Saturday, May 9, 2015

மானஸா மஹாபாரதம்


போன மாசத்தில் ஒரு நாள் ஆஃபீஸிலிருந்து வீட்டிற்குள் வந்ததும் வராததுமாக தரதரவென்று மாடிக்கு இழுத்துக்கொண்டு ஓடினாள் சின்னவள். 

“ஏன்?”

“வாயேன்..”

“என்னடி.. எதாவது விஷமம் பண்ணி வச்சுருக்கியா?”

“வான்னா.. வா.... மேல பேசாதே...”

மகளின் ஆணைக்கும் அதிகாரத்திற்கும் கட்டுப்படுதலில் ஒரு அலாதி சுகம் இருக்கிறது. சிரித்துக்கொண்டே கப்சிப்பென்று பின் தொடர்ந்தேன்.

”இந்த க்ஷணமே வாங்கிக்கொடுத்தால்தான் ஆச்சு.. ”என்று ஆறு மாசத்துக்கு முன் ஒத்தைக்காலில் நின்று அடம்பிடித்து வாங்கிய வொயிட் போர்டில் ஒரு ஹயரார்கி சார்ட்.

“என்னடி இது?”

“மஹாபாரதா.. பூர்ண வித்யா எக்ஸாம்ப்பா... அதான் எழுதி பார்த்தேன்..”

சின்னச் சின்ன கேள்விகள் கேட்டேன். பதில்களை திரிக்காமல் அப்படியே தருகிறேன்.

“பாண்டவாஸுக்கும் கௌரவாஸுக்கும் அப்பா மாதிரி ஹஸ்தினாபுரத்தை போட்ருக்கியே”

“அவா ரெண்டுபேருக்கும் அதான் ஊரு... அங்கேதான் வளர்ந்தா...”

”பாண்டவாஸுக்கு தே காட் மேரீட். கௌரவாஸுக்கு தே டிட்டிண்ட் கெட் மேரீடா?”

“ஆமா.. எங்க பாடத்துல துரியோதனனுக்கெல்லாம் கல்யாணம் ஆகலையே...”

”அதென்ன துஸ்ச்சலையை மட்டும் எழுதியிருக்கே... பாக்கி பேரெல்லாம்..”

“நூறு அண்ணாக்களுக்கு ஒரே ஒரு தங்கச்சிப்பா.... அதான்...” முகத்தில் ’ப்ச்”சென்று பாவம் வடியச் சொன்னாள்.

”எனக்கு இது எல்லாத்துலையும் ரொம்ப புடிச்ச லைன் என்ன தெரியுமா?”

“ம்.. சொல்லுப்பா...”

“was not born in Kunthi's stomach, was born by praying to GOD"

"ப்பா... கிண்டல் பண்றியா?”

“ச்சே...ச்சே... DRAUPADI IS ALL 5'S WIFE... அது கூட சூப்பர்..”

“வாணாம்... அழிச்சுடுவேன்..”

விடுவிடுவென்று உள்ளே ஓடி கோபமாக டஸ்டர் எடுத்துவந்து அழிக்கும் முன் சட்டென்று க்ளிக்கினேன். இதில் கோடிட்டிருக்கும் சங்கதிகளை விட எனக்கு ரொம்பவும் பிடித்தது அவளுடைய அப்ரோச். பரீட்சைக்கு படிக்கும்போது தனக்கு ஏற்றார்போல அதை எழுதிவைத்துக்கொண்டது. சின்ன வயசில் இப்படியெல்லாம் டெக்னிக்காகப் படிக்கத்தெரியாமல் போய் “அக்பருக்குப் பாபர் சித்தப்பா......” என்று சொல்லி கெக்கெக்கே வாங்கியதுதான் மிச்சம்.

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails