Showing posts with label துக்கடா. Show all posts
Showing posts with label துக்கடா. Show all posts

Wednesday, March 8, 2017

வெட்கமா மானமா ரோசமா

தன்னைப் பார்க்கிறார்கள்... என்று உணரும் போதுதான் வெட்கம் பிடிங்கித் திங்கறது... உதாரணம்: அதிகாலை வேளையில் ஜன்னலோர சீட்டில் வேடிக்கைப் பார்த்துக்கொண்டு ஊருக்குள் நுழையும் போது தண்டவாளத்தருகே பிருஷ்டத்தை நமக்குக் காண்பித்து வழித்துக்கொண்டு.... மூஞ்சியை அந்தப் பக்கம் திருப்பி உட்கார்ந்திருக்கும் காலைக்கடனாளிகள்.
So, நம்ம வெட்கம் அடுத்தவர்களின் கண்களில் தேங்கி நிற்கிறது. (இதற்கு சுகப்பிரம்மத்தின் கதை ஒன்று உண்டு. தனி போஸ்ட்டாக எழுதுவோம்...) ”உனக்கென்ன வெட்கமா? மானமா? ரோசமா?” என்பதை ”கல்வியா? செல்வமா? வீரமா?” ரேஞ்சுக்கு உசுப்பிக் கேட்பதற்கு முன்னால்... அவனுடைய வெட்கத்துக்குக் காரணம் நீங்கள் என்பதை உணருங்கள். வெட்கப்படுங்கள்.
”நாலு பேருக்கு முன்னாடி என் மானத்தை வாங்கிறியே” என்று அல்லல்படும் மக்களும் நாலு பேரினால்தான் அவருக்கு மானம் போகிறது என்பதை அனுபவிப்பதால் அடுத்தவரின் மானம் போவதற்கும் நாம்தான் என்று ஒத்துக்கொள்ளவேண்டும். மானத்தைக் காப்பாறிக்கொள்ளுங்கள்.
ரோசம், வெட்கத்தினாலும் அடுத்தவரினால் மானபங்கப்படுத்தப்பட்டதினாலும் எழுவது. ”ரோசக்காரண்டா... யாராவது மானத்தை வாங்கிட்டா அவங்களை வெட்டிப்புடுவான்...” போன்ற வீர வசனங்கினால் அடுத்தவனின் ரோசத்துக்கும் நீங்கள்தான் பொறுப்பு என்றாகிறது. ரோசமாயிருங்கள்.
யாரையும் வெட்கங்கெட்டவன், மானங்கெட்டவன் ரோசங்கெட்டவன் என்று சகட்டுமேனிக்கு திட்டுவதற்கு முன் யோசியுங்கள்!
End Card டைட்டில்:
வெட்கப்பட்டவர்கள் வாழ்வு வெளிச்சமடைய.... ரோசங்கெட்டவர்கள் ஆசுவாசமாகயிருக்க ... மானபங்கப்படுத்தப்பட்டவர்கள் மாண்பு பெருக... அவர்களின் நலன் கருதி வெளியீடு


Thursday, December 15, 2016

காசு..பணம்.. துட்டு... மணி..மணி...

அவன் என்னை அவமானப்படுத்திட்டாண்டா...

ஏன் தலவரே...
ஐநூறு ரூவா நோட்டு மாலையும் ஆயிர ரூவால க்ரீடமும் வைக்கறான்... நா ஒரு செல்லாக்காசுன்னு சிம்பாலிக்கா சொல்றாம்ப்பா... கட்சிய வீட்டுத் தூக்கணும்..
**
ச்சே... இவன் பர்ஸ ஏண்டா அட்சோம்னு ஆயிடுச்சுப்பா...
ஏன்?
வெறும் ஐநூறு ரூவா.. ஆயிர ரூவாதாம்ப்பா வச்சுருக்கான்... பிச்சக்காரப்பய..
**
அவனே பாவம்ப்பா... ஐநூறும் ஆயிரமமுமாக் கொட்டிக் கிடந்தும்.. பத்துக்கும் அஞ்சுக்கும் நாயா பேயா அலையறான்..
**
ஐநூறை அழித்தவனே போற்றி...
ஆயிரத்தை ஒழித்தவனே போற்றி..
அயோக்கியர்களை நசுக்கியவனே போற்றி...
கறுப்பை நீக்கிய ஒளியே போற்றி...

என்னதிது? ஸ்வாமிக்கு அர்ச்சனை செய்யச் சொன்னா... குருக்கள் மாமா....
**
கட்டப்பைய எடுத்துக்கிட்டு காய் வாங்கப் போறீங்களா?
ச்சே..ச்சே.. ஏடியெம்முக்கு..
லட்சலட்சமாக் கூட பணம் எடுக்க முடியாதே...
யோவ்.. ஒரு ரூபாய்.. பத்து ரூபாய்தான் டினாமினேஷனாம்... ஆயிர ரூபா எடுத்துக்கிட்டு வரச்சொல்லியிருக்கா பொண்டாட்டி...
**
வணக்கம். முக்கிய செய்திகள்.
சென்னை அண்ணாசாலையிலுள்ள ஒரு வங்கியைக் கொள்ளையடிக்க ட்ரெயிலர் லாரியில் வந்த கொள்ளையர்களை மக்கள் துரத்திச்சென்று பிடித்தனர்....

**
என்னங்க இது அநியாயமா இருக்குது... ஒரு ஆம்பிளை கொலுசு போட்டுக்கிட்டுக் கூச்சமேயில்லாம நடந்து போறாரு....
அடப்போய்யா... அவரு ஐநூறு ஆயிரத்தையெல்லாம் சில்லறையா மாத்தி பேண்ட் பாக்கெட் ஃபுல்லா காயினா வச்சுருக்காரு.... நடந்து போகும் போது அதுதான் ஜல்..ஜல்.ஜல்ன்னு ரிதமிக்காச் சத்தம் கேட்குது...
பின் குறிப்பு: பழைய ஐநூறு ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை என்ன செய்யவேண்டும் என்று தெரிந்திருந்தாலும் ஒரு ஃபன்னுக்காக எழுதிப்பார்த்தேன்.

Thursday, November 27, 2014

கத்தி.. கத்தி...

”இந்தக் கத்தி ரொம்ப அழகா இருக்கே. புதுசா?”

“ச்சே..ச்சே.. இது பரம்பரை பரம்பரையா எங்க வம்சத்துக் கத்தி.. வூட்லதான் இருக்கு...”

“ஓ! ஆனா பார்க்க புத்தம் புதுசா ஜொலிக்குதே!”

“பழசுதான். பரம்பரையா இருக்கிற இந்தக் கத்தியில பிடி ஆடிச்சின்னா உடனே மாத்திடுவோம்.”

“அப்டியா? ப்ளேடும் பளபளன்னு கண்ணைப் பறிக்குது... இப்பதான் சாணம் புடிச்சா மாதிரி...”

“இல்லையில்லை.. ப்ளேடு மொக்கையாயிடுச்சுன்னா அதையும் ஓடிப்போயி மாத்திடுவோம்...”

“யோவ்! ப்ளேடையும் மாத்துவ பிடியையும் மாத்துவேன்னா அப்புறம் எப்படிய்யா இது புராதன காலத்துப் பரம்பரைக் கத்தி?”

”ப்ளேடு மாத்தினாலும் பிடியை மாத்தினாலும் பரம்பரைக் கத்தி கத்திதானுங்ளே!”

கரெக்டுதான். கேபினெட் ஒண்ணுதான். உள்ற இருக்கிற ராமை மாத்தினாலும் ப்ராசஸரை மட்டும் மாத்திட்டாலும்.. பிசி பிசிதானே! பரம்பரை கம்ப்யூட்டர்.

இந்த கத்திக் கதையைச் சொல்லி கர்ணபரம்பரையாகச் சொல்லப்பட்டு வரும் நாட்டுப்புறக் கதைகளும் அப்படித்தான் என்கிறார் ஏ.கே.ராமனுஜன். அதாவது ஆராயக்கூடாது. அனுபவிக்கணும் என்கிற க்ரேஸியின் ஒற்றை வரி வசனம் சொல்லும் பாடம்.

Wednesday, September 17, 2014

இசை மும்மூர்த்திகள் - திராக்ஷை:வாழை:பலா

தியாகைய்யரின் கீர்த்தனங்கள் திராக்ஷை மாதிரி.... கொத்துலேர்ந்து ஒவ்வொன்னா பறிச்சு அப்டியே வாய்ல போட்டுக்கலாம். ஈஸி. ஷ்யாமா சாஸ்திரியினுடையது வாழைப்பழம்... தோலை பக்குவமா உரிச்சு உரிச்சு சாப்பிடணும். தீக்ஷிதர் க்ருதிகள் மாதுளம் பழம் போல.. பழத்தை உரிச்சு.. பிரிச்சு... முத்துகளைத் தட்டித் தட்டிச் சாப்பிடறா மாதிரி.. கொஞ்சம் மெனக்கெடனும்... ராக ரஸத்தைப் பிழிந்து தருவதால் மும்மூர்த்திகளின் கீர்த்தனங்களைப் பழமாக பாவித்தது அற்புதம்.

கர்நாடிக் ம்யூசிக் கேட்கணும் போல இருந்தது. யூட்யூப் அலசலில் யதுகுலகாம்போஜியில் அமைந்த ஷ்யாமா சாஸ்திரியின் “அம்பா காமாக்ஷி” கேட்க நேர்ந்தது. டி.எம்.க்ருஷ்ணா பாடியது. உருகியது. ஊரடங்கிய பின் கேட்டது சுகானுபவமாக இருந்தது. காஞ்சி காமாக்ஷியின் சன்னிதியில் நேரில் கொண்டு போய் நிறுத்தியது. தாழம்பூ குங்கும வாசனை. யதுகுல காம்போஜி, பைரவி, தோடி மூன்றும் “ரத்ன த்ரையம்” என்று சாஸ்திரியின் பாடல்களில் போற்றத்தக்கவையாம். 

இத்துடன் இணைக்கப்பட்ட சுட்டியில் எழுதியிருந்தவைகளை முதல் பாராவில் தமிழ்படுத்தியிருக்கிறேன். கர்நாடக சங்கீதம் எனக்கு கேள்வி ஞானம்தான்.

http://youtu.be/RfRcP5rHk4g
‪#‎அம்பா_காமாக்ஷி‬

Tuesday, July 29, 2014

சாதாரண அழைப்பை ரொமான்ஸ் அழைப்பாக மாற்றுவது எப்படி?

ஆஃபீஸிலிருந்து கத்திப்பாரா மேம்பாலத்தில் தேங்காமல் சறுக்குமரமாய் வழுக்கி வந்து கொண்டிருந்தேன். ஆஸர்கானாவில் ஐஃபோன் ”அலைபாயுதே கண்ணா..”வை ஷஷாங்க்கின் ஃப்ளூட்டில் ரிங்டோனாய் பாடியது. எதிர்முனையில் கூப்பிடுவது தர்மபத்தினி.

“ம்.. சொல்லும்மா...”

“எங்க இருக்கீங்க?”

“உன் மனசுல...”

’களுக்’கென்ற சிரிப்பொலிக்குப் பின்னர் “சரி.. வாங்க....”.

Tuesday, January 3, 2012

சேவா ரத்னா!

”சேவைகள் பல புரிந்தவரே!” என்று அரசியல்வாதிகளுக்கு வைத்திருக்கும் பேனர்களைப் பார்த்தவுடன் எனக்கு சிரிப்புடன் பிச்சுமணி மாமா, எங்கம்மா மற்றும் என் சோதரியின் ஞாபகம் தான் வருகிறது.

எலும்பிச்சம் சேவை, மிளகு சேவை, தேங்காய் சேவை, வெல்ல சேவை என்று விதம்விதமாக வாய்க்கு வக்கனையாக சேவை செய்பவர்களுக்கு “சேவா ரத்னா” என்று அவார்ட் கொடுக்கலாம் என்று நினைக்கிறேன்.
1. பிச்சுமணி மாமா - எங்கள் ஊரின் பிரதான சமையற்கலை வல்லுனர்; எங்கள் குடும்பத்தின் ஆஸ்தான நளபாகராக இருந்தவர்.

2. சேவைப் படியில் உருண்டையாக மாவை இட்டு நான் ஏறி நின்று பிழிந்து தர பல சேவை தயார் செய்யும் எனது தாயார்.

3. “தம்பி இன்னிக்கி எங்காத்ல சேவை” என்று வாஞ்சையோடு கூப்பிட்டு பரிமாறும் என் அக்காள்.

#இவங்களுக்கெல்லாம் நானும் மவுண்ட்ரோட்ல பேனர் வைக்கலாம்னு இருக்கேன்.

##எச்சேவை புரிணும் அவர்களுக்கு பகவான், எம்பெருமான் மன்னார்குடி ஸ்ரீவித்யா ராஜகோபாலஸ்வாமி சேவை சாதித்து அருள் புரிய ப்ரார்த்திக்கிறேன்.
பட உதவி: http://ashwini-spicycuisine.blogspot.com/
பின் குறிப்பு:  ப்ளாக்குலகத்துடன் தொடர்பில் இருக்கவேண்டும் என்பதற்காக இதுபோன்ற அக்கப்போர்களையும், துக்கடாக்களையும் பகிரலாம் என்று விருப்பம்.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails