Wednesday, January 25, 2012

ஆ! We!!


அன்னிக்கு கழுத்தை நெறிக்கும் கூட்டம். மாலையும் கையுமா ஒருத்தரோட ஒருத்தர் முண்டியடிச்சுக்கிட்டு ஒரே தள்ளுமுள்ளு. அப்ப அவ அங்க வந்திருந்தாளான்னு தெரியாது. ஆனா ஆத்தாங்கரைக்கு பக்கத்தில தினமும் நாங்க அன்னியோன்யமா சந்திச்சு உறவாடிக்கிட்டுருக்கும் போது அவ மேலேர்ந்து அடிச்ச அந்த கமகம வாசனை நல்லாவே மணம் வீசிச்சு. அப்படியே நாம கொஞ்சம் திரும்பிப்பார்க்கலாமா? என்னன்னு கேளுங்களேன்.

அவங்க பாட்டிக்கி எம் மேல நல்ல அபிப்ராயம். ப்ரியம் ஜாஸ்தி. சாதாரணமாக் கொத்தமல்லிப் போட்டு நீர்க்க பச்சை மோர்க்கொழம்பு வச்சாக்கூட ஆசையாசையா வாய் நிறைய “பாபு... இங்க வாப்பா...”ன்னு கூப்பிட்டு தோளைத் தடவிச் சாப்பிடக் குடுப்பாங்க. திண்ணையில் உட்கார்ந்து சதா வில்ஸ் குடிச்சிக்கிட்டிருக்கும் அவ அப்பன் தான் கழுத்தை இறக்கி கண்ணை நிமிர்த்தி ரொம்பத் திமிராப் பார்ப்பான். பாவாடை சட்டையிலேர்ந்து பல்லு போனது வரை ரோடுல போற ஒரு பொண்ணை விடமாட்டான். அப்படியே முழுங்கிடறமாதிரி பார்ப்பான். எப்போதும் கண்ணு ரெண்டும் கோவைப்பழமா சிவந்திருக்கும். ராத்திரி அடிச்சது நெப்போலியனோ ஓல்ட் மாங்கோ. என்னன்னு தெரியாது. ஆனா அவன் தண்ணி வண்டின்னு தெரியும். எங்கனா புதுசா டாஸ்மாக் தொறந்தா அந்தாளை திறப்புவிழாவுக்குக் கூப்பிடலாம். இந்த ஏரியாவில் பெருமைமிக்க மூத்த குடியர். சூப்பர் சீனியர். சும்மாவே வானம் பார்த்த மீசையை ரெண்டு தடவை நீவி விட்டுப்பான். அவன் வாசல்ல இருந்தான்னா அந்தப் பக்கம் நா தலவச்சுப்படுக்கமாட்டேன்.

அவ அம்மா இல்லாத பொண்ணு. பாவம் அவங்க சின்ன வயசிலேயே தவறிட்டாங்க. ஆனா பாட்டி அவள ரொம்ப ஒழுக்கமா வளர்த்தாங்க. ஆறு மணிக்கு விளக்கு வெச்சப்புறம் வாசப்படி தாண்ட மாட்டா. செவ்வாய் வெள்ளி கைலாசநாதர் கோயில் முருகன் சந்நிதி முன்னாடி வாயத் தொறக்காம உதடு மட்டும் அசைய முனுமுனுத்து சஷ்டி கவசம் படிப்பா. நெத்தியில் அள்ளிப் பூசியிருக்கும் விபூதியையும் பக்திப்பழமாக் கண்ணை மூடி கவசம் உச்சாடனம் செய்யிற அவளையும் பார்க்குறப்ப கே.பி.சுந்தராம்பாளுக்குப் பாவாடை கட்டிவிட்டா மாதிரி இருக்கும். அவ கையைப் பிடிச்சுக்கிட்டு கோயிலுக்கு வரும் பாட்டிதான் அவளுக்கு எஸ்கார்ட். அப்பன்காரன் இப்படித் தத்தாரியா, குடிகாரனா ஊர் பொறுக்கிக்கிட்டு திரியறதுனால பாட்டி அவளை உள்ளங்கையில பொத்திவச்சு வளர்த்தா. இப்படி அப்படி வாசல்ல நிக்கக்கூடாது. ரோட்ல நின்னுக்கிட்டு கெக்கபிக்கேன்னு சிரிக்ககூடாது. தலையைப் பின்னி நுனியில ரப்பர் பாண்ட் போட்டுக்கனும். ரெண்டு முழம் மல்லிப்பூ வாங்கி முன்னாடி தோள்ல சரிய வச்சுக்கிட்டா “தாசிப்பொண்ணு மாதிரியாப் பூ வச்சுப்பாங்க”ன்னு நங்குன்னு பின்னாடி இடிப்பா. ஒன்னா ரெண்டா இதுபோல இன்னும் நெறையா கண்டீஷன்ஸ்.

எட்டாவதுலேர்ந்து பதினொன்னாம் க்ளாஸ் போறதுக்குள்ள அவளுக்கு அபரிமிதமான வளர்ச்சி. தளதளன்னு தக்காளிப்பழம் போல இருந்தா. ஒரே ஊர். ஒரே தெரு. ஒரே ஸ்கூல். ஒரே க்ளாஸ். ஒரே செக்ஷன். ஒரு வருஷம் ரெண்டு வருஷமில்லை. ஆறு வருஷம் ஒன்னாவே படிச்சோம். இதுக்குமேல ஒரு ஆம்பிளைப் பையனுக்கு என்ன வேணும். தூரத்தில பார்த்தால கண்ணு ரெண்டுலையும் பல்பு எரியும். அவ பக்கத்தில வந்தா ஏதோ சொல்லத்தெரியாத குறுகுறுப்பு உடம்பில வரும். பதினொன்னு மற்றும் பன்னிரெண்டுக்கு ஹாஃப்ஸாரியை ஸ்கூல் யூனிஃபார்மா கொண்டு வந்திருந்தாங்க அந்த புது ஹெச்செம். சைடில் தெரியும் கொடியிடைக்கு வெர்னியர் காலிப்பர் படம் போட்ட ஃபிசிக்ஸ் ப்ராக்டிகல்ஸ் நோட்புக்தான் மறைப்பு தடுப்பு எல்லாமே. வாலிப வயசுன்னா என்னான்னு எனக்கு அப்பதான் அர்த்தம் புரிஞ்சுது. இராத்தூக்கம் கெட்டுப்போச்சு. நாள் தவறாம நேரம் தவறாம ஸ்கூலுக்கு வந்தேன்னு பாராட்டுப் பத்திரமெல்லாம் கொடுத்தாங்க. நாம எதுக்கு வந்தோம்னு நமக்குத்தானே தெரியும். 

“பாட்டி நா வரேன்”ன்னு அவ குரல் காத்துல மிதந்து வந்துச்சுன்னா துண்டைக்காணும் துணியைக்காணும்னு வாரிச் சுருட்டிகிட்டு நானும் புத்தகமூட்டையை எடுத்துக்கிட்டு கிளம்பிடுவேன். ராஜகுமாரியைச் சுத்தி சேடிப்பொண்ணுங்க போகிற மாதிரி அவளைச் சுத்தி ஒரே பொண்ணுங்க கூட்டமா இருக்கும். காலையிலயும் சாயந்திரத்திலையும் நா சொல்லாமலேயே என்னோட சைக்கிள் அவளை ஃபாலோ பண்ணும். என்னோட சைக்கிள் டயருக்கும் அவளோட காலடிகளுக்கும் கூட ஒரு ஸ்நேகம் பிறந்திடுச்சு. லட்சம் பொண்ணுங்கள்ல ஒருத்தியா அவளை ஒரு பெரும் மைதானத்தில விட்டு நடக்க சொல்லி யாருன்னு அடையாளம் காட்டச்சொன்னா தயங்காம கணநேரத்தில சரியாச் சொல்லிடுவேன். அவளைப் பெத்தவங்களுக்குக் கூட அவ்வளவு சுலபத்தில் கண்டுபிடிக்கமுடியாது. முழுப்பரிட்சைக்கு முன்னாடி கணக்கில ஏதோ சொத்தைச் சந்தேகம் கேட்டப்ப தான் நாங்க ரெண்டுபேரும் மொதல்ல பேசிக்கிட்டோம். அவ கேட்க ஆரம்பிச்சத்துக்கப்புறம்தான் இது சந்தேக கேஸ் இல்லைன்னு கண்டுபிடிச்சேன். இது மீண்டும் ஒரு காதல் கதைன்னு ஒரு முடிவுக்கு வந்திருப்பீங்க. சரி. மீதி கொஞ்சம்தான் இருக்கு. அதையும் கேளுங்க.

சந்தேகத்தில ஆரம்பிச்சது சந்தோஷமா தினமும் தொடர ஆரம்பிச்சது. ஆத்துக்கு தண்ணித் தூக்க வரும்போது, கடுகு வாங்க முக்குகடைக்கு போகும்போது, ”லலல்லா” பாடிக்கிட்டே வாசல்ல ஓடி வந்து பூ வாங்கும்போது, விளக்குப்போட கோயிலுக்கு போகும் போதுன்னு எப்பப் பார்த்தாலும் அவ கண்ணு என்னை எங்கவீட்டு சுவரெல்லாம் தேடிச்சு. கண்ணாளனே பாட்டு மனீஷா கொய்ராலா மாதிரி தறிகெட்டு தவிச்ச அவ நெஞ்சு விடாம என்னைத் துரத்திச்சு. முழுக்க மூனு நாளைக்குள்ள நா அவளுக்கு மொத்தமா அடிபணிஞ்சிட்டேன். ஒரு நாள் பொழுது சாயர வேளையில ஆத்தங்கரை அரசமரத்தடி புள்ளையார் கோயில் வாசல்ல ”ஓ”ன்னு அழுதுட்டா. ரெண்டு ஆடும் படித்துறைக்கு அந்தாண்ட சரிஞ்சு அசை போடற மாடும் மட்டும்தான் பார்த்துக்கிட்டு இருந்தது. வேற ஈ காக்கா இல்லை. எனக்கு சடார்னு மனசு விட்டுப்போச்சு. ச்சே. இந்தப் புள்ள இப்படி அழுவுதேன்னு மொத தடவையா தலையை லேசா வருடி அப்படியே மாரோட சாச்சுக்கிட்டேன். “என்னாச்சும்மா”ன்னு துக்கம் விசாரிச்சேன். எம்மார்ல முட்டித் தேம்பித் தேம்பி அழுதா. மல்லிப்பூ மூக்கைத் துளைக்க அவ அழுகை என் இருதயத்தை துளைச்சிச்சு.

தோள்ல சாஞ்சிகிட்டு அணைச்சாப்ல இருக்கிறதனால ”எவ்ளோ நாழி அழுதாலும் பரவாயில்லைன்னு” காமம் சொல்லிச்சு. ”ஐயோ பாவம்! அழறாளே. ஆறுதல் சொல்லுடா முண்டம்னு” காதல் திட்டிச்சு. ஒருவழியா கண்ணை துடைச்சிக்கிட்டு நிமிர்ந்து என்னைப் பார்த்தா. “என்னைக் கண் கலங்காம பார்த்துக்குவியா”ன்னா. ”ம்”ன்னு தலையை ஆட்டினேன். “சத்தியமா”ன்னு கேட்டுக்கிட்டே என் கையை எடுத்து அவ தலை மேல வச்சுக்கிட்டா. “சத்தியமா”ன்னேன். “ஏம்மா அப்படி அழுதே”ன்னேன். சரேல்னு பாவாடையைத் தொடை வரை தூக்கினாள். வில்ஸ் விளையாடியிருந்தது. ஆங்காங்கே புள்ளி வைக்கப்பட்டிருந்தது. அதிர்ந்துபோனேன். “அடப்பாவி! யாரு அவனா காரணம்?” என்றேன். தலையை மேலும் கீழுமாக ஆட்டினாள்.

குடிகார அப்பனால அவ பட்ற அவஸ்தை எனக்கு நல்லாவே புரிஞ்சுது. ஒரு தடவை காலேஜுக்குப் செமஸ்டர் ஃபீஸ் கட்ட முடியாம தவிச்சா. டவுனுக்கு போய் அதுக்கு தடாலடியா ஒரு ஏற்பாடு பண்ணினேன். மறுநாள் காலையில மோதிரத்தைக் காணோம்னு தெருவில எங்கம்மா போட்ட கூச்சல்ல அந்த ஏரியாவே கிடுகிடுத்துப் போச்சு. ஜன்னல்லேர்ந்து அவ அர்த்தபுஷ்டியா பார்த்தா. நா அதை ஆமோதிச்சுச் சிரிச்சேன். “ஏம்ப்பா”ன்னு அவ கண்ணு கெஞ்சிச்சு. ஆயிரம் காலத்துப் பயிர் அப்பவே என்கிட்ட வளர ஆரம்பிச்சிடுச்சு. அவ அப்பன் தண்டச்சோறு அதைப் பார்த்துட்டான். எங்களை கையும்களவுமாப் பிடிச்சிட்டான்.

எதிர்பார்த்தது போலவே அடுத்த ரெண்டு நாள்ல காலேஜுக்கு இனிமே போகக்கூடாதுன்னு வீட்டுக்குள்ள போட்டு பூட்டிப்புட்டான். கிராதகப் பய.  பாட்டிக்கு ரொம்ப வயசானதால அவனோடப் போராட முடியலை. ஒரு ரெண்டு மூனு நாளைக்கு வாசப் பக்கம் அவளை ஆளையே காணும். எனக்கு எட்டிப்பார்த்துக் கண்ணு ரெண்டும் பூத்துப்போச்சு. அவளைப் பார்க்கமாட்டோமான்னு ஏங்கிக்கிட்டு இருக்கும்போது ஒரு நாள் மத்தியானமா தோள்ல அழுக்குத்துணியெல்லாம் எடுத்துப்போட்டுக்கிட்டு ஆத்தாங்கரைப்பக்கம் போயிக்கிட்டு இருந்தா. ஒரு பத்து நிமிஷ கேப்ல நானும் அங்கே போனேன். மாருக்கு மேல தூக்கிக்கட்டின பாவாடையோட துணிமணி தோச்சிக்கிட்டு இருக்கும்போது படித்துறை மேலே நா நிக்கிறத பார்த்தா.

அப்படியே தோய்க்கிறதைப் போட்டுட்டு மேல வந்து “பாபு! நீ என்ன மறந்துடு”ன்னு வழக்கமா சினிமால வர்ற ஹீரோயின் கணக்கா சொன்னா. கண்லேர்ந்து தண்ணி கரைபுரண்ட வெள்ளமா வந்துச்சு. பக்கத்துல ஓடற காவிரியில கூட அவ்ளோ தண்ணி நா பார்த்ததில்லை. “என்னம்மா ஆச்சு”ன்னு ஆதூரமாக் கேட்டேன். “இல்ல அவன் நம்மளை வாழ விடமாட்டான். நீயாவது உனக்கு புடிச்சவளை கட்டிக்கிட்டு சந்தோஷமா இரு”ன்னு குரல் கம்ம துக்கம் தொண்டையை அடைக்கப் பேசினா. “ச்சீ. அசடு. இன்னும் ஏழேழு ஜென்மத்துக்கு நீயும் நானும் தான் புருஷன் பொண்டாட்டி. உங்கப்பன் மட்டும் எதாவது சொல்லட்டும். பேத்துர்றேன்”ன்னேன். ஒரு அஞ்சாறு செகண்ட் மௌனமா நின்னா. அரசமரத்துக் காத்து அடிச்சு வீசி கலஞ்ச தலையை ஒரு கையால கோதிக்கிட்டே...

”அது என் அப்பா இல்ல”ன்னாப் பாருங்க. அப்பவே இடிஞ்சுப் போய்ட்டேன். “யார் அது?”ன்னு பதபதைச்சுக் கேட்டேன்.  “அது என்னோட அம்மாவுக்கு புருஷன்”ன்னா. அப்ப நீ யார் பொண்ணுன்னு கேட்கறதுக்கு முன்னாடியே “எங்கம்மாவுக்கும் அவங்களோட முதல் காதலனுக்கும் பொறந்தவ நா. மூனாவதா இந்தாளைக் கட்டிக்கிட்டாங்க. பால்காரப் பன்னீர் தெரியும்ல உனக்கு. ஒரு நாள் அவனோட சிரிச்சு பேசிக்கிட்டு இருந்தாங்க. எங்கிருந்தோ இதப் பார்த்துப்புட்டு ராத்திரி வந்து ஆவேசமா தூணோட சேர்த்து மண்டைய நெத்தினான். ரத்தம் கித்தம் எதுவும் வரலை. பொட்டுல பட்டு ஆள் அவுட். நானும் பாட்டியும் கிடுகிடுத்துப்போய்ட்டோம். பயத்துல வாயே திறக்கலை. காலையில ஹார்ட் அட்டாக்ல போய்ட்டா எம்பொண்டாட்டின்னு ஊருக்கு நீலிக்கண்ணீர் வடிச்சிட்டு சுடுகாட்டுக்குக் கொண்டு போய் எரிச்சிட்டு வந்துட்டான்”

“அந்த துக்கத்தைவிட ஒரு கேவலமான விஷயத்தைச் சொல்றேன். அவன் ஒரு இன்செஸ்ட். பல தடவை வீட்ல ட்ரெஸ் மாத்திக்கும்போது என்னையே எட்டிஎட்டிப் பார்ப்பான். விகாரமா சிரிப்பான். போதை தலைக்கேறிடிச்சுன்னா அவனுக்கு பொம்பளைங்கள்ல பொண்ணு, பொண்டாட்டிங்கிற பேதமே கிடையாது. அம்மா போனதுலேர்ந்து தினமும் நான் ஒரு விதமான சித்ரவதையை அனுபவிக்கிறேன்.” இப்படி அவ பாட்டுக்கு சொல்லிக்கிட்டே போனப்ப என் ரத்தம் கொதிச்சுப்போச்சு. மவனே அவனை உண்டு இல்லைன்னு பண்ணிடனும்னு கொலவெறி வந்திச்சு. இப்படி நா நினைச்சுக்கிட்டே இருக்கும் போது அவ உடனே கடகடன்னு ஆத்துக்கு ஓட ஆரம்பிச்சா. ஒன்னுமே புரியாம நா திரும்பிப் பார்த்தபோது கையில பாட்டிலோட அவ அப்பங்காரன் வந்துகிட்டு இருந்தான்.

எனக்கு பயமா இல்லை. என்ன பண்ணிடுவான்னு நெஞ்சை நிமிர்த்தி நின்னுக்கிட்டுருந்தேன். வாய் குழறி கன்னாபின்னான்னு வாய்க்கு வந்தபடியெல்லாம் திட்டினான். உலகத்தில அவ்வளவு கெட்டவார்த்தை இருக்குன்னு எனக்கு அப்பத்தான் தெரியும். சண்டை போட்டுக்கிட்டே படியிறங்கி கடைசிப் படியில தோச்சிக்கிட்டு இருந்தவ கிட்ட என்னைக் கொண்டுவந்துட்டான். ”அப்பா.. அவர எதுவும் பண்ணிடாதீங்கன்னு” அவன் காலைப் பிடிச்சுக்கிட்டு அவ கெஞ்சறா. அவன் மசியலை. எனக்கு கோபம் தலைக்கேறிப்போச்சு. அவனைப் பிடிச்சு ஆத்துல தள்ளலாம்னு கையத் தூக்கினேன். க்ஷன நேரத்துல தோள்ல போட்டிருந்த அந்த சிகப்புக் கம்பளித் துண்டை எடுத்து முறுக்கி என் கழுத்துல போட்டு நெறிக்க ஆரம்பிச்சான். எனக்கு தொண்டை கமறுது. மூச்சு அடைக்குது. உசுருக்கு போராட ஆரம்பிச்சேன்.

ஒரு ஸ்டேஜுக்கு மேல என்னால அந்த இரும்புப் பிடியைத் தளர்த்த முடியலை. மயக்கம் வர்ற மாதிரி இருந்துச்சு. அவன் காலைப் பிடிச்சு அவ அசராம உலுக்கிக்கிட்டே இருந்தா. அதீதமா உடம்பு குலுங்குனதுல அவளோட பாவாடை படக்குன்னு அவிழ்ந்திருச்சு. என் கழுத்தை நெறிச்சுக்கிட்டு இருந்த அவனுக்கு இதைப் பார்த்ததும் அப்படியே புதுரத்தம் பாஞ்சா மாதிரி இருந்தது. ஒரு அசுரபலத்தோட என்னை  ஆத்துல தூக்கிக் கடாசினான்.

எல்லாம் முடிஞ்சு பார்க்கிறப்ப ஹால்ல உப்பிக் கிடந்த என்னோட உடம்புக்கு எல்லாரும் மாலை போட்டுக்கிட்டு இருந்தாங்க. அவ வந்தாளான்னு தெரியலை. அவ அப்பங்காரன் அதே மாதிரி வில்ஸ் குடிச்சிக்கிட்டு அவங்கவீட்டு வாசல் திண்ணையில உட்nகார்ந்து இருந்தான். நீச்சல் தெரியாத பையன் ஆத்துல விழுந்து செத்துப்போய்ட்டான் அப்டீன்னு ஊர்ல இருக்கிறவங்க நினைச்சாங்க. பாட்டிக்கும் அவளுக்கும் நா எப்படி செத்தேன்னு தெரியும். இருக்கட்டும். ஒரு நா அவனை பழிவாங்காம விடமாட்டேன்.

என்ன கேட்டீங்க? இப்ப நா எங்கேருந்து பேசிக்கிட்ருக்கேனா? சுடுகாட்ல இருக்கிற புளியமரம்தான். இருங்க.. தப்புச் சத்தம் கேட்குது. ஓ. அங்க இன்னொரு பிரேதம் வருது. அட அவ அப்பன்காரன் முன்னாடி கொள்ளிச்சட்டி தூக்கிட்டு வரான். பாட்டி மண்டையப் போட்ருச்சா. கொஞ்சம் இருங்க. என் பக்கத்துல வந்து கிளைமேல ஒருத்தி உட்கார்றா. “உங்ககூட சேரணும்னு நினைச்சேன். அதான் நேரே வந்துட்டேன். உங்களுக்குத் துண்டு. எனக்கு என் தாவணி”. 

”ஆ! We!!”

படம்: என்னுடைய புகைப்பட பரணிலிருந்து....

-

25 comments:

Angel said...

அந்த ஆரெண்டு நாள் முன்னாடி படித்தேன்
எனக்கு இந்த ஆ பிடிச்சிருக்கு

Madhavan Srinivasagopalan said...

அதீத கற்பனை..

எப்படிலாம் யோசிக்கற ஆர்.வீ.எஸ்...

// பாட்டி மண்டையப் போட்ருச்சா ? //
பாட்டி புட்டுக்கிச்சா..?

Chitra said...

:-)))

அப்பாதுரை said...

பாதிக் கதை பிரமாதம். பாதிக் கதை சு சு சு சுஜாதா :)

A.R.ராஜகோபாலன் said...

வெர்னியர் காலிப்பர் மறைப்பும் வர்ணனையும் சூப்பர்.

Yaathoramani.blogspot.com said...

அருமையான காதல் காவியம்
முடிவு வித்தியாசமாகவும் அருமையாகவும் இருந்தது
மனம் கவர்ந்த பதிவு
வாழ்த்துக்கள்
த.ம 3

ரிஷபன் said...

ஆவி நல்லா விளையாடுது..

விஸ்வநாத் said...

// அவன் ஒரு இன்செஸ்ட்
வேற வார்த்தை போட்ருக்கலாமே;
கிராமத்து பொண்ணு;
நகரத்து வார்த்தை;

RAMA RAVI (RAMVI) said...

நல்ல காதல் கதை. வர்ணனை எல்லாம் அருமை. முடிவு டிராஜிடி யாக இருந்திருக்க வேண்டாம்.

அப்பாதுரை said...

good catch, ViswanathV.

RVS said...

@angelin
ரசித்ததற்கு நன்றிங்க.. அந்த ஆ... அசாதாரண ஆ... :-)

RVS said...

@Madhavan Srinivasagopalan
பாராட்டுக்கு நன்றி மாதவா.. :-)

RVS said...

@Chitra
நன்றிங்க.. :-) ப்ளாக் எழுதறீங்களா? :-))

RVS said...

@அப்பாதுரை
பாராட்டுக்கு நன்றி தல. :-)

RVS said...

@A.R.ராஜகோபாலன்
பாராட்டுக்கு நன்றி கோப்லி. :-)

RVS said...

@Ramani
நன்றி சார்! :-)

RVS said...

@ரிஷபன்
சார்! அத்தேதான்.... :-))

RVS said...

@ViswanathV
கிராமத்துப்பொண்ணாயிருந்தாலும் காலேஜ் வரைக்கும் போயிடிச்சு விசு! இது போல தொடர் தொந்தரவுகளை அனுபவித்ததால் அது எந்தவித டார்ச்சரில் வருகிறது என்று தெரிந்து வைத்திருந்தாளோ என்னமோ? :-)

RVS said...

@RAMVI
பாராட்டுக்கு நன்றிங்க... ட்ராஜிக் எண்ட்? அதான் சேர்ந்துட்டாங்களே? :-)))))))

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

பயமா இருக்கு RVS என்னமா திங்க் பண்றீங்கப்பா...

சாந்தி மாரியப்பன் said...

டெரரான கற்பனை :-))

தக்குடு said...

இந்த கதையை எப்பிடி பாக்காம விட்டேன்!! புஸ்தக வாசிப்பு அதிகம் ஆக ஆக உங்களோட யோசிப்பு எல்லை கடந்து போயிண்டு இருக்கு.

பிரமிப்புடன்,
தக்குடு

RVS said...

@”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி
சார்!.... நன்றி... :-)

RVS said...

@அமைதிச்சாரல்
நன்றிங்க சாரல்... :-)

RVS said...

@தக்குடு
அடாடா.. வாசிப்பு...யோசிப்பு... கவிதையான கமெண்ட் தக்குடு... நன்றி. :-)

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails