Wednesday, September 17, 2014

வெங்கடாசல நிலையம்

”அப்பா வெங்கடாசல நிலையம் வைய்யேன்...” 

சின்னவள் கெஞ்சலாகக் கேட்கிறாள்.

”ஜேஸுதாஸ் வைக்கட்டா?”

“ஊஹும்.. சாக்ஸ்ப்பா.. கட்ரியா... கத்ரியா... ஒருத்தரச் சொல்லுவியே... ஒரு தடவை காஞ்சீபுரம் மடத்துல பார்த்தோமே.... கோபால்....ம்....”

“கத்ரி கோபால்நாத்...”

“ம்... அவரேதன்... நீ கூட முன்னாடி உன் செல்ஃபோன் ரிங் டோனா வச்சிருந்தியே... அதுப்பா.. ப்ளீஸ்,,,”

தட்டியவுடன் யூட்யூப் ஜீனி கொண்டுவந்தது.

கண்களை மூடிக் கேட்டேன். புரந்தரதாஸர் க்ருதி. சிந்துபைரவி. ஒவ்வொரு முறையும் “வெங்கடாசல நிலையம்...” வாசிக்கும் போதும் காற்றாய் பறந்து ஏழுமலையானைத் தரிசிக்கிறேன்.

மகர குண்டல...... புரந்தர விட்டல....
ஆஹா..ஆஹா.... கத்ரி கோபால்நாத்... ”

கோவிந்தா.. கோபாலா...”ன்னு கதற வைக்கிறார்... அவரது மூச்சினால் நம் செவி கொடுக்கும் முக்திக்கு வழி.

அடுத்தது “அசைந்தாடும் மயில் ஒன்று கண்டால்...” வைங்கோ....இது வாமபாகம். வச்சாச்சு... சுதாவின் குழையும் குரலில்...
.
இந்த ஏழேழு பிறவிக்கும்... இன்ப நிலை தந்தான்.... ஊத்துக்காடு வேங்கடகவி.. மன்னார்குடி ராஜகோபாலனைப் பார்த்துப் பாடியது....

என்றும் திகட்டாத வேணுகாணம்... ராதையிடம்...

ஒரு பதம் வைத்து.. மறு பதம் தூக்கி... நின்றாட... மயிலின் இறகாட... மகர குழையாட.. ம்..ம்... சேர்ந்து நம் மனமும் ஊஞ்சலாடுது....அனுபவியுங்கள்..

http://www.youtube.com/watch?v=O2ETR7DyKUQ
http://www.youtube.com/watch?v=bq_8f3Yxv0w

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails