Tuesday, July 29, 2014

திருவாசகத் தேன்

விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய்,
விளங்கு ஒளியாய்,
எண் இறந்த எல்லை இலாதானே
நின் பெரும்சீர் பொல்லா வினையேன்
புகழுமாறு ஒன்று அறியேன்

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லா நின்ற இத் தாவர சங்கமத்துள்

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்

அவனருளாலே அவன் தாள் வணங்கி நாம் கேட்கும்போதோ... வாசிக்கும் போதோ.... திருவாசகத்துக்கு உருகார்... ஒரு வாசகத்துக்கும் உருகார்...

மூவுலகிற்கும் சிவனுக்கு அடிமுடி காணா விஸ்வரூப பேனர் வைப்பது போல திருவாசகத்தில் உருகும் மாணிக்கவாசகரின் சில பன்ச்கள் கீழே...

தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே
மாசற்ற சோதியே
மலர்ந்த மலர்ச்சுடரே
தேனார் அமுதே
பெருங்கருணைப் பேராறே (ப்பா... கருணை கசிந்தாலே நனைஞ்சிடுவோம்... இது பெருங்கருணை பேராறு... எப்படியிருக்கும்!!!.....)
ஆரா அமுதே
அளவிலாப் பெம்மானே
ஒளிக்கும் ஒளியானே
என் ஆருயிறாய் நின்றானே
சோதியனே
தோன்றாப் பெருமையனே
நோக்கரிய நோக்கே
நுணுக்கரிய நுண் உணர்வே
காவலனே
காண்பரிய பேர் ஒளியே
தில்லை உள் கூத்தனே
தென்பாண்டி நாட்டானே

தருமபுரம் சுவாமிநாதனையே கேட்ட காதுகளுக்கு ஓதுவார் சத்குருவின் சிவபுராணம் அடங்கிய ”திருஐந்தெழுத்து” ஆடியோ சிடி தெவிட்டாத தெள்ளமுது. கேட்கக் கேட்க மனசை மத்தாய்க் கடையும் கம்பீரமான குரல். வரிக்கு வரி உருக வைக்கும் மாணிக்கவாசகர். ”வேகம் கெடுத்தாண்ட..”வில் வரும் வேகத்தில் சத்குரு கொடுக்கும் ஆக்ஸிலேட்டர் நம்மைக் கைலாயத்திற்கு அழைத்துச்செல்லும். யாருமற்ற நெடுவழிச் சாலையில் பயணிக்கும் போது இதை செவிமடுத்தால் அண்டப் பெருவெளியில் ஆனந்தமாக மிதந்து சிவஜோதியைத் தரிசிக்கலாம்.

”விடையவன்... படையவன்... சடையவன்.. தோடுடையவன்..” என்று சம்பந்தர் பாடிய ஒற்றியூர் சிவன் மாணிக்கத் தியாகேசர்-வடிவுடையம்மன் ஜோடியைப் பற்றி எழுதணும்.

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails