Sunday, October 22, 2017

பரசுராமேஸ்வரர்


Pandaயில்லாத பந்தாயில்லாத புபனேஷ்வர் பரசுராமேஸ்வரர். ஏழாம் நூற்றாண்டுக் கோயில். இங்கிருந்து ஐந்து நிமிட நடையில் அருள்பாலிக்கும் லிங்கராஜா Pandaக்களின் முரட்டு அரணில் இருக்கிறார். லிங்கராஜாவுக்கும் பரசுராமேஸ்வரருக்கும் மத்தியில் இருப்பவர் அனந்த வாசுதேவர். தெருவுக்கு ஒரு கோயில் தென்படுகிறது. பூஜை செய்யும் பண்டாக்களின் பிடியில் இருக்கும் கோயிலில் வழிபடுவதை விட பரசுராமேஸ்வர் போல ஏகாந்தியிடம் மனஸ் பச்சென்று ஒட்டிக்கொள்கிறது. யாருமில்லாத திறந்த சன்னிதியில் பரசுராமேஸ்வரரை "நமஸ்தே அஸ்து பகவன்..." ஸ்லோகம் சொல்லி நமஸ்கரித்த போது மேனி சிலிர்த்தது. அரன் அவ்விடத்தில் உறைகிறார்.
ஓம் நமோ பகவதே ருத்ராய:

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails