்லை, கீழே உன்னுடைய ஷூவைக் கொண்டு மூடிக்கொண்டு சென்று உதவி கேள்" என்று வலியால் துடித்துக்கொண்டு கேட்டான் அவன்.

காதலனைக் காப்பாற்ற தன்  மானம்  போனாலும்  பரவாயில்லை என்று  வேறு வழியில்லாமல் கீழே ஷூவால் மறைத்துக்கொண்டு உதவிக்கு ஓடினாள்.  ஏதிரே தென்பட்ட அந்த தீயணைப்பு படை வீரரிடம் ஷூ கையை எடுக்காமல், " ஐயா என் காதலன் இங்கே பள்ளத்தில் விழுந்துவிட்டான். வெளியே வர கொஞ்சம் உதவுங்கள். ப்ளீஸ்" என்றாள். அந்த வயதான தீயணைப்பு படை வீரர் செய்வதறியாது திகைத்து மூர்ச்சையுற்று கீழே சரிந்தார்.


Sunday, February 21, 2010

சிரித்தாலே இனிக்கும்

போலீஸ்: பின் லேடன் - ஐ  பிடித்தால் ஐந்து லட்சம் பரிசு
சர்தார்: அப்ப அந்த ஐந்து லட்சத்தை எனக்கு தாங்க
போலீஸ்: பின் லேடன் ?!!
சர்தார்: எனக்கு பின் லேடன்-ஐ ரொம்ப பிடிக்கும்.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails