Tuesday, August 31, 2010

கிருஷ்ண ஜெயந்தி

lord krishnaஅஷ்டமி ரோஹிணியில் அவதரித்த நம்ம கிருஷ்ணன் பர்த்டே ஸ்பெஷல். துவாபர யுகத்தில் பிறந்தவனுக்கு இது எத்தனையாவது பர்த்டே என்று கணக்கு போடலாம் என்று பார்த்தேன். நமக்கு ஒன்னும் ரெண்டும் எவ்வளவு என்று கேட்டாலே கண்ணு மண்ணு தெரியாது. அரண்டு போய்டுவோம். எஸ்.வி. சேகரின் வண்ணக்கோலங்களில் வரும் "ஒரு வேலையை ஒரு ஆள் முடிக்க அஞ்சு நாள்னா.... அதே வேலையை அஞ்சு பேர் செஞ்சா..... எத்தன...." என்று இழுக்கும் போதே நாம நாலு தெரு தள்ளி ஓடிக்கிட்டு இருப்போம். அதனால இந்த கணித ஆராய்ச்சியை தனியா ஒரு பதிவுல கண்டுக்கலாம். 

சாய்ராம்  கோபாலன் ரெண்டு மூனு நாள் முன்னாடி கிளப்பி விட்டது மனதிற்குள் சுவிட்ச் ஆஃப் ஆகாமல் ஓடிக்கொண்டே இருக்கிறது. நாளைக்கு ஜென்மாஷ்டமி. பல பேருக்கு கிருஷ்ணன் நினைவுக்கு வருகிறானோ இல்லையோ சீடை, முறுக்கு நியாபகத்தில் வாய் அசைபோட ஆரம்பித்துவிடும். பண்டிகைகள் கொண்டாடத்தானே. முன்பெல்லாம் வருடத்திற்கு ஓரிரு முறை வீடுகளில் செய்யும் பட்சணங்களை இன்று ஸ்வீட் ஸ்டால்களில் வாசலில் நிற்க வைத்து தினமும் கொடுக்கிறார்கள். நடு வாசலிலிருந்து பூஜை அறை வரை சின்ன கண்ணனுக்கு செல்லக் கால் வரைந்து, ஆலிலையில் சயனித்து கால் கட்டை விரல் கடிக்கும் கிருஷ்ணன் படத்திற்கு விதவிதமான புஷ்ப மாலைகள் அணிவித்து.....அது என்னவோ தெரியவில்லை அந்த மாயவனை, மாதவனை நினைத்தாலே மனம் சொல்லவொண்ணா ஒரு உவகை கொள்கிறது. அந்த லீலாவிநோதன் பக்தர்கள் தன் மீது கொண்ட பக்தியின் காரணமாக ஸ்ருங்கார ரஸத்தை அவர்களுக்கு அள்ளி அள்ளி கொடுத்தவன். மீரா, ஆண்டாள் போன்றோர் பாட்டாலே பக்தி செய்தார்கள். கண்ணடித்து காதலித்தார்கள். ஏதோ என்னால் முடிந்த ஒரு பாட்டுச்ச்சரம் கண்ணபரமாத்மாவின் திருவடியில். 


இது ஒரு கதம்பம். கர்நாடிக், திரை இசை, ஃபியூஷன் என்று கண்ணனைப் பற்றி வந்த எல்லாவற்றையும் கலந்து கட்டி தந்திருக்கிறேன். எம்.எஸ் அம்மா, ஜேசுன்னா, சுதா,  அருணா சாய்ராம், ஓ.எஸ். அருண் என்று பலரும் இங்கே வந்து இந்த கச்சேரி செய்கிறார்கள். அமைதியாக உட்கார்ந்து கண்ணை மூடி கேளுங்கள். கண்ணன் வருவான், கதை சொல்லுவான்.










இது லேட்டஸ்ட் பாஷன் கண்ணன். மார்னிங் ராகா - சுதாவோட வாய்ஸ். எக்சலேன்ட்.



எம்.எஸ். சுப்புலட்சுமி கண்கள் சொருகி பக்தி ரசத்துடன் பாடும் பொழுது, நம்மை அவனிடம் இழுத்து செல்கிறது..



பஜரே எதுனாதம்....



ஜகதோதாரண... .. ஒன்ஸ் அகையின் சுதா....



ஒ.எஸ். அருண் - பாரதியின் ஆசை முகம் மறந்து போச்சே.... என்ன ஒரு பாவம்... (BHAVAM).



இன்னும் நிறைய இருக்கிறது. நேரமின்மையால் தர இயலவில்லை. நித்யஸ்ரீ மகாதேவனின் மதுராஷ்டகம் யூடியுபில் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. மாயவனைப் போலவே ஒளிந்துகொண்டுவிட்டது போலும். என்ன கிருஷ்ணன் இறங்கி வந்துவிட்டாரா? என்ஜாய்!!!!

பட உதவி: beautifulwallpapers.blogspot.com

15 comments:

பத்மநாபன் said...

நீங்க சாய் அவர்களை உசுப்ப, சாய் உங்களை உசுப்ப, எப்படியோ எங்களுக்கு இசைச்சரத்தொடு அருமையான பதிவு கிடைத்தது.
எங்களயும் உசுப்பி விட்டுட்டிங்க..சீடை, முறுக்கு, புளிஅவல், தயிர்அவல், எள்ளுருண்டை...குடும்பங்கள் கூடி கிருஷ்ணனுக்கு சமர்ப்பணம் செய்யும் பிரார்த்தனை..
எல்லாம் நினவுக்கு வருகிறது..
நன்றி ஆர்.வி.எஸ்...சிறப்பு நன்றி பாடல்களுக்கு.

புவனேஸ்வரி ராமநாதன் said...

கதம்பம் நல்லாயிருக்கு. வாழ்த்துக்கள்.

RVS said...

பத்மநாபன்...நன்றிக்கோர் நன்றி.

அன்புடன் ஆர்.வி.எஸ்.

RVS said...

வாழ்த்துக்களுக்கு நன்றி புவனேஸ்வரி ராமநாதன்.

அன்புடன் ஆர்.வி.எஸ்.

Chitra said...

நல்ல பாடல் தொகுப்பு. :-)

RVS said...

நன்றி சித்ரா..

அன்புடன் ஆர்.வி.எஸ்.

பொன் மாலை பொழுது said...

நல்ல ஐடியா. சிறப்பாக இருக்கு.
கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள் :)))

RVS said...

நன்றி கக்கு..

அன்புடன் ஆர்.வி.எஸ்.

மோகன்ஜி said...

RVS,உங்கள் இசை மாலை கிறங்கடித்து விட்டது. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் கிருஷ்ணஜெயந்தி நல் வாழ்த்துக்கள்.

RVS said...

வாழ்த்துக்கு நன்றி மோகன்ஜி ... இது போல இன்னும் நிறைய தொகுப்புகள் போட ஆசை.. பார்க்கலாம்..

அன்புடன் ஆர்.வி.எஸ்.

எஸ்.கே said...

நன்றாக உள்ளது! வாழ்த்துக்கள்!

RVS said...

வாழ்த்துக்கு நன்றி எஸ்.கே.

அன்புடன் ஆர்.வி.எஸ்.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

முதல் பாடல்..அது என்ன ஆனந்த பைரவியா?

RVS said...

ஆமாம் சார். அப்படித்தான் போட்ருக்கு..:):):)

அன்புடன் ஆர்.வி.எஸ்.

தக்குடு said...

அதானே கிருஷ்ணருக்கு நீங்க போஸ்ட் போடலைனா அப்புறம் வேற யாரு போடுவா!! :))

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails