Showing posts with label கவிதை மாதிரி. Show all posts
Showing posts with label கவிதை மாதிரி. Show all posts

Monday, December 15, 2014

ஞாயிறென்ன திங்களென்ன...

பிள்ளையார் கோயில்
கண்டாமணி அடிச்சுது..
அர்த்தஜாமம் ஆச்சு...
நடை சாத்தியாச்சு...
வாசலில்...
அழுக்கு மூட்டையோடு...
மூட்டையாய்ச் சுருண்டு கிடக்கும்...
பிச்சைக்காரக் கிழவிக்கு...
ஞாயிறென்ன திங்களென்ன....


கடைசிப் பெட்டியை
உள்ளே தூக்கி வச்சாச்சு..
தொங்கின ஐட்டமெல்லாம்
கடைக்குள்ளே தூங்கப் போயாச்சு...
பாதி ஷட்டர் இறக்கி
எல்லா சாமானையும்
பங்கிடு பண்ணியாச்சு...
’ஸர்ஃப்’ பனியன் போட்ட
பலசரக்குப் பையனுக்கு
ஞாயிறென்ன திங்களென்ன...

பச்சை, கற்பூரம்
மோரீஸ், புள்ளி, சிறு பழம்
தினுசு தினுசாக
வாழைப்பழம்...
ஓரத்தில் கொஞ்சம்
கொய்யாவும்...
ஒரு கூறு கமலா ஆரஞ்சும்...
நடைதளர்ந்து வீடு செல்லும்
தள்ளுவண்டி யாவாரிக்கு....
ஞாயிறென்ன திங்களென்ன...

க்ரில் கம்பிக்கு பின்னால
ஷெல்ஃப் பூரா மதுப்புட்டிகள்..
ஸ்டியாக அளக்கும் சரக்கூற்றி...
அட்டாஸ்மாக்கிலிருந்து...
சன்னமான வெளிச்சத்தில..
எட்டு போட்டு நடந்துவரும்
உற்சாகபானப் பிரியருக்கு
ஞாயிறென்ன திங்களென்ன...

சரி சரி நாழியாச்சு...
எனக்கு நாளைக்கு ஆஃபீஸுண்டு
ஞாயிறு போற்றுதும்....
திங்களும் போற்றுதும்....
‪#‎எண்ணச்_சுழல்‬

Wednesday, September 17, 2014

நெடுஞ்சாலைக் காட்சிகள்‬

கண் முன்னே காற்றுக் குதிரையாய் கடந்து மறைகிறது பென்ஸ் ஒன்று.
சட்டை கழற்றி முண்டா பனியனும் கலைந்த கேசமுமாய் பஸ் பிராயணி ஒருவன் ஜன்னலில் கவிழ்ந்திருக்கிறான்.
கட்சிக் கொடி சடசடக்க டோல் கட்டாமல் பறக்கிறது முக்கிய புள்ளியின் ஃபார்ச்சுனர்.
எல்லைக் கல்லுக்கு எல்லைக் கல் எட்டிப் பார்க்கும் கும்பகோணம் டிகிரி காஃபி.
நடு ரோட்டில் நத்தையாய் நகரும் மரவட்டைப் பூச்சியாய் சக்கரம் கொண்ட கண்டெய்னர் லாரி.
இடுக்கில் புகுந்து மரணக் கிணறு சாகசம் காட்டும் இளங்காளை ட்ரைவர்.

Thursday, September 19, 2013

புகை புகையாய்.....


நீலக்கடலில் தூவிய மல்லிகை....
ஆகாய இலவம் பஞ்சு...
நுரைத்து ஓடும் பொன்னி நதி...
காதலி ஜில்லிடும் வெண்ணிலா ஐஸ்க்ரீம்...
கயிலைநாதனின் வெள்ளியங்கிரி...
வரும் புயலைக் காட்டும் வான் படம்...
வசிக்கத் துடிக்கும் குட்டி ராஜ்ஜியம்....
இந்திரலோகத்து நுழைவாயில்...
ஐராவதத்தின் பிருஷ்டபாகம்...
பனைமரம் துடைக்கும் ஒட்டடை...
செல்ல பொமரேனியன் நாய்க்குட்டி...
வாணி ஜெயராமின் “மேகமே...மேகமே...”
ஆத்திக நாத்திக வெண்தாடி...
குழந்தையின் வெள்ளை மனசு....
ஷேவிங் ப்ரஷ் தலையில் க்ரீம்...
ஒரு விள்ளல் குஷ்பூ இட்லி...
வானம் விளைத்த உப்பளம்..

கடைசியில் ஜெயித்தது:
“மேகம் ரெண்டும் சேர்கையில்....
மோகம் கொண்ட ஞாபகம்...”

Friday, March 9, 2012

கணவர்களின் லக்ஷணங்கள்

மனைவிகள் கணவ ஜந்துக்களுடன் தினமும் பழகித்தான் பார்க்கிறார்கள்
அவைகளுடன்தான் தினந்தோறும் டிஃபனும் டின்னரும் போஜிக்கிறார்கள்
அவர்கள் அவசியமில்லாமல் குழந்தை வளர்ப்பில் மூக்கை நுழைப்பார்கள்
மண நாட்களை மறந்துத் தொலைப்பார்கள்
மொத்தமாக சொதப்பியதை ஒரு காவிய முத்தத்தில் ஈடுகட்ட நினைப்பார்கள்
பொறுக்கமுடியாமல் அவர்களது அபத்தத்தை இடித்துரைத்தால்
பரமசாந்தமாக ஒரு பார்வை சிந்தி குமிழ் சிரிப்பை உதிர்ப்பார்கள்
இவ்வளவு அழிச்சாட்டியங்கள் செய்தபிறகும் மனைவி
சொல்பநேரத்தில் சமாதானமாகி விடுவார்கள் என்று பகற்கனவு காண்பார்கள்
கோப்பையில் ஊற்றுவதற்குள் சரக்கை அப்படியே சரித்துக்கொள்வார்கள் 
சற்றே அவர்கள் பயணிக்கும் பாதையை கவனிக்கத் தொடங்கினால் உங்களால் பலிகடாவாகப் போகும் தியாகசீலர்கள் போல வெளியே நடிப்பார்கள்
கோல்ஃப் விளையாட உற்சாகமாக ஐந்து மைல் நடப்பவர்கள் வீட்டுக்கு கூடமாட உருப்படியாக ஒத்தாசை செய்வதில் வாழைப்பழ சோம்பேறியாகிவிடுவர்
பெண்களுக்கு காரணகாரியங்களும் புரிவதில்லை மதிநுட்பமும் பத்தாது என்று பினாத்துவார்கள்
பத்தினிகள் பின் தூங்கி முன் எழ சந்தர்ப்பமே தரமாட்டார்கள்
நீங்கள் பூசும் சாதாரண சாயங்களுக்குக்கூட உங்களை பேயோட்டும் சாமியாரினியாக நினைப்பார்கள்
பிறத்தியார் வியாதியை சொஸ்தப்படுத்துவதில் தீரராகவும் வீரராகவும் இருப்பவர்; தும்மலும் வயிற்றுவலியும் தனக்கென்று வந்துவிட்டால் மரித்து விடும் அவஸ்தையில் வியாதி கொண்டாடுவார்கள்.
இருவரும் ஏகாந்தமாக இருக்கையில் உங்களைப் பற்றி சட்டை செய்யாதவர்கள் பார்ட்டியில் சாண்ட்விச்சும் வெண்ணையுமாக படைத்துப் புருஷ சேவை நாடகம் புரியும் போது அவர்களை நாலு சாத்து சாத்தத் தோன்றும்
இல்வாழ்வில் கணவர்கள் ஹிம்சையானவர்கள்
இப்படியாக பல பிணக்கங்கள் இருந்தாலும் கடவுளின் அனுக்கிரஹத்தால் மனைவியரின் அன்பில் பின்னிப் பிணைக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஆக்டன் நாஷை வாத்தியார் அறிமுகப்படுத்திதான் தெரியும். இரத்தினச் சுருக்கமாக நாலைந்து வரிகளில் மண வாழ்க்கை சிறக்க என்று க.பெ-ம்மில் ”தப்பென்றால் ஒத்துக்கொள்! சரியென்றால் பொத்திக்கொள்” என்று நாஷை தமிழ்ப்படுத்தி அறிமுகப்படுத்தியிருந்தார். அவரது அறிமுகங்கள் என்றுமே சோடை போனதில்லை. நாஷைப் படித்ததில் எனக்குப் பிடித்த ஒன்றை இங்கே நானும் தமிழ்ப்’படுத்தி’யிருக்கிறேன். வாத்தியார் is uncomparable!!


நேற்றைக்கு மகளிர் தினத்தில் அடக்கஒடுக்கமாக இருந்த ஒருசில கணவன்மார்களின் சுயரூபம் இன்று பலருக்குத் தெரிந்திருக்கலாம். இந்தக் கவிதை அதற்கு சான்றாகவும் இருக்கலாம். நாஷின் ஒரிஜினல் இங்கே: http://www.poemhunter.com/poem/what-almost-every-woman-knows-sooner-or-later/


-

Thursday, March 8, 2012

ஸகியே!

குழந்தையின் மழலையை ரசிப்பது போல இந்தக் கவிதை மாதிரி வாக்கியங்களையும் ரசிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். சகல துக்கங்களையும் பொறுத்துக்கொள்ளும் ஸகிக்களுக்கு வந்தனம்.

சேலையில் தொட்டில்  கட்டி  
சாலை வேலை பார்க்கும் அம்மாவுக்கும்

கலர் புடவை கட்டி
காக்கி சட்டை போட்டு
ஆட்டோ ஓட்டும் அம்மணிக்கும்

பத்து செங்கல்லை தூக்கும் சித்தாளாய்
வேலை பார்க்கும் பெரியாளுக்கும்

நாலு வீடு பத்து பாத்திரம் தேய்த்து
நாலு எழுத்து படிக்க அனுப்பும் தாயம்மாவுக்கும்


கல் கணவனிடமும்  புல் புருஷனிடமும்  
குப்பை கொட்டும் குணவதிகளுக்கும்

அந்நியனாய் அயல் தேசம் சென்ற புதல்வனிடம்  
கண்ணியமான பாசத்திற்காக ஏங்குபவளுக்கும் 

உயிரை ஒருவனுக்கு கொடுத்து உடம்பை 
மற்றவனுக்கு கொடுத்தவளுக்கும்

வறுமையில் தன்னை தொலைத்து கரு அறையில்
சிவப்பில் வாழும் 'அவளு'க்கும்

குடும்பத்தை பேண பஸ் பயண
கூட்டத்தில் இடிபடுபவளுக்கும்

காதலிப்பவளுக்கும்
காதலித்து கைவிடப்பட்டவளுக்கும்

நேரிலும்  நிழலிலும்,
விண்ணிலும் மண்ணிலும்
இக பர சுகமளிப்பவளுக்கும்

என் சிரம் தாழ்ந்த
மனம் கனிந்த
மகளிர் தின வாழ்த்துக்கள்.
-இது கவிதை அல்ல கவிதை மாதிரி
--இது ஒரு மீள் பிரசுரம்

Sunday, November 27, 2011

அடங்காதது

 
 
 
 
 
 
 
 
கொட்டித் தீர்த்த
மழை அடங்கியது

இலை சொட்டிய
நீர் அடங்கியது

அர்த்தஜாமம் முடிந்த
கோயில் அடங்கியது

எரிந்து அலுத்த
தெருவிளக்கு அடங்கியது

சப்தம் இரைத்த
வாகனம் அடங்கியது

சிக்னலில் கையேந்திய
பிச்சை அடங்கியது

காதலர்கள் மோகித்த
கடற்கரை அடங்கியது

பண்டம் விற்ற
கடை அடங்கியது

அழுது வடிந்த
டிவி அடங்கியது

பேசி அலுக்காத
ஊர் அடங்கியது

வாசலில் உட்கார்ந்த
செக்கியூரிட்டி அடங்கியது

வாலாட்டித் திரிந்த
தெருநாய் அடங்கியது

பேட்டரி கரைந்த
கடிகாரம் அடங்கியது

நாள் முழுவதும்
அலைந்த மனசு
இன்னும் அடங்கவில்லை!!
 
படம்: இணையத்தில் அகப்பட்டது.

Thursday, August 18, 2011

வாழ்வியல் பாடத்திட்டம்



சமூக அறிவியல் வாழ்க்கையின்  
ஆசாபாசத்திற்கு அப்பாற்பட்டது

பரு(வ)ப்பொருள் மேனியின் இயற்பியலில்
காதல் வசப்படுகிறது

எல்லையில்லா அன்பு இருவரின்  
வேதியலுக்கு உட்பட்டது

உறவின்  நேசத்திலும் பாசத்திலும்
உயிரியல் வாழ்கிறது

திருமணம் இருவீட்டாரின்
கணிதத்தில் அடங்குவது

குடும்ப அமைதி
வரும் மணப்பெண்ணின்  
சரித்திரத்தில் இருக்கிறது

மன ஆரோக்கியம் நாம் வாழும்
புவியியலில் உள்ளது

நினைவிருக்கட்டும்!
சுதந்திரம் ஆங்கிலேயரிடமிருந்து மட்டுமா வாங்கியது?

ஏதோ என்னால முடிந்த
தமிழ் இது

கவிதைப் புலிகளைப் பார்த்து இந்தக் கட்டுரைப் பூனை சூடு போட்டுக் கொண்டது

#தோழர் வெங்கடேசன்.செ அவர்களுக்கு பின்னூட்டமாக போட்டது, இங்கு கொஞ்சம் முலாம் பூசப்பட்டது. 

பட உதவி: laurenpittis.bandcamp.com

-

Tuesday, March 8, 2011

ஸ்திரீகள் தினம்!

கவிஞர்களும் கவிதாயினிகளும் சகஜமாக உலவும் இந்த பதிவுலகத்தில் என்னுடைய இந்தச்  செயல் கொஞ்சம் அதிகப்ப்ரசங்கித்தனமானது தான். இருந்தாலும்... இது மகளிர் தின சிறப்பு கவிதை. கவிதை மாதிரி.... கீழ் கண்ட தலைப்பை ஒரு முறைக்கு இரு முறை படித்துவிட்டு மேலே படிப்பதற்கு கீழே செல்லவும்... விளைவுகளுக்கு கம்பெனி பொறுப்பல்ல..

கவிதை ஜாக்கிரதை!


ஓவியம்: ராஜா ரவிவர்மாவின் கைவண்ணம்



சேலையில் தொட்டில்  கட்டி  
சாலை வேலை பார்க்கும் அம்மாவுக்கும்

கலர் புடவை கட்டி
காக்கி சட்டை போட்டு
ஆட்டோ ஓட்டும் அம்மணிக்கும்

பத்து செங்கல்லை தூக்கும் சித்தாளாய்
வேலை பார்க்கும் பெரியாளுக்கும்

நாலு வீடு பத்து பாத்திரம் தேய்த்து
நாலு எழுத்து படிக்க அனுப்பும் தாயம்மாவுக்கும்


கல் கணவனிடமும்  புல் புருஷனிடமும்  
குப்பை கொட்டும் குணவதிகளுக்கும்

அந்நியனாய் அயல் தேசம் சென்ற புதல்வனிடம்  
கண்ணியமான பாசத்திற்காக ஏங்குபவளுக்கும் 

உயிரை ஒருவனுக்கு கொடுத்து உடம்பை 
மற்றவனுக்கு கொடுத்தவளுக்கும்

வறுமையில் தன்னை தொலைத்து கரு அறையில்
சிவப்பில் வாழும் 'அவளு'க்கும்

குடும்பத்தை பேண பஸ் பயண
கூட்டத்தில் இடிபடுபவளுக்கும்

காதலிப்பவளுக்கும்
காதலித்து கைவிடப்பட்டவளுக்கும்

நேரிலும்  நிழலிலும்,
விண்ணிலும் மண்ணிலும்
இக பர சுகமளிப்பவளுக்கும்

என் சிரம் தாழ்ந்த
மனம் கனிந்த
மகளிர் தின வாழ்த்துக்கள்.
இது கவிதை அல்ல கவிதை மாதிரி

இந்த அதிர்ச்சியிலிருந்து நீங்கள் மீள்வதற்கு.....

மனதில் உறுதி வேண்டும் படத்தில் இருந்து இரண்டு பாடல்கள்...

மாதர் தம்மை கேலி பேசும் மூடர் வாயை மூடுவோம்...


பின் குறிப்பு: ப்ளாக் எழுத ஆரம்பிச்சதிலேர்ந்து இந்த 'கவிதை' மட்டும் விட்டு வைத்திருந்தேன். இன்றைக்கு அந்த குறையும் நிவர்த்தி செய்தாயிற்று. இனிமேல் பல பேர் என்னை "எப்போ கவிதை?" என்று தொந்தரவு செய்ய மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.  இப்பதிவின் உப தலைப்பே இது எப்படி என்று கூறுமே.... 
ஆற அமர எழுதவதற்கு நேரமின்மையால் இது ஒரு மீள் பதிவு... அலுவலில் ஆணிகள் அதிகம்... இது சென்ற வருடத்து மகளிர் தினத்துக்காக எழுதியது. 

-

Saturday, November 6, 2010

'ஊசி'ப் பட்டாசுகள்



சூடு
poorgirl
பலகாரம் சுட்டு
பட்டாசு சுட்டு
கழிந்தது தீபாவளி;
சீமான் மகளுக்கு
கையில் சூடு
வெறுமான் மகளுக்கு
நெஞ்சில் சூடு









ஒளி
dark hut
அமாவாசையிலும்
பௌர்ணமியாய்
ஜொலித்தது ஆகாயம் -
தீபாவளியாம்!  
என் வாழ்வில்
ஒளி வருமா என்று
ஏங்கியது
ஏழை வீட்டு அகல் விளக்கு









பட உதவி: வேலி கடித்து ஏங்கிப் பார்க்கும் அந்த சிறுமி கிடைத்த இடம் djiin.wordpress.com. விளக்கில்லா வீட்டிற்கு இருட்டில் தடுமாறிக்கொண்டே நடக்கும் அந்த குழந்தையை கண்டெடுத்த இடம் memsaabstory.wordpress.com

Wednesday, September 29, 2010

ஒரு கம்ப்யூட்டர்காரனின் காதல் கவிதை

computerkaran

ஜடப்பொருளாய் இருந்த PC நான் 
உயிர்கொடுத்த OS நீ 

வன்பொருளாய் திரிந்த என்னை
மென்பொருளாய் திருத்தியவள்  நீ

எம்ப்டி சிடியாக இருந்த என்னை
சங்கீத பேச்சினால் எம்பி த்ரீ ஆக்கியவள் நீ

கணினி இயக்கும் உன் உள்ளங்கைக்குள்
கண்ணியமாய் சிறைபடும் மவுஸ் நான்

நீ இழுக்கும் திசைக்கு வரும்
ஜாய்ஸ்டிக் அடிமை நான்


நீ மடி கொடுப்பாய் என்றால்
உன் லேப்டாப்பாய் நான்

டைப் அடிக்கத் தெரியாத உன் பிஞ்சு விரல்களால்
செல்லக் குட்டுகள் பெறும் கீபோர்டு நான்

உன் ஸ்பரிசம் எனை அழுத்தும் என்றால்
கணினியின் ஆன்(ண்) சுவிட்ச் நான்


நீ உற்று ரசிப்பாய் என்று தெரிந்திருந்தால்
ஒரு மானிட்டராயேனும் நான் பிறந்திருப்பேனே

ஷட்டவுன் ஆகப் போனவனன் உனைப்
பார்த்த கணத்தில் ரீபூட் ஆகிப்போனேனே!

கண்ணே! நீ சூடுவாய் என்றால்
நான் தான் உனக்கு வலைப்பூ

முப்போதும் என் மனத்திரையில் ஓடும்
யூட்யூப் வீடியோ நீ

அரட்டை பெட்டியில் வரும் ஸ்மைலி நீ
அனுதினமும் நான் தேடும் கூகிள் நீ

என் ஹார்ட்டிஸ்க் நிரப்பிய ஒரே கவிதை நீ
என் அறிவுக்கண்ணை திறந்த விக்கிபீடியா நீ
என் சொப்பனங்களை ஆக்ரமித்த ஸ்க்ரீன் சேவர்  நீ

இருபத்து நான்கு மணிநேரமும் என்னுள் ஓடும் செர்வர் நீ
என் உள்ளத்தை அச்சடித்த கலர் பிரிண்டர் நீ

வைரஸ் தாக்கும் வரை தாமதிக்காதே
விரைந்து வா! நீயும் நானும் இந்த
இணையத்தால் இணைவோம்

பி.கு: மேற்கண்டதிர்க்கும் தலைப்பிற்கும் சம்பந்தம் இல்லை என்று நினைப்பவர்கள் தயவுசெய்து கீழே இப்பதிவின் Labelஐ பார்க்கவும்.

பட உதவி: cs4fn.org
-

Monday, March 8, 2010

கவிதை ஜாக்கிரதை!


ஓவியம்: ராஜா ரவிவர்மாவின் கைவண்ணம்



சேலையில் தொட்டில்  கட்டி  
சாலை வேலை பார்க்கும் அம்மாவுக்கும்

கலர் புடவை கட்டி
காக்கி சட்டை போட்டு
ஆட்டோ ஓட்டும் அம்மணிக்கும்

பத்து செங்கல்லை தூக்கும் சித்தாளாய்
வேலை பார்க்கும் பெரியாளுக்கும்

நாலு வீடு பத்து பாத்திரம் தேய்த்து
நாலு எழுத்து படிக்க அனுப்பும் தாயம்மாவுக்கும்


கல் கணவனிடமும்  புல் புருஷனிடமும்  
குப்பை கொட்டும் குணவதிகளுக்கும்

அந்நியனாய் அயல் தேசம் சென்ற புதல்வனிடம்  
கண்ணியமான பாசத்திற்காக ஏங்குபவளுக்கும் 

உயிரை ஒருவனுக்கு கொடுத்து உடம்பை 
மற்றவனுக்கு கொடுத்தவளுக்கும்

வறுமையில் தன்னை தொலைத்து கரு அறையில்
சிவப்பில் வாழும் 'அவளு'க்கும்

குடும்பத்தை பேண பஸ் பயண
கூட்டத்தில் இடிபடுபவளுக்கும்

காதலிப்பவளுக்கும்
காதலித்து கைவிடப்பட்டவளுக்கும்

நேரிலும்  நிழலிலும்,
விண்ணிலும் மண்ணிலும்
இக பர சுகமளிப்பவளுக்கும்

என் சிரம் தாழ்ந்த
மனம் கனிந்த
மகளிர் தின வாழ்த்துக்கள்.
இது கவிதை அல்ல கவிதை மாதிரி

பின் குறிப்பு: ப்ளாக் எழுத ஆரம்பிச்சதிலேர்ந்து இந்த 'கவிதை' மட்டும் விட்டு வைத்திருந்தேன். இன்றைக்கு அந்த குறையும் நிவர்த்தி செய்தாயிற்று. இனிமேல் பல பேர் என்னை "எப்போ கவிதை?" என்று தொந்தரவு செய்ய மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.  இப்பதிவின் தலைப்பே இது எப்படி என்று கூறுமே....

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails