Monday, February 1, 2016

மழையாலஜி‬

1. பக்தஜனங்களுக்கு மெடிடேட் ரமணர்னா இஸ்கோல் பசங்களுக்கு மெட் ரமணர். முன்னவர் அருட்கடல். பின்னவர் மழைக்கடல்.

2. மசாலா டீயோடும் வெங்காய பக்கோடாவோடும் வாய்க்கும் கொட்டும் மழை சாஸ்வதமில்லை. இதை அறியாமல் புலன் இன்பம் கொடுக்கும் டீ-பக்கோடாவில் மதி மயங்கியவன் அஞ்ஞானி!

3. ”கண்டவர் விண்டிலர்... விண்டவர் கண்டிலர்...” என்பது புயல்மழைக் காலங்களில் சென்னை சாலைகளின் ஆழம் அகலம் தெரிந்த வண்டியோட்டிக்கு செல்லுபடியாகாது.

4. நீரடிச்சு நீர் விலகாது என்பதின் மறைபொருள் ”மரத்தில் மறைந்தது மாமத யானை...மரத்தை மறைத்தது மாமதயானை” போல என்கிற திருமூலர்த்தனமான சிந்தனை எழுந்தால் நீயும் என்னைப் போல் சென்னைவாசியே!

5. ”வாழ்க்கையெனும் ஓடம் வழங்குகின்ற பாடம்....” என்று கவுந்தி அடிகள் கேபி.சுந்தராம்பாள் ரூபத்தில் தடியுடன் திரையில் தோன்றிப் பாடியது இக்கால சென்னையர்கள் நெகிழித் தாள் உபயோகித்து ”புசல் மயல காவாலாம் அட்ச்சுக்கிச்சுபா... கவ்ருமெண்டு கண்டுக்கமாட்டேங்கிறாங்கப்பா...”ன்னு புலம்பாமல் ”தவறிழைத்தால் நடு ரோட்டில் ஓடத்தில்தான் போக வேண்டும்” என்று பாடம் புகட்டியப் பாடல் என்று தன்னைத்தானே தேற்றிக்கொள்பவன் புத்திசாலி!

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails