Thursday, February 11, 2010

சினிமாவில் மழை


காலையிலிருந்து ஊருக்கே குடை பிடித்தாற்போல் இருந்தது வானம். நான் பிறந்த ஊரில் மழை பெய்தால் மிகவும் கொண்டாட்டமாக இருக்கும். தண்ணீர் தேங்காத சாலைகள். ஊரையே அலம்பி சுத்தம் செய்த பிறகு, கருப்பாக இருக்கும் தார் ரோடு, மூக்கை துளைத்து மூளையில் இறங்கும் மண்னின்  வாசம். வேப்ப மரத்தில் இருந்து முத்து முத்தாக சொட்டும் துளிகள். அந்த நீர் சொட்டும் மரத்தடியில் இரண்டு குட்டிகளுடன் ஒதுங்கி "மே... மே...." என்று இறைஞ்சி மழையை விடச்சொல்லும் கரிய நிற ஆடு. மழை விட்டவுடன் 'அக் அக்', 'க்ரீச் க்ரீச்" சொல்லி பறக்கும் பறவைகள். சாலையில் வேகமாக செல்லும் பேருந்தின் ஈரம் கலந்த டயர் சத்தம். எங்கிருந்தோ பச்சை வாசனையுடன் காற்றினில் வரும் இதமான குளிர். கண்ணுக்கெட்டிய தூரம் வரை குளித்து தலை துவட்டி புத்துணர்வுடன் நிற்கும் வாலிபனை போன்ற பசேல் என மரங்கள். நீல வானுக்கு கருப்பு திரை போட்ட மேகங்கள், ஒன்றை ஒன்று துரத்தி விளையாடும் காட்சிகள். யாரோ ஈர மண்ணில் நடக்கும் போது எழும் ஹவாய் செருப்பின்  "டப் டப்" சப்தம். மனதை மகிழ்விக்கும் மழை அது. சென்னையில் மழை பெய்தவுடன் முதலில் வருவது சாக்கடை நாற்றம். சரி சரி அது இல்லை இன்றைய தலைப்பு. சினிமாவில் வரும் மழை பாடல்கள் அப்படியே வந்து நெஞ்சில் நின்றது. என் நினைவில், நெஞ்சில் நின்ற சில பாடல்கள் உங்களுக்கும்...
(கிழே வரும் இப்பட்டியலும் வரிசையும் ஒருவருக்கொருவர் மாறலாம்)

இசை ஞானி இசையில், எஸ். ஜானகியின் குரலில், இன்று நீ நாளை நான் படத்தில், சிவகுமார் முன் மகிழ்ச்சியாக தட்டாமாலை சுற்றி ஆடும் லக்ஷ்மி பாடும்

பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்.....
அட எண்ணம் ஊறுது, வண்ணம் மாறுது கண்ணோரம்......


==============================================================
சங்கர் கணேஷ் இசையில், எஸ்.பி.பி மற்றும் எஸ்.ஜானகி பாடிய, அம்மா படத்தில், சரிதா, பிரதாப் போத்தன் 'இணைந்து' நடித்த

மழையே மழையே இளமை முழுதும் நனையும் வரையில் வா .....
சாரல் விழும் நேரம் .... தேவ மயக்கம்.....  கூந்தல் மலரில் தேனை எடுக்க காத்து கிடந்தேன் கால்கள் கடுக்க.....


===================================================================

இளையராஜா இசையில், டி.எல்.மகாராஜன், சுசீலா அம்மா பின்னணியில், மணியின்  நாயகனில், கமலஹாசன் வேலு நாயக்கர் ஆன

அந்தி மழை மேகம்
தங்க மழை தூவும்
திருநாளாம்....


=========================================================
இளையராஜா இசையில், எஸ்.ஜானகியின் நெஞ்சு நனைக்கும் குரலில், புன்னகை மன்னனில் ரேவதி குடை விட்டெறிந்து ஆடும்

வான் மேகம்...
பூப்பூவாய் தூவும்
தேகம் என்னவாகும்...
இன்பமாக நோகும்....

=========================================================================
ஜி.கே.வெங்கடேஷ் இசையில், எஸ்.பி.பி யின் தேன் குரலில், நான் பிறந்த அடுத்த வருஷம் வெளிவந்த பொண்ணுக்கு தங்க மனசு படத்தில், சிவகுமார் மற்றும் நனைந்த ஆடையில் காதல் தூக்கலாக ஜெயசித்ரா காதலிக்கும்

தேன் சிந்துதே வானம்...
உனை எனை தாலாட்டுதே....
மேகங்களே தரும் ராகங்களே ...
எந்நாளும் வாழ்க...


====================================================================
எம்.எஸ்.வி & இளையராஜா இன்னிசையில், எஸ்.பி.பி.யின் குரல் சாரலில், செந்தமிழ் பாட்டு படத்தில் பிரபு கையில் கொலுசு தட்டி கஸ்தூரிக்கு பாடும்

சின்ன சின்ன....
தூறல் என்ன....
என்னை கொஞ்சும்....
சாரல் என்ன....

========================================================================
ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானின் அதிரடியில், ஸ்ரீனிவாஸ் பாடிய, தாஜ் மஹால் படத்தில், பாரதிராஜாவின் புத்திரன் மனோஜ் கையில் தாஜ் மஹால் நனைத்து ஆடும்

சொட்ட சொட்ட நனையுது தாஜ் மஹாலு ...
குடை ஒன்னு குடை ஒன்னு தா கிளியே....
விட்டு விட்டு துடிக்குது என் நெஞ்சு ..
வெட்கம் விட்டு வெட்கம் விட்டு வா வெளியே....


================================================================
ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில், உன்னி மேனன் பாடிய, ரிதம் படத்தில், அர்ஜுன் செல்லும் நீர் நிறைந்த இடங்களில் வரும் பாடல்

நதியே நதியே காதல் நதியே நீயும் பெண்தானே...
அடி நீயும் பெண்தானே...
ஒன்றா இரண்டா காரணம் நூறு கேட்டால் சொல்வேனே...
நான் கேட்டால் சொல்வேனே....


===================================================================
ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில், மலையாள எம்.ஜி.ஸ்ரீகுமார் பாடிய, என் சுவாச காற்றேவில், அரவிந்த்சாமி இஷா கோபிகரை பார்க்காமல் நனையும்

சின்ன சின்ன மழைத் துளிகள் சேர்த்துவைப்பேனோ......
மின்னல் ஒளியில் நூல் எடுத்து கோர்த்து வைப்போனோ...
சக்கரவாகமோ....


===============================================================
ஏ.ஆர்.ரஹ்மானின் கலக்கும் இசையில், ஸ்ரேயா கோஷல் பாடிய, மணிரத்னத்தின் குரு படத்தில், ஐஷ் குதியாட்டம் போட்டு நம்மையும் போட வைக்கும்

வெண்மேகம் முட்ட முட்ட
பொன்மின்னல் வெட்ட வெட்ட
பூவானம் பொத்துக்கொண்டதோ..


===================================================================

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails