Saturday, May 9, 2015

மானஸ இசை

”பூப்பூக்கும் ஓசை.... இது நல்லாயிருக்கா..”

“அது போன வருஷம் பாடியாச்சாம்.....”

“மேகம் கருக்குது....மின்னல் அடிக்குது... சக்க்சச்கக்சா...”

“இது வேற க்ரூப் பாடறாங்கப்பா...”

“நன்னாரே...நன்னாரே.....”

“லவ் சாங்கெல்லாம் கூடாது..”

“இது லவ் சாங்கில்லை... குருல ஐஸ்வர்யா ராய்..... மழையில.. “

“ஓ.. அதுவா.... என் ஃப்ரெண்டுக்குப் பிடிக்காது...சொன்னா அழுதுருவாப்பா... ”

“ஐஸ்வர்யா ராயைப் பிடிக்காதா? பாட்டு பிடிக்காதா?”

“அப்பா.. மொக்கை போடாதேப்பா.. உருப்படியா ஒரு பாட்டு சொல்லு...வர்ற கார்னிவலுக்கு பாடணும்..”

“எனக்குத் தெரிஞ்சது இவ்ளோதான்.. நீயே கண்டுபிடிச்சு பாடு... பஸ் வந்தாச்சு... ”
எனக்கும் சின்னவளுக்கும் நேற்று காலையில் நடந்த உரையாடல்.

மீண்டும் நேற்று இரவு.

“அப்பா.. பாட்டு செலக்ட் பண்ணியாச்சு...”

“என்ன பாட்டு?”

”வா....ன்.. மேகம்.. பூப்பூவாய் தூவும்.....”

“புன்னகை மன்னன்...”

“ஆமாம்.. மிஸ்ஸே செலகட் பண்ணிக் குடுத்தாங்க...யூட்யூப்ல போடு.. ட்யூன் கேட்டுக்கறேன்...”

இன்று காலை.

”அப்பா.. மறக்காம ஹாண்ட்ஸ் ஃப்ரீயைக் கையில எடுத்துக்கோ....”

“ஏன்?”

“ஸ்கூல் பஸ் வர்றதுக்குள்ள ஒரு தடவை ரெண்டு தடவை கேட்கணும்... மெட்டு மறக்கக்கூடாது.... “

கையைச் சொடுக்கிக்கொண்டே ஹம்மிங் செய்தாள் சின்னவள். பஜனைப் பாடலோ சினிமாப் பாடலோ... பாடுவதில் டெடிக்கேஷன் இருக்கிறது. அவளது பிஞ்சு விரல்கள் சொடுக்குவதும் கனிவான ஹம்மிங்கும் என்னைத் தரதரவென்று சொர்க்கத்திற்கு இழுத்துச் செல்கிறது.

அடிச் செல்லமே!

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails