Showing posts with label காற்றுவெளியிடை. Show all posts
Showing posts with label காற்றுவெளியிடை. Show all posts

Tuesday, June 6, 2017

சாரட்டு வண்டில சீரொட்டொளியில

ஆஃபீஸில் இப்படி அப்படி நகரவிடாமல் காலையிலிருந்து ராத்திரிவரை கை ஒழியாமல் வேலை. முகப்பு விளைக்கைத் தூண்டி வண்டியை நகர்த்தும் போது இடது கையால் ஆடியோவைத் தட்டிவிட்டேன். ”சாரட்டு வண்டில சீரொட்டொளியில” என்று ரஹைனாவின் அடிக்குரல் கேட்டது. காற்று வெளியிடை. ரஹ்மான் விருந்து. ஃப்லிம் மேக்கர் மணிரத்னம் படம். திப்புவும் பாடியிருக்கார்.
குதிரையின் குளம்பொலியின் டக்..டக்கை காதுக்கு இதமாக ஸ்பாஞ்ச் வைத்து அமுக்கியது போல ஒரு மென்மையான ரிதமிக் beatல் துவங்கிய பாடல். இனிமையாக இருந்தது. ஆங்காங்கே கொஞ்சம் “A"த்தனமான வரிகள் தூவியிருந்தது. ”மன்மதன் நாட்டுக்கு மந்திரியே..” என்று “அந்தி மழை பொழிகிறது”வில் எழுதிய வைரமுத்து இப்பாடலில் “அவன் மன்மதன் காட்டு சந்தனம் எடுத்து மார்பில் அப்பிக்கிட்டான்...” என்று எழுதியிருக்கிறார். மன்மதனின் நாடு எது? காடு எது?
பொதுவா சண்டித்தனம் பண்ணும் ஆம்பிளையை பொண்ணு கிண்டிக் கிழங்கெடுப்பா.... என்ற வரியில் கிண்டிக் கிழங்கெடுப்பது எப்படி என்று ஆராய்ச்சியில் அலையவிட்டார். இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல ஒரு வரி....
”இவ குரங்கு கழுத்தில் குட்டியைப் போல தோளில் ஒட்டிக்கிட்டா.....”

ஆஹா! கேட்டதும் நெஞ்சுக்குள் காதல் பூக்குதே!! 

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails