Thursday, November 27, 2014

கத்தி.. கத்தி...

”இந்தக் கத்தி ரொம்ப அழகா இருக்கே. புதுசா?”

“ச்சே..ச்சே.. இது பரம்பரை பரம்பரையா எங்க வம்சத்துக் கத்தி.. வூட்லதான் இருக்கு...”

“ஓ! ஆனா பார்க்க புத்தம் புதுசா ஜொலிக்குதே!”

“பழசுதான். பரம்பரையா இருக்கிற இந்தக் கத்தியில பிடி ஆடிச்சின்னா உடனே மாத்திடுவோம்.”

“அப்டியா? ப்ளேடும் பளபளன்னு கண்ணைப் பறிக்குது... இப்பதான் சாணம் புடிச்சா மாதிரி...”

“இல்லையில்லை.. ப்ளேடு மொக்கையாயிடுச்சுன்னா அதையும் ஓடிப்போயி மாத்திடுவோம்...”

“யோவ்! ப்ளேடையும் மாத்துவ பிடியையும் மாத்துவேன்னா அப்புறம் எப்படிய்யா இது புராதன காலத்துப் பரம்பரைக் கத்தி?”

”ப்ளேடு மாத்தினாலும் பிடியை மாத்தினாலும் பரம்பரைக் கத்தி கத்திதானுங்ளே!”

கரெக்டுதான். கேபினெட் ஒண்ணுதான். உள்ற இருக்கிற ராமை மாத்தினாலும் ப்ராசஸரை மட்டும் மாத்திட்டாலும்.. பிசி பிசிதானே! பரம்பரை கம்ப்யூட்டர்.

இந்த கத்திக் கதையைச் சொல்லி கர்ணபரம்பரையாகச் சொல்லப்பட்டு வரும் நாட்டுப்புறக் கதைகளும் அப்படித்தான் என்கிறார் ஏ.கே.ராமனுஜன். அதாவது ஆராயக்கூடாது. அனுபவிக்கணும் என்கிற க்ரேஸியின் ஒற்றை வரி வசனம் சொல்லும் பாடம்.

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails